வாசகர் ஆக்கங்கள்

உள்ளதைச் சொல்லுகிறேன்  - ஊர்க்குருவி..!

உள்ளதைச் சொல்லுகிறேன் – ஊர்க்குருவி..!

உள்ளதைச் சொல்லுகிறேன்  – ஊர்க்குருவி

உலகத்தலைவன் என்னும் பாணியில் உள்ளதைச் சொல்லுகிறேன் என்று வந்து விட்டானே என்று அங்கலாய்க்காதீர்கள். உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பலரும் பல கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் பார்வ்வைக்குப் பார்வை காட்சிகள் வித்தியாசப்படுகின்றன. நாம் காணும் காட்சியை எப்படி பார்க்க விரும்புகிறோமோ அப்படியே பார்க்கத் தலைப்படுகிறோம். அது தவறில்லை ஆனால் அந்தப் பார்வைக்கு நாம் கற்பித்த அர்த்தத்தை மற்றவர் மீது திணிக்கத் தலைப்படும் போதுதான் நிலமை மோசமடைகிறது. அந்தத் திணிப்புகள் வெறும் திணிப்புகளாக மட்டும் இருந்து விடாது [...]

வைகாசி 18ம் நாள்.. இனிவரும் காலங்களில் இதுவே.. உன் இனிய திருநாள்!! -மோகன்

வைகாசி 18ம் நாள்.. இனிவரும் காலங்களில் இதுவே.. உன் இனிய திருநாள்!! -மோகன்

ஈழத்தமிழனே!
இனிவரும் காலங்களில்
இதுவே! உன் இனிய திருநாள்…
புத்தாடை உடுத்து பொங்கலிட்டு
பகலிரவாய் பட்டாசு கொழுத்தி
உற்சாகமாய் கொண்டாட வேண்டிய
முக்கியமான பண்டிகை நாளும் இதுவே
மூன்று சகாப்த கால துன்பங்களுக்கு
விடை கொடுத்த நாள்…
அடைமானத்தில் இருந்த அமைதியை
திருப்பி பெற்ற நாள்..
சிறையில் அடைபட்ட சிரிப்பை
மீட்டு தந்த நாள்…
சிந்திக்கும் உரிமையை
மீண்டும் அமுல் படுத்திய நாள்…

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -13) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -13) –அருகன்

தமிழ் மக்கள் மிகப்பத்திரமாக தம்மை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பத்தம் இன்றைய சூழல் என்பதனை வலுக்கட்டாயமாக வேனும் ஒவ்வொருவரும் புகுத்தியே ஆகவேண்டும். கருணா இன்னார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது பிள்னையான் இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிகின்றது டக்ளஸ் இன்னார் என்று பலவருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்… ஆனால் புலிகளின் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்போரை இப்போது புரிந்து கொள்ள முடியாது இருக்கின்றது. ஏப்போது யார் எப்படி மாறுகின்றனர் என்று அவர்களுக்கே வெளிச்சமற்ற பகுதியில் தம்மை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இன்று ஒரு இணையம் [...]

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசு மட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! - அருகன்

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசு மட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! – அருகன்

ஷபாஸ்… மீள்குடியேற்ற அமைச்சை ஒப்படைத்தால் அவர் மீள் வெளியேற்றம் செய்ய எத்தணிக்கின்றாரே!!! என்ற ஐயப்பாடு எழுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின் மூலம் புலிகளை ஒடுக்கியாகி விட்டுது, நாடுகடந்த அரசின் மூலம் தமிழர்களின் அரசியலையும் அபிலாஷைகளையும் புலத்தில் தள்ளியாகி விட்டுது, முன்னாள் புலிகளின் பிரபல்யங்களை உள்ளே வைத்திருந்தால் அதன் காரணம் மீண்டும் அது அரசியல் மற்றும் கிளற்சிகள் என்று மாற்றங்களைக் கொணர்ந்தாலும் என்ற போக்கிலோ இவ்வாறான முயற்சிகைளை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரதி அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டியது, [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -12) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -12) –அருகன்

வர … வர… ஈழத் தமிழர்களுடைய பகுத்தறிவில் எனக்கு நம்பிக்கை இழந்து கொண்டே போகின்றது. என்னடா ஒரு தமிழன் அதுகும் தமிழ் கற்றுக் கொடுத்தவன் என்றெல்லாம் எழுதியவன் இப்படி அதிரடி வார்த்தையாக போடு போடுகின்றானே.. என்று விழியைப் பிதுக்க வேண்டாம். ஈழத் தமிழர்கள் என்று தான் சொன்னேனே ஒழிய தமிழழில் என்று சொல்லவில்லை. இதற்கிடையில் சற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனர்த்தத்தை அதாவது யாதார்த்தத்தை உற்று நோக்க வேண்டும்… சில நாட்களுக்கு முன்னர் எனது ஒரு குறிப்பிட்ட ஆக்கத்தை [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -11) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -11) –அருகன்

“தமிழீழம்” என்றதும் நினைவிற்கு வரவேண்டியவர், பிரபாகரனல்ல தமிழ் உறவுகளே!!! ஈழம் என்ற சொல் தொடர்பாகவும் அது காலம்காலமாய் எம் தேசத்தை குறித்த சொல் என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் ஏற்கனவே பல ஆக்கங்களிலும் நாவலிலும் தெரிவித்திருந்தேன். ஆதை இப்போது மீட்டுவது அவசியப்படுகின்றது. அதாவது ஈழம் என்ற பதம் இலங்கை குறிக்கின்ற சொல்…! வரலாறாக எடுத்தாலும் சரி, புராணமாக எடுத்தாலும் சரி, இராவணன் தொடர்பாக சில தகவல்களை எடுத்துப்பார்க்க வேண்டும். இராவணனின் காலம் சிங்களவனான விஜயனின் வருகையிலும் பல வருடங்களுக்கு [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -10) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -10) –அருகன்

