இரத்தினபுரி காவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமற் போயிருந்த இளைஞர் ஒருவர் அட்டகலன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் காவத்தையில் ஐந்து தினங்களுக்கு முன்பு காணாமற் போன 29வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கொடகாவெல கலகிட்டிய பிரதேசவாசியான இளைஞருடையது என பிரதேசவாசிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலீஸ் பிரிவின் புதிய ஊடகப்பேச்சாளராக பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியை வகித்துவந்த ஐ.எம். கருணாரத்ன பொலீஸ் துறையின் புதிய நியமனங்களை மேற்கொள்ளும் பிரிவின் பணிப்பாளராக [...]
















































