தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன்.. புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள் தான். –கருணாஅம்மான்


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆளும் கட்சிக்குப் பின்னால் வந்தால் மட்டுமே அபிவிருத்தி என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரிந்தவர் போட்டியிடுகிறார்இ உறவினர் போட்டியிடுகிறார் என வாக்களித்தால்இ தமிழ் பிரதிநிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. ஜனாதிபதி இன்னும் ஏழு வருடங்கள் பதவியில் இருக்கப் போகிறார். இதனை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதில் நாம் மீண்டும் தவறிழைத்துவிடக் கூடாது. என்கிறார் அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன். தமிழ் மக்கள் புலிகள் மீது பற்று வைத்திருந்தார்கள் எனக் கருதுகின்றீர்களா? ஆரம்ப கால கட்டத்தில் புலிகள் மீது தமிழ் மக்கள் பற்று வைத்திருந்தார்கள். இதன் காரணமாகத் தான் இந்த ஆதங்கம் இருக்கிறது. புலிகள் அனைத்து தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டார்கள் என்பது இறுதியில் தான் அவர்களுக்குப் புரிந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்ததால்தான் தமிழ் மக்கள் இன்று நிம்மதியாக வாழ்கிறார்கள். சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவில்லை. உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு இது உணர்த்தப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் உதவி செய்தாலே தமிழர் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை செய்திருக்கலாம். அவர்கள் வெளிநாடுகளில் வீடு வாசல் என செட்டில் ஆகிவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் குரல் கொடுப்பதால் அவர்களுக்கு பாதிப்புகள் வரப்போவதில்லை. இங்குள்ள மக்களுக்குத்தான் பாதிப்புகள் வரும். அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த தமிழீழம் அமைக்கப் போவதாக கூறிக்கொணடுள்ளனர். இவ்வாறான அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள்தான். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தாக்கமும் இதற்கு ஒரு காரணம். தமிழர் பகுதிகளில் சிறந்த ஒரு அபிவிருத்தியை வழங்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன். நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கும் போது தமிழ் மக்கள் எவ்வளவு அச்சத்துடன் இருந்தனர். ஒருவித அச்ச உணர்வுடன் தான் இருந்தனர். எங்கு பார்த்தாலும் சோதனைச்சாவடிகள் சோதனைகள் என பலவிதமான கெடுபிடிகள் செயற்பாடுகள் இருந்தன. இவை தொடர்பாக தொடர்ந்தும் உரியவர்களுடன் பேசிப்பேசி அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. மக்கள் அச்சமின்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக கிழக்கில் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் பேணப்படுகின்றன. கிழக்கில் சட்டவிரோத குடியேற்றங்கள் நடை பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே? மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறான ஒரு நிகழ்வு கிடையாது காணி அதிகாரம் முழுமையாக ஒவ்வொரு பிரதேச செயலாளர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக தமது காணிகளை தமிழ்இ முஸ்லிம் மக்களிடம் விற்றுவிட்டுச் சென்ற சிலர் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் மீண்டும் வந்து தமது காணிகளை பலவந்தமாகக் கேட்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மைதானா? இவ்வாறான சில பிரச்சினைகள் வந்தனதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் அவற்றை தலையிட்டு தீர்த்து வைத்திருக்கிறேன். தமது காணிதான் என்று கூறுவதற்கான உறுதி கையிலிருக்கும் போது எவராலும் எதனையும் செய்துவிட முடியாது. கடைசிவரையும் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. அண்மையில் வாகரையில் இவ்வாறான ஒரு பிரச்சினை நடந்தது. அதனை சுமுகமாகத் தீர்த்து வைத்தேன். சொந்த இடங்களுக்கு மக்கள் திரும்பிவரலாம். அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. உதாரணமாக அண்மையில் ஏறாவூரில் பெளத்த விகாரையை நானே திறந்து வைத்தேன். ஏறாவூரிலுள்ள பெளத்த விகாரை இப்போது முளைத்ததல்ல. நாம் சிறுவயதாக இருந்த காலத்திலிருந்தே பூர்வீகமாக அங்கு இந்த பெளத்த விகாரை இருந்தது. இந்த நிகழ்வில் பெருந்தொகையான தமிழ்இ முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டார்கள். அது சந்தோசமான நிகழ்வாக இருந்தது. அதனை எவரும் தவறாகப் பார்க்கக் கூடாது. இதற்குத் தான் நான் தமிழ்- பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் எனக் கூறுகிறேன். குறிப்பாக ஆளுங்கட்சியில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். குறிப்பாக வடக்கில் மக்கள் ஆளும் தரப்பினரை ஆதரிக்க வேண்டும். நிவாரணக் கிராமங்களிலுள்ள எஞ்சியுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது பற்றி உங்களது பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது? வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை நேரடியாக சென்று பார்த்துவிட்டு வந்ததன் பின்னர் அவர்களை துரிதகதியில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற யோசனையை நானே முதலில் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். இந்த மக்களை துரிதமாக குடியமர்த்தினால் தான் புலிகள் யார்? அரசாங்கம் யார்? என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதையும் எடுத்துக் கூறினேன். ஜனாதிபதியும் அதற்கு உடன்பட்டது மட்டுமல்ல துரித கதியில் மிதிவெடிகளைஇ நிலக்கண்ணி வெடிகளை அகற்ற நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார். இப்போது அந்தமக்களைத் தொடர்ந்தும் முகாமில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று எவருக்குமே கிடையாது. மீள்குடியேற்றம் துரிதமாக நடபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இடம்பெயர்ந்து வரும் மக்களை முகாமுக்குள்ளேயே தடுத்துவைக்க வேண்டும் என்பதில் அன்று உறுதியாக இருந்தவர் சரத் பொன்சேகாதான். தமிழ் மக்களை முகாமைவிட்டு வெளியேற விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.இவ்வாறான ஒருவருக்குத்தான் தமிழ் மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை. வேடிக்கையான விடயம். இந்த உண்மை தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம் இல்லையா? இதற்கு முன்னரும் தேர்தல் பிரசாரங்களின் போது நான் தெளிவு படுத்தியிருக்கிறேன். சரத் பொன்சேகாவின் கோட்பாடு எப்படி இருந்ததென்றால் 30 வருடங்கள் விடுதலைப் புலிகளின் பிடிக்குள் இருந்த மக்களை குறைந்தது 3 வருடங்களாவது முகாம்களில் தடுத்துவைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஜனாதிபதி “இல்லை அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்இ மீளக் குடியமர்த்த வேண்டும்” என்றார். முப்படைகளின் தளபதிகள்இ ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷஇ நான் உட்பட கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இப்படித் தெரிவித்தார். வாகரை பள்ளிக்கூடம் திறந்து வைத்த போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றது. ஜனாதிபதி மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த வேண்டும் எனச் சொல்லும் போது அவரது வார்த்தையை மீறி சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். எனினும் ஜனாதிபதி கருணா சொல்வது சரி அந்த மக்களை தடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுவிப்போம் என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் அவர்களை வெளியே விடமுடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார். இருப்பினும் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் வருவது வரட்டும்இ மக்களை வெளியே விடுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். அவரது அந்த முடிவுதான் மக்களை சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியமர் த்துவதற்கு வாய்ப்பாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களை மீளக் குடிமர்த்தும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.சின்னச் சின்னக் கட்சிகள்இ துவேசமாக பேசும் கட்சிகள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வெளி நாடுகளின் தலையீடுகள் எல்லாம் உள்ளன. இங்கு குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில வெளிநாடுகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முயற்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. முன்னரும் இதனைத்தான் செய்தன. வெளிநாடுகளின் சூழ்ச்சிகளுக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது. நீங்கள் சொல்வது போன்று பிராந்தியக் கட்சிகள் இல்லாமல் போனால் சிறுபான்மையினருக்கு அது ஒரு ஆபத்தாக அமைந்து விடாதா? இல்லை. பிராந்திய கட்சிகள் இருப்பதால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது என்பது பற்றியும் பார்க்கத்தானே வேண்டும். எதுவும் இல்லையே. நாம் முதலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை ஆளும் தரப்பில் அதிகரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். இப்போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இ.தொ.கா. போன்ற கட்சிகள் உள்ளனவே. இவை நன்றாக தமது பகுதிகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவே? மலையகக் கட்சிகளை இவர்களுடன் ஒப்பிடக்கூடாது அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அந்த மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள். தனித்து நின்று தேர்தலில் நின்றாலும் ஆளுந்தரப்புடன் இணைந்து செயற்படுகிறார்கள். இங்கு அவ்வாறில்லையேஇ இனத்துவேசத்தை தூண்டுபவையாகத்தானே உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால் எப்போதும் எதிராக இருந்து கொண்டு துவேசத்தைக் கிளப்பி கிளப்பி மக்களை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்களே யொழிய வேறு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. இவற்றை விடுத்து வெற்றியடைந்த பின்னர் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் வளர்சசிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுமாகஇருந்தால் அதனை முதல் முதல் வரவேற்கும் நபர் நானாகத்தான் இருப்பேன். ஆனால் இவர்கள் அப்படிச் செய்கிறார்கள் இல்லையே. முஸ்லிம்களும் இன்று வளர்ச்சி யடைந்துள்ளார்கள். எப்படி? தனித்தனிக்கட்சியாக போட்டியிட்டாலும்இ அரசுடன் இணைந்து கிடைக்கும் வளங்களைஇ அபிவிருத்திகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர். வெறுமனே கிழக்கை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. வடக்குப் பகுதியிலும் உங்களது பங்களிப்பு தேவை. இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? துவேச மனப்பான்மையுடன் செயற்படும் பிராந்திய அடிப்படையிலான சிறு சிறு கட்சிகளை முதலில் இல்லாமல் செய்ய வேண்டும். மக்களால் இந்தக் கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும். மக்கள் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும். ஈடுபடுவதற்கான வாய்ப்பை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். இன்று சிங்கள மக்களின் பிரதேசங்களை விட வடக்கு கிழக்கில் தான் ஜனநாயகம் நன்றாக செயற்படுகிறது. வடக்குஇ கிழக்கில்தான் அதிகளவு கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனை கண்கூடாக காணலாம். இது ஜனநாயகத்தின் வெளிப்பாடு. முன்னாள் போராளிகள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களது விடுதலை குறித்து ஏதாவது பேசியிருக்கிறீர்களா? இவர்கள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் தொழிற் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக நானும் பேசியிருக்கிறேன். முன்னாள் போராளிகளின் விடுதலையாகட்டும்இ முகாம்களிலுள்ள மக்களாகட்டும். இவர்களது வெளியேற்றத்துக்கு இன்னமும் தடையாக இருப்பது வெளிநாட்டி லுள்ளவர்களின் செயற்பாடுகள்தான். விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என உருத்திரக்குமாரன் வெளிநாட்டில் தெரிவிக்கிறார். இங்குள்ள போராளிகளின் விடுதலை குறித்து நாம் சென்று பேசும் போது அதிகாரிகள் மட்டத்தில் இதற்கு எதிர்ப்பு வருகிறது. கண்மூடித்தனமாக இவர்களை விடுதலை செய்து விட்டால் இவர்கள் மீண்டும் சேர்ந்துவிட மாட்டார்களா? என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இவர்கள் மீண்டும் சேர மாட்டார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏனெனில் தமிழ் இளைஞர்கள் புலிகளால் நொந்து நூலாகிப் போய் இருக்கிறார்கள். எனினும் எமக்கு இவர்களது விடுதலை குறித்து வாதிட முடியாமல் இருப்பதற்கும் காரணம் எமது தமிழன்தானே! இதேபோன்று பூஸா மற்றும் வெலிக்கடை சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா? இவர்களின் விடுதலை தொடர்பாகவும் நான் நீதியமைச்சருடன் பேசியிருந்தேன். உண்ணாவிரதம் இருந்த போதும் அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் பேசி நிறைய வேலைத்திட்டங்களை செய்தேன்.இனி தேர்தலுக்குப் பின்னர்தான் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கலாம். ஏனெனில் அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவரை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அதிகளவு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவில்லை. குறிப்பாக குறைந்தளவு வாக்கையே அளித்தனர். இதனையிட்டு ஜனாதிபதி தமிழ் மக்களை அவர் வெறுக்கிறாரா? அல்லது ஒதுக்குகிறாரா? நிச்சயமாக இல்லை. அவர் அத்தனை குறையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல் லாமல் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லஇ வட மாகாணத்தில் 44இ000 மக்கள் தனக்கு வாக்களித்திருக்கி றார்கள் என பெருமையுடன் பலரிடம் கூறியிருக்கிறார். இது அவரு க்குப் பெரிய சந்தோஷமான விடயம். விடுவிக்கப்பட்ட பின்னர் முதல் முதலாக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் இந்தளவு கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் நடைபெறும் தேர்தலில் இதனைவிடக் கூடுதலான வாக்குகள் கிடைக்கும். மக்கள் இப்போது நான்கு உணர்ந்து கொண்டுள்ளனர். தமிழ் மக்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடக் கூடாது. இம்முறை தமிழ் மக்களை காப்பாற்றியவர்கள் சிங்களவர்கள்தான். சரத் பொன்சேகா வந்திருந்தால் சரியான கெடுபிடிகள் நடந்திருக்கும். சரத் பொன்சேகாவால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் எந்த கெடுபிடிகளையும் தடுத்திருக்க முடியாது. சிங்கள மக்கள் ஜனாதி பதிக்கு வாக்களித்ததன் காரணமா கத்தான் தமிழ் மக்கள் காப்பாற்றப்ப ட்டிருக்கிறார்கள். அதாவது சரத் பொன் சேகாவின் சுயரூபம் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது என்கிறீர்களா? ஆமாம். இப்போது புரிந்து கொண்டுவிட்டார்கள். தேர்தலில் போட்டியிடும் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவரே என ரணில் விக்ரம சிங்கவை அழைத்த பொன்சேகா தேர்தலில் வெல்வோம் என்ற ஒரு இறுமாப்பில் மிஸ்டர் ரணில் என அழைத்தாராம். சிங்கள ஊடகங்கள் இதனை வெளியிட்டிருந்தன. சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் ஜே. வி. பியுடன் தான் சேர்ந்திருப்பார். ஐ.தே.கவை ஒதுக்கிவிட்டிருப்பார். இது தமிழ்மக்கள் மீது கடும்நெருக்குதல் களையே கொண்டுவந்திருக்கும். இதனை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள தவறி விட்டார்கள். ஆனால் ஜனாதிபதி தமிழ் மக்களுடன்தான் இருக்கிறார். தமிழ் மக்களுக்கு ஏதாவதென்றால் கேட்பதற்கு ஜனாதிபதியுடன் நானும் இருக்கிறேன். தமிழ் மக்கள் செய்ய வேண்டியது வாக்களிப்பது தான்இ வாக்களித்துக் காட்ட வேண்டும். வாதிடும் உரிமையை மக்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அந்த உரிமையை வழங்காமல் ஜனாதிபதியிடம் அதைத் தாருங்கள்இ இதைத் தாருங்கள் எனக் கேட்க முடியாது. தமிழ் மக்கள் எப்போதும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். எதிரணி அரசியலை விட்டு இணக்கப்பாட்டு அரசியல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். (தினகரன் வாரமஞ்சரிக்காக.. உரையாடியவர்:-கே. அசோக்குமார்)  Read More »

தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன்.. புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள் தான்.  –கருணாஅம்மான்

எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம்.. பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் -புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன்


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

கேள்வி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டுமென்ற நோக்கில் நீங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது என்பதனை நீங்கள் எற்றுக் கொள்வீர்கள். உங்களது முயற்சி தோல்வியடையக் காரணமென்ன? பதில்: யுத்தம் முடிவடைந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் முடிந்தனவற்றைச் செய்ய வேண:;டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழக்; கட்சிகளையும் ஒரு கூட்டமைப்பாக அல்லாவிடினும் ஓர் அணியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில்தான் எமது கட்சி இறங்கியது. இவ்வாறானதொரு முயற்சியை எமது கட்சி மட்டுமல்ல ஏனைய சில தமிழ்க் கட்சிகளும் மேற்கொண்டுதான் இருந்தன. இந்த முன்னெடுப்பு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே யாழ்., வவுனியா உள்ளுராட்சித் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் ஆகியன இடம்பெற்றன. இதன் காரணமாக எமது முன்னெடுப்பில் தொய்வு நிலையேற்பட்டது. கேள்வி: நீங்கள் குறிப்பிடும் தேர்தல்கள் நடைபெற்ற பின்னரும்   எதிர்காலத்தில்  ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் தொடர்ந்தும் நீங்கள் ஏனைய கட்சிகளுடன் பேசினீர்கள். இந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் நலன் கருதியா மேற்கொள்ளப்பட்டது.? பதில்: இல்லை.. கேள்வி: அவ்வாறெனின்… பதில்: தேர்தல் கூட்டுச் சம்பந்தமாகவே பல கட்சிகளாலும் முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவோ அல்லது அந்தத் தீர்வுக்கான திட்டங்கள் தொடர்பிலோ நாங்கள் பேசவில்லை. இது ஒரு தேர்தல் கூட்டுக்கான பேச்சுவார்த்தையாக மட்டுமே அமைந்திருந்தது. இவ்வாறான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துக் கொண்டிருந்தபோது பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. வேட்பாளர் தெரிவு, வேட்பாளர்களை நியமித்தல், மாவட்டங்களை விட்டுக் கொடுத்தல் போன்ற பல பிரச்சினைகள் எமது பேச்சுவார்த்தையின் போது எழுந்தன. இதன் காரணமாக இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. எது எப்படியிருப்பினும் யுத்தம் முடிந்து நடைபெறும் இத்தேர்தலானது ஜனநாயகத்தை மிளிர வைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் தேர்தலாகவே நான் பார்க்கிறேன். அது மட்டுமல்ல.. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையிலும் இருப்பதனைப் பார்க்கிலும் மக்கள் யாரைச் சரியாகத் தெரிவு செய்து கொள்ளப் போகிறார்களென்பதனை இந்தத் தேர்தலில் நாம் அறிந்து கொள்ள கூடியதாகவிருக்கும். சில தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். ஆனாலும் இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியாக இடம்பெறப்போகும் தேர்தலாகவே நான் கருதுகிறேன். அதுவே எமது கட்சியின் எதிர்பர்ப்புமாகும். அவ்வாறு இந்தத் தேர்தல் இடம்பெற்று தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டால் அதன் ஊடாகக் கூட நாம் பலவற்றைச் சாதித்துக் கொள்ள முடியும். ஆகக் குறைந்தது தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவேனும் நாம் ஐக்கியப்பட வேண்டும். அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவை நாம் சந்தித்த போது அவர் ஒரு கருத்தினை எம்மிடம் வலியுறுத்தியிருந்;தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறான தீர்வுத் திட்டத்தை சமர்ப்பித்தால் அவற்றினை எப்படி எங்களால் இலங்கை அரசிடம் அமுல்படுத்துமாறு கோரமுடியும்? நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னராவது நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஒரு நியாயமான, பொதுவான தீர்வை நீங்கள் முன்வைத்தால் அதனை அமுல்படுத்துவதற்கு நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாமெனத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மட்டுமே அதனைச் சாத்தியமாக்கலாமென்பதனையே அவரது வேண்டுகோள் எமக்குத் தெரிவித்திருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு நாம் தேர்தலின் பின்னரும் முயற்சிகளை எடுக்கவுள்ளோம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலாவது நாம் ஐக்கியப்படவேண்டும். கேள்வி: வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கோ ஆலோசனைகளுக்கோ நாம் இடமளிக்கப் போவதில்லையென்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் இந்தியா எப்படி அழுத்தம் கொடுத்தும் பயன் கிடைக்கப் போவதில்லையே? பதில்: தேர்தல் காலங்களில் சில பேரினவாத சிங்கள அரசியல் கட்சிகள் கூறும் விடயங்களை விசேடமாகத் தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காகச் சொல்லப்படும் கதைகளை நாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வர்.  கேள்வி: கட்சிள் மாத்திரமல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறு தெரிவித்திருந்தாரே? பதில்: இந்தியாவினது அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர் செயற்பட மறுக்கலாம். ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது மக்களுக்கான தீர்வு தொடர்பில் அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதியால் எப்படி மறுக்க முடியும்? கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் முதலாவது நகர்வாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வையா நீங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவீர்கள்? ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது கையை நீட்டியதும் கிடைக்கப் போவதில்லையே.. தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்க முன்னுரிமை வழங்கி அவற்றினைத் தீர்த்து வைக்கும் நகர்வை முதலில் மேற்கொள்ளலாமல்லவா? பதில்: ஆமாம்.. இதுவே இன்றைய முதல் தேவை.. இதிலும் நாம் ஐக்கியப்பட்டேயாக வேண்டும். அபிவிருத்தி வேலைகள், அகதிகளாகவுள்ள மக்களை மீள்குடியேற்றுதல், அவ்வாறு குறியேற்றப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும்  தாங்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடியதான வாழ்க்கை வசதி, புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அல்லது பலாத்காரமாகச் சேர்க்கபட்ட சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை விடுவித்தல், போன்றனவற்றினை அடிப்படையாகக் கொண்டே எமது முதல் முழு நகர்வினையும் எடுக்க வேண்டும். இதன் பின்னரே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நகர்வை முன்னெடுக்க வேண்டும்.. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமானதல்ல என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கேள்வி: எவ்வளவோ அவலங்களையும் அழிவுகளையும் முகங்கொண்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் பிரச்சினைக்கான தீர்வானது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டதாகத்தானே இருக்கப் போகிறது?  பதில்: 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான போதே இதனைத் தெரிவித்திருந்தோம். ஆனால் எமது மக்களின் பிரச்சினைக்கான தீர்வு எங்கோ ஒரு மூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதில் நாம் தீவிரமாக இருந்தோம். இதனடிப்படையில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை  ஓர் ஆரம்பமாகப் பார்க்கிறோம் அத்துடன் இந்த விடயம் இந்தியாவின் நேரடிக் கண்காணிப்பிலுள்ளது அத்துடன் பதின்மூன்றாவது அரசியலமைப்பில் மேலும் மாற்றங்கள் செய்யபட்டு முழுமையான அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசுக்கு வேண்டும். கேள்வி: இப்போது இருக்கும் அதிகாரங்களே சரியாக வழங்கப்படாத நிலையில்  மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசுக்குக் கிடைத்தால் 13 ஆவது அரசியலமைப்பில் மேலும் திருத்தங்களை அரசாங்கம் செய்யுமென்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?  பதில்: நிச்சயமாக இல்லை.. அப்படி இந்த அரசுக்கு மூன்றிலிருந்து அதிகப் பெரும்பான்மை கிடைத்தால் கூட அதிகாரப் பரவலாக்கலைத் தருவார்களென்று நான் நம்பவில்லை. அவர்கள் அதிகாரப் பரவலாக்கத்துக்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கேட்கவில்லை. இன்றையத் தேர்தல் முறையை மாற்றுவதற்காகத்தான் அதனைக் கேட்கிறார்கள். இன்றையத் தேர்தல்முறையின் கீழ் தாம் சிறுபான்மைக் கட்சியின் ஆதரவிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளதால் அதிலிருந்து மீட்சி பெற்றுக் கொள்வதற்காவே இந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை கோரப்படுகிறது.  கேள்வி: உங்கள் கட்சி எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு எத்தகைய தன்மை கொண்டதாகவிருக்க வேண்டும்? பதில்: எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம் ஒன்று தேவை. இது அனைத்து விடயங்களுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.  கேள்வி: கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலையைப் பாருங்கள்.. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இங்கும் அதே நிலைதானே உருவாகும்? பதில்: தமிழ்மக்களுக்கு மாகாண சபை ஊடான அனைத்து அதிகாரங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும். இந்த விடயத்தில் நேர்மையாக அரசு செயற்படவேண்டும். ஆளுநரை வைத்துக் கொண்டு கொடுக்கப்பட்ட அதிகாரங்களைக் கூடக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்தால் அவர்கள் மிகப் பெரிய தவறைச் செய்து கொண்டிருக்கிறார்களென்று தான் கூறமுடியும். தமிழ் மக்கள் இன்று களைப்படைந்த நிலையில் இருக்கின்றார்களென்பதே உண்மை. மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு அவர்கள் போகமாட்டர்களென்பதும் உண்மை. ஆனால்  அந்த மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் மறுக்கபட்டு, தமிழ் பகுதிகளின் அபிவிருத்திகளும் முடக்கப்பட்டு தமது பிரதிநிதிகள் கூட அதிகாரமற்ற பொம்மைகளாக இருப்பதனை தமிழ் மக்கள் நீண்ட காலத்துக்குச் சகித்தக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தைப் புரிந்து கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும். கேள்வி: இன்று வடக்கு,கிழக்கில் சில வேண்டத்தகாத சம்பவங்களும் இடம் பெறுகின்றவே. உதாரணமாக தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு,சிங்கள  குடியேற்றங்கள்; இவை தொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? பதில்: வன்னியில் இவ்வாறான அரசினால் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதேவேளை, கிழக்கில் இவை இடம்பெறுகின்றன. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கான காரணிகளாக இவைகளும் அமைந்திருந்ததை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான விரும்பத்தகாத செற்பாடுகளை மேற்கொண்டு இந்த நாட்டில் ஓர் அமைதியற்ற நிலை தொடர்வதனை அரசாங்கம் விரும்புகிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. எங்களுக்கு நிச்சயமாக அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் இவற்றுக்கு எதிராகவெல்லாம் குரல் கொடுக்கவுள்ளோம். கேள்வி: வடக்கு,கிழக்கில் அதிக அளவில் சுயேச்சைக் குழுக்களை நிறுத்தி வாக்குகளைச் சிதறடிக்கச் செய்து தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுச் செயற்படுவதாகக் கூறப்படுகிறதே? பதில்: இந்த விடயத்தில் உண்மையிருப்பதாகவே நினைக்கிறேன். சிலர் பலவந்தப்படுத்தப்பட்டும் அரசாங்க அதிகாரங்கள் பாவிக்கப்பட்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால,; இவையெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. அரசியல் அதிகார தரப்பினர் இவ்வாறு நடந்து கொள்வதென்பதும் எதிர்பாhக்கப்பட்ட விடயமே ஆனால் மக்கள் இவ்வாறானவர்களை இனம்கண்டு புறந்தள்ளுவார்களானால் எந்தப் பிரச்சினையும் இல்லைதானே? இதன் மூலம் அரசாங்கமும்  அரசின் ஏஜென்டுகளாகவும் அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்குமாக நிற்பவர்களும் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்வர். கேள்வி: உங்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அரசுடன் இணைந்து செயற்படும் எண்ணம் உள்ளதா? பதில்: எங்களைப் பொறுத்த வரையில் அரசுடன் இணைந்து முழுமையாகச் செயற்பட வேண்டிய தேவையில்லை.வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற வேண்டும் அவர்களுக்கான வீட்டு வசதிகள், தொழில் வசதிகள் சரியாக வழங்கப்படவேண்டும். இப்படி அங்கு பல வேலைகள் அதாவது மிகப் பெரிய வேலைகள் எம்முன் காத்திருக்கின்றன. அவற்றினை நாம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே எமது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் அரசுடன் புரிந்துணர்வுடன் நாம் செயற்படுவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வையே ஆதரித்தோம். ஆகவே, நாங்கள் அவரிடம் உரிமையோடு எதனையும் கேட்க முடியும். அவர் எமது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவாரென்று எதிர்பார்க்கிறோம். அமைச்சுப் பதவியைப் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டுமென்ற தேவை எமக்கு இல்லையே? அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி 113 க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும். இந்த நிலையில் ஏனைய கட்சிகளின் ஆதரவு அரசுக்குத் தேவைப்படாதும் போகலாமல்லவா?… (-வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பேட்டி! நேர்காணல்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.)  Read More »

எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம்.. பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் -புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன்

சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

சர்வ தேச மகளிர் தினம் இன்று. ஈழவிடுதலைப் போராட்டப் போக்கில் பெண்களின் பங்கு பற்றிய விடயங்களின் அடிப்படையில் இவ்தினத்தை சற்ற பார்ப்போம். இன்று நேற்று மட்டும் அல்ல ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இருந்து இன்றைய ஜனநாக, சோசலிஷ, முதலாளித்துவ சமுதாய அமைப்புகள் வரை நிர்வாகத்தில் சிறந்து விளங்குவது பெண்களே. ஆண் மேலாதிக்க சமுதாயம் இதனை ஏற்காமல் அவளை அடுப்பங்கரையிலும் ஆத்துக்குள்ளும் முடக்கி. அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதுவுமான நிலமைகளே பெண்கள் விடயத்தில் மேலோங்கி இருக்கின்றன. இதனை உடைத்தெறிய புறப்பட் பெண் போராளிகள் பலரைக் கொண்டதே ஈழவிடுதலைப் போராட்ட வரலாறு. ஈழவிடுதலைப் போராட்டத்தின் 80களில் பெண்விடுதலைக்கான முஸ்தீபுகள் மிகவும் ஆரோக்கியமாக ஆரம்பித்திருந்தன. குறிப்பாக ஈபிஆர்எல்எவ், புளொட், ஈரோஸ் போன்ற விடுதலை அமைப்புக்கள் பெண்கள் விடுதலை தேசியவிடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கம் என்றும் தேச விடுதலையைத் தொடர்ந்த வர்க்க விடுதலை என்பது பெண்களின் விடுதலை இல்லாமல் இல்லை என்பதை கோட்பாடாக ஏற்றுக் கொண்டு பெண்களையும் தமது விடுதலை அமைப்புக்களில் இணைத்து செயற்பட்டு வந்தனர். பெண்விடுதலையை முன்னெடுக்கும் முகமாக பத்திரிகைகள், போராட்டங்கள், அரசியல் வகுப்புக்கள், பாசறைகள் என அவர்களின் செயற்பாடுகள் நீண்டு கொண்டே வந்தன. புளொட்டில் சாந்தி, கலா என பெண் போராளிகளும் ஈபிஆர்எல்எவ் இல் அஞ்சலி ஞானா அக்கா, தாரணி, பானு, மேரி, அம்பிகா என்று பெண் போராளிகளின் பட்டியலும் நீண்டு விரிந்து போகின்றது. இப் பெண் போராளிகள் வெறும் துப்பாக்கிளை ஏந்த மட்டும் பாவிக்கப்படவில்லை. மாறாக பெண்களின் விடுதலைக்காக அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயற்பட்டதாகவே வரலாறு பதிவு செய்துள்ளது. 80 களின் நடுப்பகுதியில் தொடர்ந்த புலிகளின் மாற்ற அமைப்புக்களைத் தடை செய்தல் என்ற நிகழ்வுகளினால் இவர்கள் தொடர்ந்தம் தமது பெண் விடுதலைக்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியாமல் போனது இன்று வரை தொடர்கின்றது. புலிகளின் மாற்று கருத்தாளர்கள் மீதான துப்பாக்கித் தடைகள் அன்று ஏற்படாவிட்டால் இன்று ஈழத்து பெண்களின் விடுதலை இன்னும் முன்னேற்றகரமான ஒரு பாதையில் மேலும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கும். தமது விடுதலைக்காகவும் ஈழவிடுதலைக்காகவும் வர்க்க விடுதலைக்காகவும் அவர்களால் நடாதப்பட்ட பத்திரிகைகள், வெளியீடுகள் இன்று பதிவுகள் இன்று மறைக்கப்பட்டாலும் அவர்களின் பெண்விடுதலைக்கான செயற்பாட்டின் தாக்கங்கள் இன்றும் எம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. புலிகளைப் பொறுத்தவரையில் தமது இராணுவ செயற்பாடுகளுக்கு பாவித்தல் என்ற அணுகு முறையே பெண்கள் விடயத்தில் அவர்கள் பெரிதும் கையாண்டு வந்தனர். யாழ்பாண மத்தியதர வர்க்க குணாம்ச சிந்தனையை அடிப்படையாக வைத்தே பெண்களை குறி வைத்து அடல் பாலசிங்கம் அணிதிரட்டினார். 1000 ரூபாய் மாதக் கொடுப்பனவு, புது ஏசியா பெண் துவச்சக்கர வண்டி, நீலநிற அழகு கைப்பை ‘புதிய பறவையடா! கவனம்’  என்ற  எச்சரிகையை கொடுக்கும் மிரட்டல் பார்வை  என்ற அணுகு முறமையை கொண்டு பெண்களை அணிதிரட்டினர். உளவு பார்த்தல் என்ற நடைமுறைக்களுக்குள் இவர்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். முள்ளிவாய்காலில் புலிகளின் மரணம் சங்கமிக்கும் வரை புலிகளின் ‘பெண்விடுதலை’ இராணுவத்துடன் துப்பாக்கிச் சமரில் மடிதல் என்ற வளர்ச்சிப் போக்கு வரையும்தான் வளர முடிந்தது. அதுவரைதான் வளரவும் விட்டடார்கள் புலிகளில் இருந்து ஆணாதிக்கவாதிகள். வாழ்கைத் துணைவரைக் ‘கொன்றுவிட்டு வெள்ளை சீலை கொடுத்தனுப்புதல்’ என்ற வக்கிரமான படுபிற்போக்குத்தனமான அணுகுமுறையை மட்டும் புலிகள் கொண்டிருந்தனர். இது மாத்தையாவின் மனைவிக்க மட்டும் அல்ல பல இடங்களில் புலிகளினால் பாவிக்கப்பட்ட ‘முற்போக்கு’ செயற்பாடு ஆகும். புலிகளின் பெண் தளபதிகளும் இதனை ஏற்றே இருந்தனர். போரின் கொடுமைகளினால் புலம் பெயர்ந்த பெண்கள், புலம் பெயர்நாடுகளில் நிலவும் டாலர்களை ஈட்டும் பொருளாதார சுதந்திரம் ஈழத்துப் பெண்களையும் தைரியமாக சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலைகளுக்கு தள்ளியிருக்கின்றது என்பது ஒரு ஆரொக்கியமான நிலமையாக இருக்கின்றது. இதன் மறுபுறத்தில் குடும்ப உறவுகளில் முரண்பாடுகள், பிரச்சனைகள் ஏற்படும்போது குந்தி இருந்து பேசித்தீர்க்கக் கூடிய பிரச்சனைகளையும் ‘எடுத்தேன் முடித்தேன்’ என்று தனியாக பிரிந்து பிள்ளைகளைத் தவிக்கவிடும் நிலைமைகளை ஏற்படுத்தியும் இருக்கின்றது. இதன் அர்த்தம் ஆணாதிக்கத்திற்கு அடங்கி ஒடுங்கி அடிமையாக இருத்தல் என்பதல்ல. பிள்ளைகளை முன்னிலைப்படுத்தி மண முறிவைத்த விர்த்தல் என்று அணுகுமுறையை முன்னிலைப்படுத்தி செயற்படுதல் என்பதனை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பதாகும். இது போன்ற மண முறிவுகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் பிள்ளைகளைத் தவிக்கவிடுவதில் ஏதோ ஒரு வகையில் சம பங்களிப்புள்ளதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. தன்னைக் கொலை செய்ய பிரபாகரனால் அனுப்பட்ட பெண் புலி உறுப்பினர்களை மன்னித்து விடுதலை செய்த மனித நேய மிக்க முற்போக்கு சிந்தனை தோழர் நாபா இடம் இருந்தது வரலாறு. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் முற்போக்கான பாத்திரத்தை அங்கீகரித்தே அவர்களை விடுதலை செய்யச் சொன்னார். ஆமைப்பு வேறுபாடுகளுக்கு அப்பால் வீட்டு அடிமைத்தனம், சமூக அடிமைத்தனம், ஆண்மேலாதிக்கம் போன்ற அடக்கு முறைகளை உடைத்தெறிந்த வண்ணம் போராட புறப்பட்ட பெண்கள் வரிசையில் இப் புலிப் பெண் உறுப்பினர்களைப் தான் பார்ப்பதாகவும்,  இப் பெண்கள் தம் முன்னே உள்ள தடைகளை உடைத்தெறிந்து போராடப் புறப்பட்ட முற்போக்குத் தன்மைக்காக விடுதலை செய்த பத்மநாபாவின் பெண்கள் விடுதலை சம்மந்தமான கண்ணோட்டத்தை இவ் மகளிர் தினத்தில் சீர்தூக்கிப் பார்தல் அவசியமாகின்றது. நான் இன்று உயிர் வாழ்தலுக்கான முக்கிய காரணமாக இருந்த ஒரு கால் வழங்காத நிலையில் உள்ள அம்மாவையும் இவ் சர்வதேச மகளிர் தினத்தில் சீர்தூக்கிப் பார்கின்றேன். எம் சமூகத்தில் இலை மறை காயாய் ஒளிந்திருக்கும் இப் போர்குணம் மிக்க அம்மாக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் கிராமங்கள் தோறும் இலை மறைகாயாய் இருந்திருகின்றனர், இன்னும் இருக்கினறனர். செம்மண் பிரதேசமாம் சிறுப்பிட்டி உரும்பிராய் பகுதியில் போராளிகளுக்கு வறுமையிலும் உணவ+ட்டி பாதுகாத்த தேவி அக்காவையும், தோழர் நக்கீரனின் வாழ்வுத் துணையையும் நாம் மறக்க முடியுமா?. மண் திண்ணையிலும் இரவு பகல் பராமல் எம்மை பராமரித் தோழர் திலக்கின் சகோதரிகள், தயார் போன்றோரும் மிக மகத்தான பங்களிப்பை ஈழவிடுதலைப் பேராட்டத்தில் செய்தே இருக்கின்றனர். மருதமுனைக் கிராமத்தில் விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து போராளிகளைக் காப்பாற்றிய அந்த முஸ்லீம் சகோதரி எந்த ‘சமூகக் கட்டுப்பாடுகளை’யும் உடைத்து போராளிகளை தனது வாழ்கைத் துணைவர் என படுகை அறையில் வைத்துக் காப்பாற்றிய வீரவரலாற்றை கொண்டதல்லவா எமது ஈழப் பெண்களின் வரலாறு. மேற் கூறிய வரலாறுகள் எமது மண்ணில் கிராமம் தேர்றும் நிகழ்ந்தன என்பது பதிவு செய்யப்பட வேண்டிய விடயம். இன்றைய சர்வ தேச மகளிர் தினத்தில் இவ் எம் குலத்து தாய்களுக்கு, சகோதரிகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குவதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் சிவரமணி, செல்வி, தயாவர்சினி, போன்ற கவிஞர்களின் காத்திரமான பங்களிப்புகளும், ராஜினி திரணகம போன்ற சமூகவியலாளர்களின் பங்களிப்பும் இன்று புலிகளினால் மண்ணோடு புதைக்கபபட்டுள்ளன. இவை தவிர்க்கப்பட்டிருப்பின் பெண்களின் விளிப்புணர்வு ஈழத்தில் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும். நான் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்து முற்போக்கு கவிதையாயினி சாவச்சேரி இரததி;னபூபதியின் கவிதைகளும், சமூக பெண் ஒடுக்குமுறைக்கான போராட்ட வரைவுகளும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் நிலவிய அராஜகப் போக்கினால், அவர் பிறந்த சமூகப் பின்னணியினாலும் வெளியே எழும்பி வரமுடியாமல் முடக்கப்பட்டதும் சோக வரலாறு தானே. யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் சுதந்தரப் பறவை என்று புலிகளால் அமைக்கபட்ட பெண்கள் அமைப்பு புலிகளின் தேவைகளை, உளவுகளை பார்பதற்கு மட்டும் பாவிக்கப்பட்டு இன்று மண்ணோடு மண்ணாய் போய்விட்டது. இதில் ஆரம்ப காலத்தில் வேலை செய்த போர்குணம் மிக்க புனிதா, சாந்தி போன்றவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டு இன்று ஏதொ ஒரு மூலையில் ஒடுங்கியதும் உண்மைதானே. பிரபாகரன் மதிவதனியை கடத்தி பி;ன்பு நிர்பந்த விருப்பு மணம் செய்ததும் ஒரு வகை பெண் ஒடுக்கு முறையின் உச்சக்கட்டம்தான். தவிர்க்க முடியாத சூழலில் பிரபாகரனின் விருப்பை ஏற்று தன சுயவிருப்பைத் தவிர்த்து பிரபாகரனுடன் வாழ முற்பட்டது எந்தவகையிலும் ஆண் மேலாதிகத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது ஆகும். மதிவதனியின் ஆத்மாவிற்கு மட்டும் தெரிந்த இந்த உண்மை ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்ட ஒன்றும் ஆகும். மறுமணம் என்று வரும் போது ஆணின் விருப்புகள், உணர்வுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், தேவை பெண்களுக்கு ஒரு வீதமேனும் கொடுப்பதில்லை என்ற கொடுமையான நிலமையே ஈழத்து பெண்களிடத்து இன்றும் இருக்கினறது. இதில் பாரிய மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். சமூகம் இதில் பெரும் தடைகற்களை கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற வரையறைகளைப் பெண்களுக்கு மட்டும் போட்டு பெண்களுக்கு தண்டனை வழங்குகின்றது என்றே கூறவேண்டும். ஆண்கள் மறுமணம் செய்யும் போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு அம்மா தேவை என்று சொல்லும் காரணத்தை பெண்களின் மறுமணத்திலும் இணைத்துப்பார்கத் தயாரா? என்றால், இல்லை என்பதே பொதுவான பதில். இது ஆணாதிக்க செயற்பாட்டின் ஒரு வடிவம்தானே. இதற்கு பலரும் கூறும் வசதியான காரணம் அப்பா இல்லாமல் பிள்ளைகளை வளர்கலாம், ஆனால் அம்மா இல்லாமல் வளர்க்க முடியாது என்பதே. இதில் பெண்ணின் வலிமை, இயலுமை ஏற்றுக் கொள்ளும் விடயங்கள் தொனிப் பொருளாக இருந்தாலும் பொதுமை என்று வரும் போது பெண்கள் ஆணில் தங்கியிருப்பவள் என்ற எல்லைக்குள் முடக்கி தமது ஆணாதிக்க செயற்பாட்டை நிலைநாட்டும் முரண்பாட்டையே நடைமுறையில் நாம் காண்கின்றோம். மலையகப் பெண்களின் தினக் கூலி வாழ்வும் அதனைத் தொடர்ந்த மாலை நேர குடும்ப வேலைச் சுமைகளும் மீளமுடியாத துன்ப வாழ்விற்குள் மலையகப் பெண்களைத் தள்ளியுள்ளது. பெண்களுக்கு மாதத்தில் வரும் உபாதை நாட்கள், குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் கடினமான கால கட்டங்;கள், கழந்தையைப் பெற்றெடுத்த பின்னான ஓய்வு அதவையான நாட்கள் போன்றவற்றை இவர்களுக்கு இருக்கும் பொருளாதாரச் சுமை வேலைக்குச் செல்லாமல் ஓய்வெடுத்தலை தவிர்க்க வைக்கின்றது. இதில் மலையகப் பெண்களுக்கு விடுதலை வேண்டும். இதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்ற இச்சர்வ தேச மகளிர் தினத்தில் உறுதி எடுப்போம். இலங்கையில் ஏற்பட்ட போர் நிலமைகளினால் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள்.. இலங்கையில் ஏற்பட்ட போர் நிலமைகளினால் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்களின் எதிர்கால வாழ்வு ஆணாதிக்கமற்ற சமூகப் பிரஞ்ஞையுடன் அணுகி தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். போரினால் கணவனை, அன்புக்குரியவனை, மகனை, தந்தையை ஏன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் இழந்து தவிக்கும் பெண்களின் மறுவாழ்வு என்பது இன்றய பிரதான விடங்களில் ஒன்றாக அமைகின்றது. இதில் குறிப்பாக இளைஞர்கள் மறுவாழ்வு அளித்தல் என்பதில் அர்பணிப்புடன் செயற்பட்டு தவித்து, தனித்து நிற்கும் எம்மின சகோதரிகளின் வாழ்வில் இணைந்து, இயைந்து ஒரு நம்பிக்கையான வாழ்வுத் தடத்தில் அவர்கள் பயணிக்க வாழ்வை இழந்த பெண்களுக்கு உறுதுணையான வாழ்க்கைத் துணைகளாக தம்மை ஆக்கும் முற்போக்குச் சிந்தனை வட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இதனைவிடுத்து மீண்டும் பழைய ஆணடிமைச் சமுதாயச் சிந்தனையில் செயற்படுதல் ஏற்புடையதல்ல.  இந்த சர்வதேச மகளிர் தினத்தில் ஈழப் போராட்டத்தில் வாழ்வை ஏதொ ஒருவகையில் பறிகொடுத்த பெண்களின் மறுவாழ்விற்காக நாம் இணைந்து செயற்படுவொம் என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வோம். (சாகரன்) (பங்குனி 08, 2010)  Read More »

சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 45) -சித்திறெஜினா


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

“ஈழம்”.. எத்தனை மனோரம்மியமான வார்த்தை அது!… அந்த ஈழம் என்ற மூன்றெழுத்து உயிரெழுத்தில் தொடங்கி இடையினத்தைத் தொட்டு முடிவில் மெல்லினத்தில் நிறைவடையும் அதன் தனித்துவமே தனிதான். அந்த வார்த்தையில் தமிழ் மொழியில் மிகவும் அரிதான உபயோகத்தில் இருப்பதும் வேறு எந்த மொழிகளிலுமே இல்லாத உச்சரிப்புமுமாகிய “ழ” எழுத்தை உச்சரிக்கும்போது நாக்கு உள் வளைந்து அண்ணத்தை தொட்டு அழகான சுருதியை உருவாக்கி அந்த வார்த்தைக்கு மேலும் மெருகூட்டுகிறது…. ஆனால் ஈழம் என்ற அந்த வார்த்தையை தமிழரசுக் கட்சியினர் தங்கள் சுயலாப அரசியல் நோக்கத்திற்காக தமிழீழமாக உருவெடுக்க வைத்து அதன் செயல்பாடுளில் அமிர்தலிங்கம் போன்றோரால் பயங்கரவாதத்திற்கு வித்திடப்பட்டு பின்னர் அந்த வார்த்தை பிரபாகரனாதியோரால் தங்கள் சுய லாபத்திற்காகப் பறித்தெடுக்கப் பட்டு வழர்த்து உருவேற்றப்பட்டு பயங்கரவாதம் வீறுகொண்டு வெறிநடை போட்டபோதுதான் அந்தத் தமிழீழம் என்ற வார்த்தை கருநாகத்தின் விஷத்தைவிட கொடிய விஷம் பொருந்தியது என்பதை பலரும் உணரத் தொடங்கினார்கள் … தெற்காசிய நாடாகிய நமது இலங்கைத் தீவின் மறு பெயர்களில் ஒன்றான “ஈழம்” என்ற பெயர் இலங்கையின் பல்லின மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகத்தான் அன்றொரு காலத்தில் இருந்து வந்தது….. 1961 முதல் 1984 ம் ஆண்டு நடுப் பகுதி வரை சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரால் தினமும் காலை 7 மணி முதல் 7.30 வரை “ஈழத்துப் பாடல்கள்” என்ற தலைப்பில் இலங்கைக் கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கைத் தமிழ் கலைஞர்களால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டு பாடப்பட்டு வந்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. பின்னர் துரதிஸ்டவசமாக “தமிழ் ஈழப் போராட்டம்” என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஈழம் என்ற வார்த்தை வன்முறையை தூண்டும் சொல்லாகக் கருதப்பட்டு அந்த வார்த்தை நீக்கப்பட்டு அந்த நிகழ்ச்சிக்கு “இலங்கைப் பாடல்கள்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது… ஈழம் என்று தமிழர்கள் இலங்கைத் தீவை அழைத்த காலகட்டத்தில் இந்த “ஈழம்” என்ற வார்த்தைக்கு சிங்கள மக்கள் எவருமே எதிர்ப்புத் தெரிவித்ததில்லை…காரணம்.. தமிழ் மொழியில் இலங்கையின் மற்றொரு பெயர் “ஈழம்” என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இன்றோ “ஈழம்” என்ற வார்த்தையைக் கேட்டால் சிங்கள மக்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை வாழ் மக்களுமே அஞ்சி நடுநடுங்கி வாழ்க்கையே வெறுத்து போகும்படிக்கு அந்த வார்த்தைக்கு புலிகள் புதிய வரைவிலக்கணம் வரைந்து வைத்து விட்டுப் போய் விட்டார்கள்… ஈழம் என்றால் அது தமிழீழம் என்றும் அது இரக்கமில்லாத இரத்தப் பிரியர்களின் இல்லிடம் என்றும் அது பணத்தாசை பிடித்த புலித் தலைவர்களின் புகலிடம் என்றும் அது புலிப் பினாமிகளுக்கு படியளக்கும் பரலோகம் என்றும் ஆனால் அங்கு வாழும் அப்பாவிச் சனங்களுக்கோ அது அடிமைச் சாசனம் எழுதப்பட்ட கொத்தடிமைக் கூடம் என்றும் அவர்கள் பிள்ளைச் செல்வங்களுக்கோ பலிபீடம் என்றும் அத்துடன் புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் புலிகளுக்கு மாறான கருத்துக் கொண்டவர்களுக்கும் சிறைச்சாலையாக சித்திரவதைக் கூடமாக தூக்கு மேடையாக இருக்கும் யமலோக இராச்சியம் என்றுதான் இப்போது பலரின் மனத் திரைகளிலும் ஈழத்தின் காட்சிகள் விரிகின்றன…. சிங்கள மொழியில் “சிறீ லங்கா” என்றும் தமிழ் மொழியில் “இலங்கை” என்றும் அழைக்கப்படும் இந்த அழகான தீவை இயற்கை அன்னை வானத்துப் பறவைகளின் வசந்த புரியாக வானம்பாடிகளின் இசைக் கூடமாக தோகை மயில்களின் நடன மேடையாக வடிவமைத்ததுடன் நின்று விடாது விளை நிலங்களையும் தாவரங்களையும் தானியங்களையும் கனி மரங்களையும் கூடவே முத்தையும் மாணிக்கத்தையும் இரத்தினத்தையும் கொட்டிக் கொடுத்து மேலும் கடல் வளத்தையும் நதி வளங்களையும் அலங்கரித்து பூலோகத்து அழகையெல்லாம் இங்கே கூடிவரச் செய்து அதன்மேல் மென் தென்றலையும் தவழ விட்டாள் அவள். ஆனால் இவையனைத்தையும் இங்கே அனுபவித்து வாழ அவளால் படைக்கப்பட்ட மனிதர்களோ தன்னலவாத அரசியல்வாதிகளின் இனவாத மகுடியில் மயங்கி தன்னிலை இழந்து சமூக ஒற்றுமையை குலைத்து விரோதத்தையும் குரோதத்தையும் வழர்க்கும் இனவாத வெறியில் கனன்று இந்தத் தீவை நாசப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும்… இலங்கை என்ற வார்த்தைக்குப் பதிலாக என்றோ எங்கோ ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே உபயோக்கிக்கப்பட்டு வந்த “ஈழம்” என்ற வார்த்தை தமிழர்களின் அரசியலில் தமிழீழமாக முதன்மைப் படுத்தப்பட்டு எப்போது செயல்படத் தொடங்கியதோ அப்போது முதல் ஆரம்பமானதுதான் இந்தப் பேரழிவுகள். அதுவரையும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் இனப் பகையின் அடிப்படையில் பலியாகி வந்த இலங்கை மக்களின் தொகை பல்லாயிரக்கணக்கில் அதிகரிக்கத் தொடங்கியது இந்த வார்த்தையின் செயல்பாடுகளின் பின்னர்தான் என்பது எவருமே மறுக்க முடியாத உண்மையாகும். பலரின் வீட்டை இழக்க வைத்து உற்றார் உறவினர் பெற்றோர் அவர் பிள்ளைகள் என்று இறக்க வைத்து புலம் பெயர்ந்த பல தமிழர்களின் சிந்தனைகளை சிதற வைத்து அவர்களை “ஈழம்” என்ற வார்த்தையில் பைத்தியம் கொண்டு அலைய வைத்த இந்த இரக்கமற்ற “தமிழீழம்” என்ற சாத்தானின் வார்த்தையின் மூலகப் பொருளான ஈழம் என்ற வார்த்தை எப்படி உருவானது? இதன் ஆதி மூலம் என்ன? ஈழம் என்ற வார்த்தைக்கு 1926 ல் உருவாக்கப்பட்ட சென்னை தமிழ் அகராதியில் “கள்ளு” அல்லது “தங்கம்” என்று விளக்கமளிக்கப் பட்டுள்ளது. இலங்கையில் தங்கம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் எந்த வகையிலும் இல்லாதபடியால் “தங்கம்” என்ற வார்த்தை இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கமுடியாது என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.. “ஈழம்” என்ற வார்த்தை கல் வெட்டுகளிலும் சங்ககால இலக்கியங்களிலும் காணப்படுவது உண்மைதான். மதுரை திருப்பரங்குன்றத்திற்கு அருகே தொல் பொருள் ஆராய்ச்சி நடத்தப்பட்டபோது அங்கே காணப்பட்ட முதலாம் நூற்றாண்டு கல்வெட்டொன்றில் “இருக்கத்தூர் ஈழகுடும்பிகன் போலலையான்” என்று ஒரு வசனம் காணப்பட்டது. இந்த வசனம் “தமிழ் பிரேமி” என்ற புராதன தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டிருந்தது. (தமிழ் எழுத்துக்களுக்கு ஆதி மூலமான பிரேமி எழுத்துகள் கோணல் மாணலான உருவ அமைப்பைக் கொண்டவையாக இருந்ததாகவும் பின்னர் ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு வசதியாக இவைகள் உருண்டை வடிவில் வடிவமைக்கப்பட்டது என்றும் மேலும் இந்த எழுத்துக்களை இலங்கை உட்பட தமிழ் பேசும் தெற்காசிய நாடுகளுக்கு ஜைன மதமும் பௌத்த மதமும் பரப்பச் சென்ற மதத் துறவிகள் அறிமுகம் செய்தார்கள் என்றும் இந்தியாவின் பிரபல தொல்பொருள் ஆய்வாளரும் பிரேமி எழுத்துக்களின் ஆய்வாளருமான திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு இந்திய அரசு 2009 ற்கான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளதுடன் இவர் 1987 – 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்து வந்தார் என்பதும் வேறு விடயங்கள்). கல்வெட்டில் காணப்பட்ட இந்த ஈழக்குடும்பிகன் என்பவன் ஈழம் என்று அழைக்கப்படும் இலங்கைத் தீவை சேர்ந்தவனல்ல அவன் தென்னிந்திய சிற்றூரான இருக்கத்தூரைச் சேர்ந்தவனாக இருந்திருக்க வேண்டும் அதனால்தான் அவன் “இருக்கத்தூர் ஈழக்குடும்பிகன்” என்று அழைக்கப்பட்டான் என்று ஈழம் என்ற வார்த்தையை ஆய்வு செய்தவர்களுள் ஒருவரான றோபெர்ட் கால்வெல்ட் என்ற ஆங்கிலேய ஆய்வாளர் கருதுகிறார்… சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் ஈழத்து உணவு என்று ஒரு சில வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் சங்ககால இலக்கியமான அகநானூறு மற்றும் குறுந்தொகையில் ஈழத்து பூதன் தேவனார் என்னும் பிரபலமான தமிழ்ப் புலவர் ஒருவர் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது . ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டளவில் பல்லவ சோழ சாம்ராஜ்ஜிய காலங்களில் காணப்பட்ட சில கல் வெட்டுகளில் “ஈழம்” என்ற சொல்லுக்கு “கள்ளு” (சீலம்) என்றும் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளை உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருபவர்களை “ஈழவர்” என்றும் அவர்கள் வாழும் பகுதிக்கு “ஈழவர் சேரி” என்றும் அவர்கள் தொழில் முறைக்கு விதிக்கப்பட்ட வரிக்கு ” ஈழப் பூச்சி” என்றும் பிரேமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த சொற்கள் காணப்பட்டன…. இந்த ஈழவர் என்ற சமூகத்தினர் இன்று தமிழ் நாட்டில் குறைந்த அளவே காணப்பட்ட போதிலும் கேரள மானிலத்தின் தென் பகுதியில் மிகவும் செறிந்து வாழ்கிறார்கள். இவர்களில் பலர் கேரளாவிலிருந்து சுமார் முன்னூறு நானூறு வருடங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு இடம் பெயர்ந்து சென்று இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் உட்புறக் கிராமங்களில் மட்டுமே உபயோகத்தில் உள்ள தமிழுடன் கலந்த சில மலையாளச் சொற்கள் இதற்கு சான்று பகிர்கிறது. என்னுடைய மகன் அல்லது என்னுடைய மகள் என்பதற்கு “என்ர மோன்” “என்ர மோள்” என்பது இன்றுவரை மலையாள மொழியில் வழக்கிலுள்ள சொற்களாகும். அதேபோல “அங்கே பார்” என்பதற்கு “பங்க பார்” என்பதும் “அங்கே போ “என்பதற்கு “புங்க போ” என்பதும் வழக்கொழிந்த மலையாளச் சொற்களாகும்… கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்திய சோழச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்தின்போது இந்த ஈழவர் என்னும் சமுதாயம் வாழ்ந்த கிராமங்கள் “ஈழச் சேரி” என்று அழைக்கப்பட்டதாக ஈழம் பற்றி ஆய்வுகள் நடத்திய பிரபல மொழி ஆய்வாளாரான பீட்டர் சால்க் என்ற ஆங்கிலேயர் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில் வேலூர்பாளயத்தில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னனான நந்திவர்மன் (கி.பி.846 – 869) காலத்துக் கல்வெட்டுப் பலகைகளில் ஈழவர்கள் பூலோகத்து தேவலோக விருட்சங்களுடன் சம்பந்தப்பட்டு தொழில் முறைகள் செய்வதால் இவர்கள் தேவ தர்மத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆகவே இவர்கள் போற்றப்படவும் கௌரவிக்கப்படவும் வேண்டியவர்கள் என்று தமிழிலும் சம்ஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டிருந்ததாகவும் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்… சேரி என்ற வார்த்தை நமது காலத்தில் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் வாழும் பகுதியாக எண்ணப்படுகிறது ஆனால் முற்காலங்களில் வேறுபட்ட சமுதாயங்கள் வாழ்ந்த பகுதிகள் அவரவர் சமூகப் பெயர்களுடன் சேர்த்து சேரிகளாகவே அழைக்கப்பட்டன. மேலும் அவர்களுடைய இயற் பெயர்களும் அந்தந்த சேரிகள் தொடர்பாகவே அறியப்பட்டன. உதாரணமாக இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் சென்னைப் பட்டினத்திற்கு தெற்கேயுள்ள மயிலாப்பூரிலே பிறந்திருந்தாலும் அவர் உறையூரிலுள்ள “வள்ளுவ” சேரியிலே வழந்தமையால் “திருவள்ளுவர்” என்று பெயர் பெற்றார் என்று அவரது வாழ்க்கைச் சரிதம் கூறுகிறது… அதேபோன்றுதான் சங்ககால இலக்கியங்கியங்களில் இடம்பெறும் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஈழச்சேரியை சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும் ஏனெனின் அந்த இலக்கியங்கள் எதிலுமே ஈழம் என்பது இலங்கையென்றோ அல்லது அது ஒரு தீவு என்றோ எந்தவிதமான குறிப்புகளும் காணப்படவில்லை. மேலும் ஈழம் என்ற வார்த்தை வேறு எந்த யாழ்ப்பாணச் சரித்திர நிகழ்ச்சிகளிலும் பதியப்பட்டவில்லை. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து யாழ்ப்பாணச் சரித்திரத்தை “யாழ்ப்பாண வைபவமாலை” என்னும் செய்யுள் வடிவில் எழுதிய மயில்வாகனப் புலவர் தனது செய்யுளில் எந்தவொருவிடத்திலும் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. (யாழ்ப்பாணத்தை அரசாண்ட மன்னர்கள் எவருமே இலங்கைத் தமிழர்களாக அல்லாமல் அவர்கள் அனைவரும் இந்திய வம்சா வழியினராக இருந்தபடியால் இந்த மன்னர்கள் அனைவரையுமே புலவர் “ஆரியச் சக்கரவத்திகள்” என்றுதான் தனது செய்யுள்களில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது வேறு விசயம்). கிறிஸ்துவுக்குப் பின் பனிரெண்டாம் நூற்றாண்டில் சமஸ்கிருத்தத்தில் எழுதப்பட்டிருந்த வால்மீகியின் இராமாயணத்தை தழுவி கம்ப இராமாயணமாக தமிழில் எழுதிய கம்பர்கூட இராமனின் வருகையால் இராவணனுக்கு ஏற்பட்ட மனக் கலக்கத்தை குறிப்பிடும்போது… “கடன் கொண்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”… என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே சங்ககாலம் முதல் நவீன காலம்வரை பெரும்பாலும் இலங்கை என்ற சொற்பதமே அனைவராலும் அறியப்பட்டு வழக்கிலுள்ள பெயராக நமது நாட்டுக்கு இருந்து வந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது… ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் சூடு பிடித்திருந்த காலகட்டத்தில் பாரதியாரால் இயற்றப்பட்ட பாடல் ஒன்றில் “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற வரிகளுக்கு எதிராக அந்த நாட்களில் எந்த இலங்கைத் தமிழனாவது போர்க் கொடி உயர்த்தவில்லை.. காரணம்.. இலங்கைக்கு “சிங்களம்” என்றொரு பெயரும் புராதன காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரை அடிப்படையாக வைத்தே பாரதியார் தன் கவிதையில் “சிங்களத் தீவு” என்று குறிப்பிட்டார். (இதையேதான் ஈழம் என்ற பெயர் இலங்கைத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான ‘சிஹலம்’ என்பதிலிருந்து திரிந்தது என பிரபல தமிழிலக்கிய ஆராய்ச்சியாளர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கருதினார்). அன்றைய கால கட்டத்தில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு சகோதர உணர்வு மேலிட்டிருந்ததால் இனபேதம் அவர்கள் நெஞ்சிலே வித்திடாதிருந்தது ஆகவே இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு பாரதியார் அப்படி “சிங்களத் தீவு” என்று தன் கவிதையில் குறிப்பிட்டிருந்தது ஒரு பொருட்டாக தெரியவில்லை. அது தமது சகோதரனுக்கு கிடைத்த பெருமையாகக் கூட அவர்கள் கருதி அதில் உவகை அடைந்திருக்கலாம். மேலும் பாரதிகூட அது இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை பாதிக்காது என்பதையும் நன்கு அறிந்துதான் அந்த வரிகளை அவர் எழுதியிருக்க வேண்டும்..ஏன்?.. அவருக்குக்குகூட தமிழரையும் சிங்களவரையும் பிரித்துப் பார்க்கும் சந்தர்ப்பங்களை இலங்கை வாழ் சிங்கள தமிழ் மக்கள் வழங்கவில்லை என்பதுதான் ஒரே காரணமாக இருந்திருக்க வேண்டும்…. அப்படி ஈரினமும் ஓரினமாய் ஒன்றிணைந்து அன்னியனின் ஆட்சிக்கெதிராக திரண்டெழுந்து வென்றெடுத்த சுதந்திரத்தை கேடுகெட்ட இனவாத அரசியல்வாதிகள் அனுபவிக்க விடாமல் அவர்களுக்கிடையில் பகையை மூட்டி அவர்களை விரோதிகளாக்கி பிரித்து வைத்து விட்டு மறைந்து போனார்கள் . அவர்கள் மறைவிற்குப் பின் இன்று மீண்டும் அந்த ஒற்றுமை துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் ஜனாதிபதிகூட தனது மேடைப் பிரசங்கங்களில் தமிழில் பேசும்போது நமது நாட்டைக் குறிப்பிடும் இடங்களில் “சிறீலங்கா” என்று குறிப்பிடாமல் “இலங்கை” என்றே குறிப்பிடுவதும் அதற்கு எதிராக எந்த சிங்கள மகனும் குரலெழுப்பாததும் அவர்களின் மன மாற்றங்களின் பிரதிபலிப்பேயாகும். “இலங்கையை” தங்கள் இல்லிடமாக சிங்கள மக்கள் கருதும்போது “சிறீ லங்காவை” தமிழர்கள் தங்கள் இல்லிடமாக கருதும் காலம் வெகு தூரத்தில் இல்லை… ஆகவே பழைய தமிழர் விடுதலை கூட்டணியிரோ அல்லது பின்னர் வந்த புலிகளோ அல்லது அவர்களின் மறைவிற்குப் பின் கூக்குரலிடும் புலிப் பினாமிகள் கூட்டமோ குறிபிடும் “ஈழம்” என்ற வார்த்தை தமிழர்களுக்கு பொருதமானதல்ல. ஏனெனில் அது தமிழர்களின் வாழ்வில் இதுவரை காலமும் மனித அழிவைத் தவிர வேறு எதையுமே கொண்டு வந்ததில்லை. ஆகவே தன் நாட்டையும் அதன் மக்களையும் அதன் இன ஒருமைப்பாட்டையும் நேசிப்பவன் இலங்கை என்ற வார்த்தையால்தான் தன் நாட்டைஅழைக்க விரும்புவானே தவிர ஈழம் என்ற வார்த்தையினால் அல்ல! மீண்டும் நமது நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் நிலவ வேண்டும். அனைவரின் மனங்களிலும் மகிழ்சி கான மயிலைப்போல் தோகை விரித்தாட வேண்டும். நமது இலங்கைத் தாய் பெற்றெடுத்த அவள் அன்புச் செல்வங்கள் அனைவரும் மரண பயமின்றி அவள் மடியில் நீடுழி நெடுங்காலம் வாழ வேண்டும்…இதுதான் சமாதானத்தை நேசிக்கும் ஒரு மனிதனின் உள்ளத்தில் தினம் தோன்றும் நினைவுகள் அவன் தூக்கத்திலும் வரும் கனவுகள்….(தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 45) -சித்திறெஜினா