“என் எண்ணங்களுக்குப் பசியெடுக்கிறது – அவை
என் எழுத்துக்களையே உணவாய்க்கேட்கிறது”
ஒரு நேயத்தின் குரல் இப்படி ஆதங்கிக்கிறது,…
“நான் விழிகளைக் களைப்பாற்றுவதற்கு
இமைகளைச் சற்றே மூடுகிறேன்,
அதனை நீங்கள் தூக்கம் என்றீர்கள.
நான் தூங்கிக் கொள்வதற்காய்க்
கண்களை மூடுகிறேன்,
அதனை மரணம் என்றீர்கள்.”
“விபரங்கள் அழகாகத்தான் இருந்தது, ஆனால் முடிவுதான் அனர்த்தத்தோடு பொருந்தவில்லை!!!” பத்தாம் பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன்னர் இதற்கு முன்னர் உள்ள பகுதியை விமர்சித்திருந்தார்களா என்பதை காண்பதற்கு ஆவல்கொண்டேன். அழகாகவும் அறிவாகவும் ஒருவர் விமர்சித்திருந்தார். ஆனால் அந்த விமர்சனத்தின் முடிவு அதன் தெளிவு பொருத்தமற்றது போல் எனக்குத் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -9) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -9) –அருகன்

இந்தப்பகுதியுடன் வீண் விவாதங்களையும், அருகனை பற்றிய அலட்டல்களையும் விடுத்து, அடிகள் அனைத்தும் இடிகளாக விழும்படியும், மடியும் எங்கள் உரிமைகளின் விடிவு தெரியும்படியும், ஆழமாகச் சிந்திக்கும் பகுத்தாற்றல் தொடரும்படியும் அடியெடுத்து வைப்போமா??? கடந்த கலங்கள் அனைத்தும் அறிமுகங்கள் என்றே வைத்துக் கொள்வோம். எனினும் பலர் தொடர்ச்சியாக ஒரே விடயத்தை பல ஆக்கத்திற்கு விமர்சித்திருந்தார்கள். எனவே அவ்வாறான பொழுது போக்குகளை விடுத்து, தமிழர்களுக்கு நல்லதொரு தேசத்தை திடமாகக் கட்டியெழுப்ப எம்மாலும் முடியும் என்ன நம்பிக்கையினைக் கொள்வோம். புலிகள் மட்டுமே [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -8) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -8) –அருகன்

திரு சிவம் அவர்கள் மிக அருமையாக விமர்சித்து விட்டதாக எண்ணியுள்ளார்… இருந்தும் அவருக்குப் பாராட்டுக்கள். எனது 7வது பகுதியில் பொறிக்கப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு விமர்சனங்களைத் தராது, குறிப்பிட்ட விபரங்களை மட்டும் காட்டி தான் அனைத்தையும் அறிந்து விட்டதாகக்காட்டிக்கொண்டுள்ளார். பாவம் அவருக்குத்தெரிந்தது, “தேசியம்” இணையம் அருகனுடையது என்பது மட்டுமே???… … …  என்னுடைய கட்டுரைகளில் யாரையும் வர்ணித்தோ, அல்லது தூசித்தோ எழுதுவது எனது நோக்கமல்ல அன்பரே!!! தமிழர்கள் ஒவ்வொருவரும் தமக்கிருக்கும் தலைசிறந்த பண்பை வெளிக்காட்ட வேண்டும் என்றும் மக்களை [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -7) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -7) –அருகன்

உலகம் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் போது, நாம் சந்திரனைப்பார்த்து நிலாச்சோறு காட்டிக்கொண்டே இருக்கின்றோம்.. நல்லவேளை 7ம் பகுதியை முடித்துவிட்டு அதை அனுப்புவதற்கு இருந்த வேளை இன்னொரு விமர்சனத்தைப் பெற்றுக் கொண்டேன்… அதில் “தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை. அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக> எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும்> உலக வல்லரசுகளின் கேந்தில இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -6 விமர்சனத்திற்கான அதிரடி வெளியீடு) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -6 விமர்சனத்திற்கான அதிரடி வெளியீடு) –அருகன்

“சபாஸ் நல்ல தலைப்பும் நல்ல போட்டியும்…” எனக்கு எழுதுவதற்கும் சம்பளம் கொடுக்க யாரும் முன்வந்தால் நிச்சயம் 24மணிநேரத் தொழிலை எழுத்துப் பணியாகவே கொள்ளும் ஆர்வமும் திறனும் என்னிடம் இருக்கின்றது… ஆனால் அதுக்கெல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டைக் கொண்ட அமைப்பைப் போன்றவர்களை சார்ந்து எழுத வேண்டும்இ அவர்களின் சிறப்பை மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற வலுக்கட்டாயப் பண்பு காணப்படும். ஆத்துடன் அக்குழுவினரைச் சார்ந்தே அனைத்தும் நடக்க வேண்டும் அது ஒரு சிறந்த சிந்தனையாளனுக்கும்இ சிறந்த கலைஞனுக்கும் பொருந்தாது… 5ம் பாகம் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -5) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -5) –அருகன்

“அதிரடி”யின் வாயிலாக அருகனின் ஆக்கங்களிற்கு வாசகர்கள் கொடுக்கும் விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கதாகவே இருக்கின்றது. அனைத்து விமர்சகர்களுக்கும் பதில் தரவேண்டும் என்றே எனது ஆதங்கம் துடிக்கின்றபோதிலும், அதற்கு ஏற்ற தருணம் அதாவது, இடம், பொருள், ஏவல், போன்றவை ஏற்றதாக இல்லாததால் தடைக்கு வருந்துகின்றபோதிலும், சிறிதேனும் அதற்கான பதிலை ஆங்காஙஇகே தரமுயல்கின்றேன். எனவே, அனைத்து விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்கும் அதிரடி இணையத்திற்கும் நன்றிகள். ….
ஆரம்ப எனது நாவல்களில் மிகவும் வேதனையுடன் எழுதிய ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) –அருகன்

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) –அருகன்

இதுவரைக்கும் சில கருத்துக்களுக்கு பதிலோ அல்லது, பக்கச்சார்போ கொடுக்க முடியாதவர்கள் தாம் பேச வருவதை நிதானமின்றி பேசுவதாலும், எப்படியும் எழுதலாம் என்று விளக்கமற்ற முறையிலும் விமர்சனங்களை எழுதுவது தகுந்ததல்ல. எனவே அன்பர்கள் தாம் எழுதும் கருத்தை திடமாகவும் முறையாகவும் எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இது சாதாரண விடயமாகக் கருத வேண்டாம், இந்த ஆக்கங்களை பல அரசியல்வாதிகளும் அமைப்பாளர்களும் எடுத்துக் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அன்பர்களே!!!
முன்னைய பகுதிகளில்,……
•    பிரபாகரன் மனத்திடமுள்ள ஒருமனிதன் ஆனால் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -3) - Arugan

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -3) – Arugan

கடந்த காலத்தில் வெளிவந்த இரண்டு பகுதிகளுக்கும் வாசகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை மேலும் பகுதிகளை எழுதத் தூண்டியுள்ளது. இது வெறும் ஆக்கமல்ல ஆதங்கங்களோடு நிறைந்த வரலாறு, இரத்தக்கறை படிந்த ஒரு இனத்தின் போராட்ட நிகழ்வு, மழுங்கடிக்கப்பட்ட உரிமைகளின் முறைகேடான போராட்டம்… அந்த மனிதன் தலைநிமிர்ந்து, நெஞ்சை தள்ளிப்பிடித்துக் கொண்டு நடந்த காலம் இன்னும் கண்ணுக்குள் நிக்கின்றது… ஆனால் எனக்கு விளங்காத பலவிடயங்களில் ஒன்றை இதில் இணைத்துக் கொள்கின்றேன்… அதாவது, பிரபாகரனுக்காக ஆயிரம் பாராட்டுப் பாடல்கள் இருக்கின்றன… அதைக்கேட்கும்போது [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! இரண்டாம்பகுதி  (2) - Arugan

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! இரண்டாம்பகுதி (2) – Arugan

“athirady ஊடாக விமர்சித்த அன்பருக்கு நன்றி… உங்கள் விமர்சனமே எம்மை மேலும் எழுதத்தூண்டும்.” தமிழீழம் கிடைத்ததும் மேற்கொள்ள பேண்டிய விடயங்களை, அத்தமிழீழம் கிடைப்பதற்குப் போராடிய வேளையிலேயே அளவுக்குமீறி எமது சொத்துக்களையும், உயிர்களையும் இழந்தது யார்குற்றம்? எத்தனையோ பேர் வருமானத்திற்கே திண்டாடும் போது, தேசியத்தலைவரின் தந்தை பென்சன் எடுத்துக்கொண்டிருந்தார் என்பதை நான் சொல்லவில்லை வரலாறு ஆதாரத்தோடு காட்டுகின்றது. இதில் பலர் எனது ஆக்கம் பிரபாகரனை தப்பாக எழுதுவதாக கருதிவிட்டனர் என நினைக்கின்றேன்… நான் குற்றம் சுமத்தியது… குற்றம் [...]

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! -திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் (அருகன்) -வாசகர் ஆக்கம்-

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! -திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் (அருகன்) -வாசகர் ஆக்கம்-

திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போரை நிரந்தர மேலுலகிற்கு அனுப்பிய பிரபாகரனிலும் பார்க்க, அதே திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போர்களுக்கு தகுந்த தகுதியை வழங்கும் மகிந்த எவ்வளவோ மேல். அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் ஒரு சில பணபலமுடைய தமிழர்கள். இதனால் பப்பாமரம் முறிவடையும் என்றுகூட எண்ணாமல் பப்பாவின் உச்சிக்கே போய்விட்டார் அவர் அதனால் அவர் உச்சியே சிதைவடைந்து போய்விட்டது. ஆனால் மகிந்த எத்தனையோ நல்லகாரியத்தை தமிழர்களுக்கும் நாட்டுநலனுக்கும் மேற்கொண்டிருந்த போதிலும் [...]

சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் தமிழ் திருமணவிழாவில் குடும்ப மோதல் பற்றி சமூகத்தினரிடையே அதிருப்தி

சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் தமிழ் திருமணவிழாவில் குடும்ப மோதல் பற்றி சமூகத்தினரிடையே அதிருப்தி

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்திலுள்ள அரோ மாநிலத்தில் தமிழ் திருமண வைபவமொன்றில் குடும்ப உறவுகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயமடைந்ததுடன், 44வயதான ஒருவர் சுவிஸ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதுபற்றி அதிரடி இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலில் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் வடமாகாணத்தின் பிரபல்யமான ஊரொன்றைச் சேர்ந்த குடும்பத்தின் திருமண வைபவமொன்று நடைபெற்றுள்ளது. இவ்வைபவத்தின் போது அதே ஊரைச் சேர்ந்த அவர்களின் நெருங்கிய உறவினர்களான சகோதர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையில் [...]