ஏனைய செய்திகள்

சகல வருடாந்த இடமாற்றங்களும் மேமாதம் மூன்றாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் -உள்நாட்டலுவல்கள் அமைச்சு! // வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள்!

சகல வருடாந்த இடமாற்றங்களும் மேமாதம் மூன்றாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் -உள்நாட்டலுவல்கள் அமைச்சு! // வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள்!

வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட விருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்துள்ளார். மின்சார இணைப்பு வழங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இலவசமாக மின் விநியோகம் செய்யப்படுமெனவும் இதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் மற்றும் கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் மின் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் 14 செயற்திட்டங்களே இவ்வாரம் முதல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதன்படி [...]

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்ல மக்கள் சக்தியினால் கட்டியெழுப்பப்பட்ட பாராளுமன்றம் அவசியம் -ஜனாதிபதி! // புனித அந்தோனியார் திருப்பாகம் மறை மாவட்டத்திற்கு வருகை

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்ல மக்கள் சக்தியினால் கட்டியெழுப்பப்பட்ட பாராளுமன்றம் அவசியம் -ஜனாதிபதி! // புனித அந்தோனியார் திருப்பாகம் மறை மாவட்டத்திற்கு வருகை

புனித அந்தோனியாரின் திருப்பாகம் (இதயம்) இலங்கைக்கு எடுத்து வரப்பட்டு இலங்கையின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது நேற்று மன்னாருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விமானம்மூலம் தள்ளாடி இராணுவ படைத் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட புனித அந்தோனியாரின் திருப்பாகம் (இதயம்) அங்கிருந்து மோட்டார் வாகன தொடர் பேரணியுடன் எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மக்கள் தரிசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள விசுவாசிகளின் பக்தி முயற்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. புனித அந்தோனியாரின் [...]

கல்முனை பிரதேசசபை ஐ.தே.க. முன்னாள் உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எச்.சுபைர் ஆளும் கட்சியில் இணைவு! // இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி!

கல்முனை பிரதேசசபை ஐ.தே.க. முன்னாள் உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எச்.சுபைர் ஆளும் கட்சியில் இணைவு! // இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி!

இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி நிலவுகிறது. இவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் இதுவரை 27 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தற்போது பணியாற்றிவரும் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களினால் வருடாந்தம் 13 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்து வருகின்றது. இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், [...]

பொன்சேகா அரசியலுக்கு வர அரசாங்கமே காரணம் -ஜே.வி.பி. தெரிவிக்கிறது! // ஜெனரல் பொன்சேகாவின் பதக்கங்களும் பறிபோகும் அபாயம்..

பொன்சேகா அரசியலுக்கு வர அரசாங்கமே காரணம் -ஜே.வி.பி. தெரிவிக்கிறது! // ஜெனரல் பொன்சேகாவின் பதக்கங்களும் பறிபோகும் அபாயம்..

இராணுவ நீதிமன்றில் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படுமானால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள நட்சத்திரங்களும் பதக்கங்களும் மற்றுஞம் விருதுகளையும் அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது  சரத்பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் இராணுவத்தால் அவமரியாதை வழங்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக கருத்திற் கொள்ளப்படும் இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ரணவிக்கிரம பதக்கம் ரணசூர பதக்கம் விசிஸ்ட சேவா விபூஷணய என்பவற்றை அவர் இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்புக்கான ரோயல் கல்லூரி பட்டம் மற்றும் [...]

ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடே யுத்தத்தில் வெற்றியீட்டுவதற்கு காரணம் -லலித் வீரதுங்க! // இதுவரை டெங்குநோயால் 60பேர் உயிரிழப்பு! // ஜப்பானுக்கான இலங்கை இராஜதந்திரி ஒருவர்மீது திருட்டுக் குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடே யுத்தத்தில் வெற்றியீட்டுவதற்கு காரணம் -லலித் வீரதுங்க! // இதுவரை டெங்குநோயால் 60பேர் உயிரிழப்பு! // ஜப்பானுக்கான இலங்கை இராஜதந்திரி ஒருவர்மீது திருட்டுக் குற்றச்சாட்டு

ஜப்பானுக்கான இலங்கை இராஜதந்திரி ஒருவர்மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பெறுமதியான ஓவியம், பியானோ மற்றும் தொண்மையான சுவர்க்கடிகாரம் ஒன்று ஆகியவற்றை குறித்த இராஜதந்திரி களவாடிச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த இராஜதந்திரி வசித்துவந்த கட்டட உரிமையாளருக்கு சொந்தமான பொருட்களையும் சேர்த்து இலங்கைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தாம் எந்தவொரு பொருளையும் எடுத்துச் செல்லவில்லை எனவும், தமக்குச் சொந்தமான பொருட்களை [...]

தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன -கபே அமைப்பு! // வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக்கூட்டங்கள் ஏற்பாடு! // ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் அதிகளவு மோதல் சம்பவங்கள்!

தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன -கபே அமைப்பு! // வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக்கூட்டங்கள் ஏற்பாடு! // ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் அதிகளவு மோதல் சம்பவங்கள்!

ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் அதிகளவு மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களின்போது 50 வீதத்திற்கும் அதிகமான சம்பவங்கள் ஒரே கட்சிகளுக்கு இடையிலான மோதல்களினால் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் வன்முறைச் சம்பவங்களினால் ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏழுபேரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளுக்குள் இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றதாக பதிவாகவில்லை [...]

இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்! // இலங்கையின் கடற்பரப்பில் நேற்றையதினம் 6.0ரிச்டர் அளவில் நிலஅதிர்வு! // கண்டி-பைரவகந்த, ஹந்தானே-ஹீரஸ்ஸகல மலைக்காடுகளில் திடீரென காட்டுத் தீ

இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்! // இலங்கையின் கடற்பரப்பில் நேற்றையதினம் 6.0ரிச்டர் அளவில் நிலஅதிர்வு! // கண்டி-பைரவகந்த, ஹந்தானே-ஹீரஸ்ஸகல மலைக்காடுகளில் திடீரென காட்டுத் தீ

கண்டி-பைரவகந்த, ஹந்தானே-ஹீரஸ்ஸகல மலைக்காடுகளில் நேற்றுமுன்தினம் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தத் தீ அனர்த்தம் காரணமாக சுமார் நான்கு ஏக்கர் மலைக் காடுகள் எரிந்து அழிவுற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச்.ஆர்.கே.பி. ஹேரத் நேற்றுத் தெரிவித்துள்ளார். கண்டி தீயணைக்கும் பிரிவினரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் உள்ள [...]

தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வளங்களை ஐ.நா மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்கள் இழந்து விட்டன..! // மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் நுவரெலியா கிளைச் செயலாளர் அவமதிப்பு! // பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படும் தினமன்று எதிர்ப்பு நடவடிக்கைக்கு அழைப்பு

தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வளங்களை ஐ.நா மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்கள் இழந்து விட்டன..! // மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் நுவரெலியா கிளைச் செயலாளர் அவமதிப்பு! // பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படும் தினமன்று எதிர்ப்பு நடவடிக்கைக்கு அழைப்பு

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படும் தினமன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 16ம்திகதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு எதிரான விசாரணைகளின்போது சகல நகரங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். போதி பூஜைகள் மற்றும் ஏனைய சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுதுள்ளார்.
மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் நுவரெலியா கிளைச் செயலாளர் கடந்த [...]

நாம் ஆட்சியைக் கைப்பற்றியதும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் -ரணில்! // ஜெனரல் சரத்பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது –அனுரகுமார! // இலங்கையில் மனிதஉரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம்

நாம் ஆட்சியைக் கைப்பற்றியதும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் -ரணில்! // ஜெனரல் சரத்பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது –அனுரகுமார! // இலங்கையில் மனிதஉரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம்

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றி 48 மணிநேரத்துக்குள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா விடுதலை செய்யப்படுவாரெனவும் அவருக்கு சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுக் கொடுப்போமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த உத்தரவாதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சிலருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதன் [...]

உதவிப் படைப் பிரிவுகள் நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக மாற்றப்படும் என வர்த்தமானியில் தெரிவிப்பு! // 2010ல் போய் பார்க்க வேண்டிய 31இடங்களில் இலங்கை முதலிடம்! // ஐம்பது வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைத்துவர பெப்ரல் அமைப்பு தீர்மானம்

உதவிப் படைப் பிரிவுகள் நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக மாற்றப்படும் என வர்த்தமானியில் தெரிவிப்பு! // 2010ல் போய் பார்க்க வேண்டிய 31இடங்களில் இலங்கை முதலிடம்! // ஐம்பது வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைத்துவர பெப்ரல் அமைப்பு தீர்மானம்

இராணுவ தேவைகளின் பின்னர் கலைக்கப்பட வேண்டிய வடக்கு கிழக்கு மற்றும் அதன் எல்லை பிரதேசங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மற்றும் பிரிவுகளை நிரந்தரமான முகாம்களாகவும் பிரிவுகளாகவும் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக 2010 மார்ச் 1ம்திகதி 1643- 4 என்ற விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைத் தலைமையகம், படைப்பிரிவு, படையணி, ரெஜிமென்ட், உதவிப் படைப்பிரிவு உள்ளிட்ட இராணுவப் பிரிவுகள் நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யுத்தகாலத்தில் தற்காலிகமாக, ஏற்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் [...]

அம்பாறை அக்கரைப்பற்று செல்லப்பிள்ளையார் வீதியில் திருவுருவச்சிலை மீட்பு! // இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு! // இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விசேட செயல்திட்டம்

அம்பாறை அக்கரைப்பற்று செல்லப்பிள்ளையார் வீதியில் திருவுருவச்சிலை மீட்பு! // இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு! // இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விசேட செயல்திட்டம்

பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். இவற்றுள் ஒரே கட்சியின் ஆதரவாளர்களிடையேயான மோதல்கள் தொடர்பிலான 39சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 07 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன மேலும் கூறியுள்ளார்.
அம்பாறை அக்கரைப்பற்று செல்லப்பிள்ளையார் வீதியில் திருவுருவச்சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த திருவுருவச்சிலை இன்று முற்பகலில் [...]

இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது! // மன்னார் அருள்மிகு திருக்கேதீச்சர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள்! // விளையாட்டுத்துறை அமைச்சை ஜயசூரியவிடம் ஒப்படைக்க நாமல் விருப்பம்!

இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது! // மன்னார் அருள்மிகு திருக்கேதீச்சர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள்! // விளையாட்டுத்துறை அமைச்சை ஜயசூரியவிடம் ஒப்படைக்க நாமல் விருப்பம்!

இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் சனத் ஜயசூரிய அரசியலில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததே அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி சார்பில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். தேர்தலில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக அவரையே நியமிப்பதாக நாமல் ராஜபக்ஷ உறுதி செய்துள்ளதை அடுத்து சனத் ஜயசூரிய தீவிரமாக அரசியலில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த விடயம் பற்றி தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேக்கு இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஒருவரின் மூலம் தகவல் கிடைத்துள்ளதை [...]

விரைவில் பொலிஸ் உயர்பதவிகளில் மாற்றம் -ரிவிர பத்திரிகை! // தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ம் திகதி வெளியீடு! // அறிவிக்கப்பட்ட சம்பளஉயர்வு இதுவரையில் வழங்கப்படவில்லை -தொழிற் சங்கங்கள் குற்றச்சாட்டு

விரைவில் பொலிஸ் உயர்பதவிகளில் மாற்றம் -ரிவிர பத்திரிகை! // தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ம் திகதி வெளியீடு! // அறிவிக்கப்பட்ட சம்பளஉயர்வு இதுவரையில் வழங்கப்படவில்லை -தொழிற் சங்கங்கள் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ம் திகதி வெளியிடப்படுமென அதன் பொதுச் செயலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.சிறீகாந்தா ஆகியோர் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்து விலகி தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை நிறுவினர். எதிர்வரும் 8ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களிருவரும் யாழ். குடாநாட்டில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றனர்.
பொலிஸ் உயர் பதவிகளில் [...]

கருணா பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தரப்பின் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மனிதப் படுகொலைகள் மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் தெரிவிப்பு! // திருமலையில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்! // நாமல் ராஜபக்ஷவின் வாகனத்தின் மீது பொலிஸ் மோட்டார் சைக்கிள் விபத்து!

கருணா பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தரப்பின் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மனிதப் படுகொலைகள் மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் தெரிவிப்பு! // திருமலையில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்! // நாமல் ராஜபக்ஷவின் வாகனத்தின் மீது பொலிஸ் மோட்டார் சைக்கிள் விபத்து!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் அண்மையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 23 பக்க அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது வடக்கு கிழக்கில் 300-400 பேர்வரை காணாமல் போயுள்ளதாகவும் கருணா பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தரப்பின் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மனிதப்படுகொலைகள் மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கையில்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு கொழும்பிலிருந்து இயங்கிவரும் அரசசார்பற்ற [...]

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் புதன்கிழமை ஆரம்பமாகும்! // அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருகட்சி ஆதரவாளர்களிடையே மோதல், ஒருவர் காயம்! // பதுளை ஹாலிஎல உதுவெர பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் புதன்கிழமை ஆரம்பமாகும்! // அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருகட்சி ஆதரவாளர்களிடையே மோதல், ஒருவர் காயம்! // பதுளை ஹாலிஎல உதுவெர பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்!

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருகட்சி ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் ஆலையடிவேம்பு இராமகிருஸ்ணன் வீதியில் நேற்று நள்ளிரவு 12மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் ஐ.தே.கட்சி வேட்பாளர் தயானந்தராஜாவின் ஆதரவாளர்கள்மீது மற்றொரு அரசியல்கட்சி ஆதரவாளர்கள் கல்வீச்சு நடத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இம்மோதல் குறித்த விசாரணைகளை அக்கரைப்பற்று பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் மற்றும் நான்காம்வருட மாணவர்களுக்கான [...]

எம்பிலிப்பிட்டியவில் காணாமற்போனவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! // கெப்பிட்டிபொல சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு! // குருநாகல் கொக்கரல்லயில் பெறுமதி மிக்க சிலைகளை விற்கும் நடவடிக்கை முறியடிப்பு!

எம்பிலிப்பிட்டியவில் காணாமற்போனவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! // கெப்பிட்டிபொல சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு! // குருநாகல் கொக்கரல்லயில் பெறுமதி மிக்க சிலைகளை விற்கும் நடவடிக்கை முறியடிப்பு!

குருநாகல் கொக்கரல்ல பகுதியில் பெறுமதி மிக்க சிலைகளை விற்பனை செய்யும் முயற்சி பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. குருநாகல் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொக்கரலல்ல பிரதேசத்தின் விகாரையொன்றிலிருந்த சிலைகளை விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தபோது விலைக்கு வாங்கும் தோரணயில் சென்ற பொலீஸ் குழுவினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர். ஆறு தங்கச் சிலைகள் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பதுளை மாவட்டம் வெலிமடை கெப்பிட்டிபொல சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். [...]

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் தினங்களில் சகல தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்..! // கூரிய ஆயுதத்தினால் தாக்கியதில் ஒருவர் பலி! // நீர்கொழும்பு வாகன விபத்தில் இருவர் பலி!

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் தினங்களில் சகல தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்..! // கூரிய ஆயுதத்தினால் தாக்கியதில் ஒருவர் பலி! // நீர்கொழும்பு வாகன விபத்தில் இருவர் பலி!

நீர்கொழும்பு வத்தளை வென்னப்புவ நயினாமடம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விபத்தில் மேலும் எட்டுப்பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்றுடன் வேன் ஒன்று மோதுண்டதனாலேயே இந்தவிபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஏழுபேர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் மற்றொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை [...]