புலன் பெயர் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்ற கனடா இலவச பத்திரிகையாளர்..

புலன் பெயர் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்ற கனடா இலவச பத்திரிகையாளர்..

ஈழத்தில் புலிகள் அழிந்துள்ள நிலையிலும், புலம் பெயர் மண்ணில் அவர்கள் கட்டுமானம் உடைந்துள்ள நிலையிலும் முன்பு புலிகளைப்பற்றி தான்தோன்றித் தனமாக புகழ்ந்து எழுதியது மட்டுமல்லாமல் அவர்கள் செய்த கொலைகளை நியாப்படுத்தி, ஊடக தர்மத்தை புதை குழி தோண்டி புதைத்தது மட்டுமல்லாமல் தன் இலவச பத்திரிகைக்கு வியாபாரப் போட்டியால்  விளம்பரம்  எடுப்பதற்காக புலன் பெயர் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்ற கனடா இலவச பத்திரிகையாளர் ஒருவர் தற்போது தானும் தாயக மக்களுக்கு குரல் கொடுப்பததாக  இலங்கை தமிழர் [...]

ஜனாதிபதி சுயேற்சை வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்..

ஜனாதிபதி சுயேற்சை வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்..

வடகிழக்கு பிரதேசமெங்கும் தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனால் அமுல்படுத்தப் பட்டிருந்த 14ஆவது ‘திருத்த முடியாத” ஆட்சி அதிகார சட்டத்தை மீண்டும் நிலைநாட்டுவேன் -எம்.கே.சிவாஜிலிங்கம். நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் பிரதம வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களால் ‘பிரபாகரனின் சிந்தனை” என்ற தலைப்பில் 14 அம்சதிட்டத்தை உள்ளடக்கி தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று, திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டிதுறையில் உள்ள வைரவர் கோயிலில் வைத்து தனது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை வெளியிட்டு வைத்தார். [...]

பராக்! பராக்!! புலிகளின் புதிய தேசிய தலைவர் சரத் பொன்சோ..!!! -கரிகாலன் (வாசகர் ஆக்கம்)

பராக்! பராக்!! புலிகளின் புதிய தேசிய தலைவர் சரத் பொன்சோ..!!! -கரிகாலன் (வாசகர் ஆக்கம்)

20,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை ஈவு, இரக்கமின்றி படுபயங்கர ஆயுதங்களை பாவித்து படுகொலை செய்தவரும்,  முன்னாள் தமிழ் தேசிய தலைவரான பிரபாகரனை முல்லைதீவு பிரதேசம் முழுவதும் ஓட ஓட கலைத்து கொன்ற இராணுவத் தளபதியும், இன்னாள் புலம்பெயர் புலிகளின் தேசிய தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தற்போதைய தேசிய தலைவருமான சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர்; நேற்று (11.01.10) தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை வவுனியாவில் வைத்து ஆரம்பித்துள்ளனராம். இதிலிருந்து புரிகின்றதா? எங்கட தமிழ் தேசிய [...]

தேசியத்தலைவரின் கொள்கையைக் கொண்ட சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை தானே புலிஆதரவு தமிழ் மக்களும் விரும்புவாங்க.. (சம்பந்தரோட மின்மினியின் சம்பாஷனை) –மோகன் (வாசகர் ஆக்கம்)

தேசியத்தலைவரின் கொள்கையைக் கொண்ட சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை தானே புலிஆதரவு தமிழ் மக்களும் விரும்புவாங்க.. (சம்பந்தரோட மின்மினியின் சம்பாஷனை) –மோகன் (வாசகர் ஆக்கம்)

மிக மிக நிரம்ப நாளுக்கு அப்புறம் சம்பந்தர் தன்னை வந்து சந்திக்க சம்மதம் தெரிவித்து மின்மினிக்கு அழைப்பு விடுத்தார். மின்மினிக்கு கைகால் ஓடவில்லை, இதோ! இந்தா வந்திட்டே இருக்கேன் என பாய்ந்து போய் சம்பந்தர் முன்னால் போய் ஆஜர் ஆயிட்டார். இதோ சம்பந்தரோட மின்மினியின் சம்பாஷனை (குறிப்பு: இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு மின்மினி பொறுப்பாக முடியாது)
சம்பந்தர்; என்ன தம்பி நான் எதிர்பார்க்கவே இல்லை, நீர் இவ்வளவு கெதியா வருவீர் என்று.
மின்மினி: ஓம் ஐயா நீங்க கூப்பிட்டதும் [...]

இராணுவத்தினரை மானபங்கப் படுத்துவதாகக் கூறி தமிழ்பெண்களை மானபங்கப்படுத்தும் வாணி ஞானகுமாரின் பகீர் வாக்குமூலம்.. (வாசகர் கருத்து)

இராணுவத்தினரை மானபங்கப் படுத்துவதாகக் கூறி தமிழ்பெண்களை மானபங்கப்படுத்தும் வாணி ஞானகுமாரின் பகீர் வாக்குமூலம்.. (வாசகர் கருத்து)

தமிழ் பெண்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என ஆங்கில பத்திரிகை  ஒன்றில் பணத்துக்காய் சோரம் போய் செவ்வி அளித்திருக்கிறாள் லண்டனில் வசிக்கும் வாணி ஞானகுமார் என்பவர். மதுரையை எரித்த கண்ணகி உதிர்த்த தமிழ் உலகத்தில் ஓடுகாலி வாணியும் உதிர்த்திருக்கிறாள். இவளை போன்றவர்களை தான் புலம்பெயர் புலிகள் சிலைகட்டி வணங்க வேண்டும். இப்படியொரு பத்தினி தெய்வத்தை தமிழ் உலகம் இதுவரை பார்த்திருக்காது. ‘பணத்துக்காய் தமிழ் பெண்களின் மானத்தை விலைபேசி வெள்ளைகாரர்களுக்கு [...]

நந்திக்கடல் நிர்வாணமும்.. வட்டுக்கோட்டை தீர்மானமும்.. (புலிகளின் தமிழ்ஈழ தாகத்திற்க்கும் வட்டுக்கோட்டைக்கும் என்ன பெரிய வித்தியாசம்..??) –மோகன்

நந்திக்கடல் நிர்வாணமும்.. வட்டுக்கோட்டை தீர்மானமும்.. (புலிகளின் தமிழ்ஈழ தாகத்திற்க்கும் வட்டுக்கோட்டைக்கும் என்ன பெரிய வித்தியாசம்..??) –மோகன்

புலன்பெயர்ந்த புலிக்கூட்டங்கள் இலங்கையில் தமிழ்மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என்பதை ஒரு தொழிலாக கொண்டு அலையுதுகள் என நினைக்கின்றேன். நந்திக்கடல் ஏரியில் ஒரு நாள் சாமம் முழுவதும் முழங்கால் அளவு தண்ணியில் தலைவர் தன் முழுப்ப+சணிக்காயை உயிருக்கு பயந்து மறைத்துக் கொண்டிருந்த அந்த வேளையிலும் தமிழ்ஈழம் தான் வேண்டும் அதுவும் தலைவன் தான் தன் கையால எடுத்து தரவேண்டும் என்று புலம் பெயர்நத வீதிகளில் கத்து கத்தென்று கத்தி அந்த மனுசனை பரலோகம் அனுப்பி தொலைத்து விட்டு [...]

எதிரியிடம் சரணடைந்து தமிழனின் மானத்தை வாங்கிய தகப்பனும் மகளும்.. -கபிலன் (எமலோகத்திலிருந்து கற்பனையாக நிஜம்..! -வாசகர் ஆக்கம்)

எதிரியிடம் சரணடைந்து தமிழனின் மானத்தை வாங்கிய தகப்பனும் மகளும்.. -கபிலன் (எமலோகத்திலிருந்து கற்பனையாக நிஜம்..! -வாசகர் ஆக்கம்)

தலைவர், தன்ர மகள் துவாரகா தன்னுடைய பரம எதிரியான சிறிலங்கா படையினரால் சின்னா பின்னமாய் போய் கிடப்பதை வடிவாக பார்க்கிறார், (இவாதான் மாலதி படையணியுடன் நின்று போராடி வீரச்சாவடைந்தவா பிறகு அடுத்த nஐன்மம் எடுத்துக் கொண்டு வந்து படையினரிடம் தகப்பனுடன் சேர்ந்து முள்ளிவாய்கால் பிரதேசத்தில் வைத்து சரணடைந்தவா) பார்த்து விட்டு என்ன கொஞ்ச நேரத்தில் தலைவர் அழப்போறார். மனைவி மதிவதனியையும் படையினர் காட்டுக்குள் எறித்துள்ள படக்காட்சிகளும் இந்த படத்தை முதலில் பிரசுரித்த இணையதளத்துக்கு சரத் பொன்சேகா அனுப்பி [...]

பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு.. “சொற்களின் மூலம் ஓர் மனிதனை மரணிக்கச் செய்ய முடியுமா?”  (சகீன் -புத்தளம்)

பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு.. “சொற்களின் மூலம் ஓர் மனிதனை மரணிக்கச் செய்ய முடியுமா?” (சகீன் -புத்தளம்)

ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஓர் வித்தியாசமான ஆய்வு நடத்தப்பட்டது அது “சொற்களின் மூலம் ஓர் மனிதனை மரணிக்கச் செய்ய முடியுமா?” என்பது பற்றியதாக அமைந்தது. இவ் ஆய்வுக்காக அமைக்கப்பட்ட குறித்த ஆய்வுக்குழு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவனைத் தெரிவுசெய்து அதற்காக அவர்கள் நீதிமன்றில் அனுமதியையும் பெற்றுக்கொண்டனர். அந்தக்கைதிக்கு மரண தண்டனையெனத் தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்தினுள்  மரண தண்டனை நிறைவேற்றப்படவும் வேண்டும். ஆனால் அந்தக் கைதி ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படுவதனால் அவனது மரண தண்டனை இதுவரை நடந்திராத [...]

புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்புப்புதல்வி துவாரகாவின் இறுதிப் புகைப்படம்!! (இணைப்பு-2)

புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்புப்புதல்வி துவாரகாவின் இறுதிப் புகைப்படம்!! (இணைப்பு-2)

புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனி, மகன்களான சார்ள்ஸ் அந்தனி, பாலச்சந்திரன் மகள் துவாரகா ஆகியோர் 18.05.09 அன்று வன்னி இறுதிக்கட்ட சமரில் கொல்லப்பட்டது நீங்கள் அறிந்ததே.. இதுவரை பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அந்தனி, பாலச்சந்திரன் ஆகியோரின் கொல்லப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது. தற்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்புப்புதல்வி துவாரகாவின் கொல்லப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனைப் பிரசுரித்துள்ள புலிகளின் இணையம் ஒன்று “தமிழிளைஞர்கள் அனைவரும் கரும்புலியாக மாற வேண்டிய தருணம் இது” எனவும் குறிப்பிட்டுள்ளது. [...]