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேச்சைக்குழுவோ கோரவில்லை -மேலதிக தேர்தல் ஆணையாளர்! // அனோமா பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேச்சைக்குழுவோ கோரவில்லை -மேலதிக தேர்தல் ஆணையாளர்! // அனோமா பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவின் சார்பில் நேற்றையதினம் அவரது மனைவி அனோமா பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கொழும்பில் வாழும் மக்களிடம் நேரடியாக சென்று அவர் சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்கும்படி கோரிக்கை விடுத்ததோடு சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடும் பொருட்டு கையெழுத்து பெறும் நிகழ்வும் இடம்பெற்றது. நேற்றைய பிரச்சாரங்கள் கொழும்பு மாளிகாவத்தை மற்றம் சாஸ்புர ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்களை நேரில் சந்தித்த அனோமா [...]

முல்லைத்தீவில் 15அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசு அனுமதி-அரசஅதிபர் இமெல்டா சுகுமார்! // சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த கொலை சந்தேகநபர்கள் விடுவிப்பு

முல்லைத்தீவில் 15அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசு அனுமதி-அரசஅதிபர் இமெல்டா சுகுமார்! // சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த கொலை சந்தேகநபர்கள் விடுவிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 6இராணுவ வீரர்களில் 5பேர் பொலிஸ் காவலில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்க முடியாத நிலையில் மீண்டும் அவர்கள் தமது இராணுவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மற்றும் ஒரு இராணுவ வீரரும் நுவரெலியாவில் வாகனம் திருத்தும் நிலையத்தை கொண்டுள்ள ஜேசுதாசன் என்பவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட நாளில் அவருடன் தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசி சிம்அட்டை ஜேசுதாசனின் தொலைந்து போன அடையாள [...]

கொழும்பு நுகேகொட பாகொட பகுதியில் மின்னல் தாக்கியதால் வீடொன்று எரிந்து நாசம்! // ரி.எம்.வி.பி தலைவர் சி.சந்திரகாந்தன் இந்தியா பயணம்! // அவிசாவளை பகுதி ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கொழும்பு நுகேகொட பாகொட பகுதியில் மின்னல் தாக்கியதால் வீடொன்று எரிந்து நாசம்! // ரி.எம்.வி.பி தலைவர் சி.சந்திரகாந்தன் இந்தியா பயணம்! // அவிசாவளை பகுதி ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவின் அழைப்புக்கிணங்கவே அவர் அங்கு செல்லவிருப்பதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சந்திரகாந்தனின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தள்ளார்.
கொழும்பு நுகேகொட பாகொட பகுதியில் மின்னல் தாக்கியதால் வீடொன்று எரிந்து [...]

தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன்.. புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள் தான்.  –கருணாஅம்மான்

தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன்.. புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள் தான். –கருணாஅம்மான்

வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆளும் கட்சிக்குப் பின்னால் வந்தால் மட்டுமே அபிவிருத்தி என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரிந்தவர் போட்டியிடுகிறார்இ உறவினர் போட்டியிடுகிறார் என வாக்களித்தால்இ தமிழ் பிரதிநிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. ஜனாதிபதி இன்னும் ஏழு வருடங்கள் பதவியில் இருக்கப் போகிறார். இதனை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் [...]

ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ள திட்டம்! // இலங்கையின் நிலைப்பாடுகளை அவ்வப்போது இந்திய அரசுடன் பகிர்ந்து வருகிறோம் -வெளிவிவகாரச் செயலர் ரொமேஷ் ஜயசிங்க-

ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ள திட்டம்! // இலங்கையின் நிலைப்பாடுகளை அவ்வப்போது இந்திய அரசுடன் பகிர்ந்து வருகிறோம் -வெளிவிவகாரச் செயலர் ரொமேஷ் ஜயசிங்க-

இலங்கையின் நிலைப்பாடுகளை அவ்வப்போது இந்திய அரசுடன் பகிர்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய தலைவர்களுக்கிடையில் நெருங்கிய உறவு நிலவுவதாகவும் ரொமேஷ் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார். அப்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் கருத்துக்களை முறியடிக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரொமேஷ் ஜயசிங்க [...]

வெளிநாடுகளினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியாது-பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க! // நிபுணர் குழு அமைத்தல் தொடர்பில் ஐ.நா செலர் இறுதி முடிவெடுக்கவில்லை! // நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ்!

வெளிநாடுகளினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியாது-பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க! // நிபுணர் குழு அமைத்தல் தொடர்பில் ஐ.நா செலர் இறுதி முடிவெடுக்கவில்லை! // நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ்!

இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த நிபுணர்கள் குழுவினை நியமிப்பது தொடர்பில் ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.. இவ்விடயம் தொடர்பில், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பானகீ மூன் கலந்தாலேசித்து வருவதாக தெரிய வருகிறது. நிபுணர்கள் கூடியவிரைவில் நியமிக்கப்படக் கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பாரா ஹக் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக் [...]

புலிகளுடனான போரின்போது மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசு! // பிரபாகரனின் தாயார் பார்வதியை மருத்துவத்துக்காக இந்தியா அழைத்துச் செல்ல முயற்சி!

புலிகளுடனான போரின்போது மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசு! // பிரபாகரனின் தாயார் பார்வதியை மருத்துவத்துக்காக இந்தியா அழைத்துச் செல்ல முயற்சி!

புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளையை மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் மலேசியாவில்தங்கியுள்ள அவரைமருத்துவ சிகிச்க்கு இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல அனுமதி தருமாறு இந்தியாவிடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்று அவரை அவரின் உறவினர்களிடம் கையளித்தேன் அவரை உறவினர்கள் மலேசியாவில் தங்க வைத்திருக்கின்றனர். கனடாவிலுள்ள அவரின் மகள் விநோதினி ராஜேந்திரனிடம் கையளிக்க விஸாவுக்கு விண்ணப்பித்தோம். [...]

அரசின் வெற்றிகரமான ஆட்சி முறைமையைக் கண்டு மேற்குலகம் பொறாமை -பசில் ராஜபக்ச! // காமினி திசாநாயக்கவின் கனிஷ்ட புத்திரர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில்! // ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜராகமாட்டார் -வக்கீல்கள் தெரிவிக்கின்றனர்!

அரசின் வெற்றிகரமான ஆட்சி முறைமையைக் கண்டு மேற்குலகம் பொறாமை -பசில் ராஜபக்ச! // காமினி திசாநாயக்கவின் கனிஷ்ட புத்திரர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில்! // ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜராகமாட்டார் -வக்கீல்கள் தெரிவிக்கின்றனர்!

அரசாங்கத்தின் வெற்றிகரமான ஆட்சி முறைமையைக் கண்டு மேற்குலக நாடுகள் பொறாமை கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை கையாண்டவிதம் மேற்குலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் பலநாடுகள் பயங்கரவாதத்தை முடிவுறுத்த முடியாமல் அல்லலுறுகின்றன. ஒருபுறம் வெற்றிகரமாக யுத்தத்தை முன்னெடுத்த அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்குலக நாடுகளுடன் கைகோர்த்து செயற்படுவதில் அரசாங்கத்திற்கு எவ்வித தயக்கமும் கிடையாது. அதற்காக எந்த காரணத்திற்காகவும் இலங்கை மண்டியிடாது. [...]

திருகோணமலை மொறொவௌ பகுதியில் விமானப்படையின் உதவியுடன் சிங்களக் குடியேற்றம்! // திருமலை கங்குவேலி கிராமம் மீண்டும் ஒரு அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது!

திருகோணமலை மொறொவௌ பகுதியில் விமானப்படையின் உதவியுடன் சிங்களக் குடியேற்றம்! // திருமலை கங்குவேலி கிராமம் மீண்டும் ஒரு அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது!

திருமலை மாவட்டம் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு கங்குவேலி கிராமம் மீண்டும் ஒரு அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அரசினை காரணம்காட்டி பௌத்தபிக்கு தலைமையில் தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளது. நேற்று இப்பகுதிக்கு வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கைளில் வேலிபோட்டு குடிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது விடயமாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. காணிஉரிமை பற்றி [...]

தங்கத்தின் இறக்குமதி மீதான அனைத்து வரிகளும் மற்றைய தீர்வைகளும் நீக்கப்பட்டுள்ளது-இலங்கை மத்திய வங்கி! // கொழும்பில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை -குற்றப்புலனாய்வு பணியகம்!

தங்கத்தின் இறக்குமதி மீதான அனைத்து வரிகளும் மற்றைய தீர்வைகளும் நீக்கப்பட்டுள்ளது-இலங்கை மத்திய வங்கி! // கொழும்பில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை -குற்றப்புலனாய்வு பணியகம்!

கொழும்பில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை என்று குற்றப்புலனாய்வு பணியக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வருடத்தில் யுத்தகாலத்தில் சுமார் 100தற்கொலைப் படையினர் கொழும்புக்குள் ஊருடுவியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர்களில் சிலர் தாக்குதல் நடத்த இருந்தனர். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியவர்கள் காணாமற் போய்விட்டனர் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்புக்குள் ஊருடுவியிருந்தவர்களுக்கு உத்தரவு வழங்குவதற்கு புலிகளின் தலைவர்கள் இல்லை. புலிகளின் தலைவர் பிரபாகரன் [...]

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கிறது -அமைச்சர் திஸ்ஸவிதாரண! // ஒரு இனத்தையும், மொழியையும் மற்றவர்கள் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் -நீதிபதி எம்.இளஞ்செழியன்!

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கிறது -அமைச்சர் திஸ்ஸவிதாரண! // ஒரு இனத்தையும், மொழியையும் மற்றவர்கள் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் -நீதிபதி எம்.இளஞ்செழியன்!

இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதென அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் தலையீட்டை நாடுவதன்மூலம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் திஸ்ஸ விதாரண, தமிழ்த் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலான உள்ளக சுயாட்சியை வலியுறுத்தி எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப்பெறும் முயற்சியில் தமிழ்த் [...]

எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம்.. பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் -புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன்

எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம்.. பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் -புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன்

கேள்வி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டுமென்ற நோக்கில் நீங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது என்பதனை நீங்கள் எற்றுக் கொள்வீர்கள். உங்களது முயற்சி தோல்வியடையக் காரணமென்ன?
பதில்: யுத்தம் முடிவடைந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் முடிந்தனவற்றைச் செய்ய வேண:;டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழக்; கட்சிகளையும் ஒரு கூட்டமைப்பாக அல்லாவிடினும் ஓர் அணியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில்தான் எமது கட்சி இறங்கியது. [...]

அவுஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவிலிருந்து இலங்கையர்களை நாடுகடத்தும் பணிகள் ஆரம்பம்! // கோவில்குளத்தில் மீள்குடியமர்த்தவர்கள் அடிப்படை வசதியற்ற நிலையில் அல்லல்..! // யாழ்ப்பாணத்தில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டமைக்கு கண்டனம்!

அவுஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவிலிருந்து இலங்கையர்களை நாடுகடத்தும் பணிகள் ஆரம்பம்! // கோவில்குளத்தில் மீள்குடியமர்த்தவர்கள் அடிப்படை வசதியற்ற நிலையில் அல்லல்..! // யாழ்ப்பாணத்தில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டமைக்கு கண்டனம்!

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்படவிருந்த மக்கள் நாடாளுமன்ற நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் மற்றும் சுயேட்சைக்குழு 04ன் தலைமை வேட்பாளர் செவ்வேள் ஆகியோர் வருகை தந்திருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் வருகை தராமையால் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. வந்திருக்கும் அரசியல்வாதிகளை வைத்து நிகழ்வினை ஏற்பாட்டாளர்கள் நடத்தியிருக்கலாமென்று விசனமும் கண்டனமும் சுயேட்சைக்குழு நான்கின் தலைமை வேட்பாளர் கதிரவேலு செவ்வேள் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் மக்கள் தமது கேள்விகளைக் கேட்கும் நிகழ்வே [...]