2010 ஜனாதிபதி தேர்தல்.. ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் டாக்டர் இலியாஸ் (முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)

2010 ஜனாதிபதி தேர்தல்.. ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் டாக்டர் இலியாஸ் (முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)

இவரைப்பற்றி.. 02.02.1945ல் புத்தளத்தில் பிறந்து ஆரம்ப கல்வியை புத்தளம் ஸாஹிராவில் ஆரம்பித்தார். 1971ம் ஆண்டு தனது பட்டப்படிப்பையும் வைத்திய பட்டப்படிப்பையும் முடித்தார். 1976ம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி புத்தளம் பெரியப்பள்ளிவாசலில் ருக்கூவிலும் சுஜூதிலும் தொழுதுக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம் மக்கள் புத்தளம் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட போது இவரது அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. இந்த கருப்புத்தினத்திலே 225 வீடுகளும் பள்ளிவாசல்களும் 12குடிமகன்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எவருமே இதுதொடர்பில் பாராளுமன்றில் [...]

நீ உயிரோட இருந்தாலும் சரி, செத்து தொலைஞ்சாலும் சரி யாரும் சந்தோசமா இருக்கக்கூடாது என்ற முடிவோட இருந்திருக்க.. புலிப்பினாமியின் ஒப்பாரி (வாசகர் ஆக்கம்)

நீ உயிரோட இருந்தாலும் சரி, செத்து தொலைஞ்சாலும் சரி யாரும் சந்தோசமா இருக்கக்கூடாது என்ற முடிவோட இருந்திருக்க.. புலிப்பினாமியின் ஒப்பாரி (வாசகர் ஆக்கம்)

கடவுளே! கடவுளே! கார்த்திகையும் வந்து விட்டது, இவன் காலகனிடம் சொல்லி என் கடவுளை திருப்பி அனுப்பி வைக்க மாட்டாயோ? கைகால் எல்லாம் நடுங்குது, கண்ணெல்லாம் சொருகுது, கடைக்கண் பார்வையிலே கதிகலங்கி போனவங்களெல்லாம் காறி துப்புறார் போல் தோணுது, ஐயோ தலைவா! நீ எங்கே ஐயா போய் தொலைஞ்ச? உன்னை கூப்பிடக்கூடாது, கூப்பிடக்கூடாது.. ஏன் கூப்பிடணும்? உன்னை நம்பி என் தொழிலும் போச்சு.. வாங்கி வைச்ச என் வீடும் போகப் போகுது. ஐயோ இப்படி என்ன தனியா புலம்ப [...]

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! (புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை 2009)

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! (புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை 2009)

இன்று மாவீரர் நாள்.. இந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் இப் புனிதநாளில்  நான் என்ன செய்தியை உங்களுக்கு சொல்ல போகிறேன் என்பதையிட்டு நீங்கள் எல்லோரும் மிகுந்த ஆவலாக கடந்த மே மாதம் 17 திகதியிலிருந்து காத்துக் கிடக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன். எம்முடைய தமிழீழ பெரும் தேசத்தை மீட்டு, தமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நான் நினைவு கூர்ந்து, அவர்களை கௌரவிப்பதற்கு எனக்கு [...]

புலம்பெயர் நாடுகளில் பிரபாகரனின் 55வது பிறந்த நாள் கொண்டாட்டம் -இராஜ்குமார் (வாசகர் ஆக்கம்)

புலம்பெயர் நாடுகளில் பிரபாகரனின் 55வது பிறந்த நாள் கொண்டாட்டம் -இராஜ்குமார் (வாசகர் ஆக்கம்)

இலங்கை தவிர்ந்த புலம் பெயர் நாடுகளில் பிரபாகரனின் 55வது  பிறந்த நாள் இன்று (26.11.09) கொண்டாடப்படுகின்றது. இதில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பிரதம விருந்தினராக கலந்து கொள்கின்றார். கனடாவிற்கு சென்ற அவரை கனடிய புலனாய்வுப்பிரிவினர் பார்சல் பண்ணி கோடம்பாக்கத்திற்கு அனுப்பி விட்டனர். வெளிநாடுகளில் உண்டியல் குலுக்கும் பிழைப்புக் கூட்டம் இவ் நிகழ்வால் ரொம்பவும் நொந்து போயுள்ளனர். ஏற்கனவே உலக பொருளாதார சீரழிவினால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு போல் இவர்களது பொருளாதாரமும் சுருங்கி விட்டது. [...]

கல்லறை மேனியர் கண் திறப்பர்களே கார்த்திகை நாளினில்  அவர் கண் திறந்து இங்கு கண்ணீர் சொரிவார்களே.. (வாசகர் ஆக்கம்)

கல்லறை மேனியர் கண் திறப்பர்களே கார்த்திகை நாளினில் அவர் கண் திறந்து இங்கு கண்ணீர் சொரிவார்களே.. (வாசகர் ஆக்கம்)

கல்லறை மேனியர் கண் திறப்பர்களே கார்த்திகை நாளினில்.. அவர் கண் திறந்து இங்கு கண்ணீர் சொரிவார்களே.. அண்ணா உங்கள் பிற்போக்கு தனத்துக்கு ஏன் எம்மை பலி கடாவாக்கினாய் என்று.. சமாதான காலத்தை ஒழுங்காக கடைப்பிடிக்காமல் மாவிலாற்றில் சண்டைக்கு அழைத்து திருகோணமலையில் இராணுவ பஸ்களுக்கு கரும்புலி தாக்குதல் செய்து.. ரணிலுக்கு வோட்டு போடாமல் செய்து மகிந்தவை அரசனாக்கி.. மஹிந்த ஒரு யதார்த்தவாதி என்று சொல்லி அவர் பணம் வாங்கி தன் பிள்ளைகளை வெளிநாட்டு கல்விக்கு அனுப்பி.. கடவுளே..
இன்று சுமார் [...]

மனித உடலின் மகத்துவம்.. -மோகன் (வாசகர் ஆக்கங்கள்)

மனித உடலின் மகத்துவம்.. -மோகன் (வாசகர் ஆக்கங்கள்)

மனித உடல் 50 ட்ரிலியன் (trillion) (50,000,000,000,000) மேலான கலங்களை கொண்டுள்ளது.
மண்டையோட்டின் கலங்களின் அமைப்பு முற்றிலுமாக முழுமை பெற்ற வடிவம் பெற 10 வருடங்கள் தேவைப்படுகிறது.
99 வீதமான கல்சியத்தை எலும்புகளும், பற்களுமே கொண்டிருக்கின்றன.
பற்சிப்பியே  (ENAMEL) மனித உடலின் பலமான உடல்கூறு.
மூளைக்கும் முதுகுத்தண்டுக்கும் இடையே நரம்பு மின்சாரச்சக்தி மணித்தியாலத்திற்க்கு 250 மைல் (400 கி.மீ) வேகத்திற்க்கு அதிகமாக பயணிக்கிறது.
மனிதனின் தலை 22 எலும்புகளை கொண்டிருக்கின்றது.
மனிதனின் கழுத்து ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துக்கு சமமான முள்ளெலும்புகளை கொண்டுள்ளது.
மனித உடலின் நீளமானதும் கடினமானதுமான எலும்பு [...]

மக்கள் பணத்தில் ஏப்பம்விடும் புலம்பெயர் புலிகள்..

மக்கள் பணத்தில் ஏப்பம்விடும் புலம்பெயர் புலிகள்..

ஈழவிடுதலை போராட்டம் என்று கூறி இளைஞர், யுவதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மதகுருமார், அரசியல் தலைவர்கள், சக விடுதலை அமைப்பு போராளிகள், தலைவர்கள் என தன் இனத்தவர் தனது அமைப்பு உறுப்பினர்கள் என்று கொலை செய்து சிங்கள அரசுக்கு மகிழ்ச்சி ஊட்டிய பிரபாகரனின் சொல்லை கேட்டு எதிரியிடம் மண்டியிடாமல், குண்டுகட்டி உயிரை மாய்த்த மறவர்கள், எதிரிக்கு ரகசியங்கள் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக சைனைற் அருந்தி தம் உயிரை மாய்த்தனர் திராவிட இளைஞர்கள். ஆனால், அந்த இளைஞர்களின் மரணத்தில் [...]

மரண அறிவித்தல் ஒன்று!! (புலிகளின்

மரண அறிவித்தல் ஒன்று!! (புலிகளின் “தமிழ்நாதம்”, “புதினம்” ஆகிய இரு இணையதளங்களும் அகால மரணம்!)

புலிகளின் பொய் பரப்புரையூடகங்களாக பல ஆண்டுகாலம் இயங்கி வந்த தமிழ்நாதம், புதினம் ஆகிய இரு இணையதளங்களும் 18.10.09 ஞாயிற்றுக்கிழமை அன்று (புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு சரியாக ஐந்து மாதங்கள் கடந்து) அகால மரணமடைந்துள்ளன. இவ் அறிவித்தலை அனைத்து ஈழநாதம், புதினம் வாசகர்களுக்கும் ஆழ்ந்த மனவருத்ததுடன் அறியத் தருகின்றோம். இந்த இரு இணையத்தளங்களும் இறந்த செய்தி கேட்டு இவர்களுடன் இணைப்பிலிருந்த அனைத்து “ஒட்டுண்ணி” ஊடகத்தினரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்து மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது. இந்த இரு இணையதளங்களுக்கும் [...]

“நாடு கடந்த தமிழீழ அரசு” பற்றிய கருத்துக்களை, என்நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என்ற நிலையிலுள்ள உருத்திரன் மின்மினியுடன் பகிர்ந்து கொள்கிறார்... (வாசகர் ஆக்கங்கள்)

“நாடு கடந்த தமிழீழ அரசு” பற்றிய கருத்துக்களை, என்நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என்ற நிலையிலுள்ள உருத்திரன் மின்மினியுடன் பகிர்ந்து கொள்கிறார்… (வாசகர் ஆக்கங்கள்)

மின்மினி: வணக்கம் உருத்திரன் சார்.  புலம்பெயர்ந்த புலிமக்களின் தலைவனாக தங்களை பிரகனப்படுத்துவதில் மிகவும் பிரயத்தனமாக இருப்பதாக அறிகிறேன்.
உருத்திரன்: மின்மினி நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தலைமைத்துவம் மக்களிடம் திணிக்கபடுவதில்லை, அது மக்களிடம் இருந்து உருவாகிறது அந்த வகையில் புலம்பெயர்ந்த புலிமக்கள் என் தலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மின்மினி: அப்போ தலைமைப்பதவியில் பெரிய நாட்டமில்லை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா?
உருத்திரன்: அப்படியும் சொல்லமுடியாது அது என்னை நம்பி வந்த மக்களை நட்டாற்றில் விட்டது போல் ஆகிவிடும்.
மின்மினி: ஒருவகையில் புலம்பெயர்ந்த புலிமக்களுக்கு [...]

“சொந்தமாகிய சுவிஸ் மண்ணில் நான் வாழத் துடிக்கிறேன்” (வாசகர் ஆக்கம்)

“சொந்தமாகிய சுவிஸ் மண்ணில் நான் வாழத்துடிக்கிறேன்”- “மாபெரும் மொய் விழா” அனைத்து சுவிஸ் வாழ் தமிழர்களையும் வருக.. வருகவென  அன்புடன் அழைக்கிறேன்!! சுவிஸில் நான் சொந்தமாகி சொத்துப் பத்துகளுடன் சொகுசான வாழ்க்கையொன்றில் நான் வாழத் துடிக்கின்றேன்- சுரேஸ்! “சுயநலம் கொண்டாரே இவ்வுலகில் சொகுசாய் வாழ்வார்;” பொதுநலம் கொண்டோரை பொதுவாக மக்கள் பொருட்டுக்கும் மதியார்;” என்கின்ற சுயநலம் கொண்டோரின் பொருள் பதிந்த வாக்குக்கு அமைய நான் சுயநலம் கொண்டு சுவிஸிலே சொகுசான வாழ்க்கையொன்றை வாழத் துடிக்கிறேன். சுவிஸ் வாழ் [...]

கண்டேன் தலைவனை.. காண்பேன் மறுமுறை! சிலுக்கும் சீமானின் சிறப்புப் பேட்டி!! (மீண்டும் மின்மினிக்காக.. –வாசகர் ஆக்கம்)

கண்டேன் தலைவனை.. காண்பேன் மறுமுறை! சிலுக்கும் சீமானின் சிறப்புப் பேட்டி!! (மீண்டும் மின்மினிக்காக.. –வாசகர் ஆக்கம்)

மின்மினி: வணக்கம் சீமானே, வாழ்த்துக்கள்
சீமான்: வணக்கத்திற்க்கு நன்றி! வாழ்த்துக்கள் எதற்க்கு?
மின்மினி: தலைவரை கட்டியணைத்த கோடியில் ஒருவர்  நீங்கள், உங்களை என் கண்களால் பார்ப்பதே என் முற்பிறப்பு பலன் என கருதுகிறேன்.
சீமான்: ஆமா அது உண்மைதான், கோடியில் ஒருவனாக வேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு.
மின்மினி: தலைவரை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு தோன்றியது எதனால்?
சீமான்: அதுவா! கையில படமுமில்லாம பணமுமில்லாம பரதேசியா அலைஞ்சு திரிஞ்சிட்டு இருந்தபோதுதான் நம்ம பழம் ஜய்யாதான் சொன்னார் உன் வயிற்று பிழைப்புக்கு வழி கிடைக்கும் [...]

பிரபாகரனின் சகோதரி வினோதினியக்காவுக்கு தெரிந்த சம்பவங்களும் அவா சொல்லாமல் மறைத்தவைகளும்.. (நகைச்சுவைக் காவியம்.. -யாவும் கற்பனை) - கி.பாஸ்கரன்

பிரபாகரனின் சகோதரி வினோதினியக்காவுக்கு தெரிந்த சம்பவங்களும் அவா சொல்லாமல் மறைத்தவைகளும்.. (நகைச்சுவைக் காவியம்.. -யாவும் கற்பனை) – கி.பாஸ்கரன்

(கனடாவில் உள்ள பிரபாகரனின் அக்கா வினோதினியுடனான ரெலிபோன் உரையாடல்.. முள்ளிவாய்கால் பிரதேசத்திலிருந்து..) காந்தன்: ஹாலோ.. ஹாலோ.. யார் வினோதினி அக்காவா கதைக்கிறது? (கனடாவில் உள்ள பிரபாகரனின் தங்கை வினோதினியுடன்)
வினோதினி அக்கா: ஓம்…, ஓம்…, நான்தான். நீங்க யார் கதைக்கிறது..? எங்கிருந்து கதைக்கிறீங்க..
காந்தன்:  நான்தானக்கா.., உங்கட சின்னம்மாவோட மகன் ‘காந்தன”; முள்ளிவாய்கால் பிரதேசத்தில் நின்று கதை;கிறன் அக்கா.. என்னை தெரியுதாக்கா…?
வினோதினி அக்கா: அட, நீயா..? தெரியுதுடா.. தெரியதுடா.. முதலில் உன்ர குரல் வடிவாக கேட்கவில்லை. அங்கிருந்து நீ கதைப்பது [...]

எமலோகத்தில் பிரபாகரன்: தமிழீழப் பிரகடனமும், பத்திரிகையாளர் மகாநாடும்..

எமலோகத்தில் பிரபாகரன்: தமிழீழப் பிரகடனமும், பத்திரிகையாளர் மகாநாடும்..

வன்னியில் தமிழீழ அரசாங்கம் நடத்திய அனைவரும் எமலோகத்தில் கூடியிருந்தனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு எமலோகத்தில் ஒரு தமிழீழ அரசாங்கத்தை நடத்துவதற்கு எந்தவித பிரச்சனையும் இருக்கவில்லை. அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் கூட எமலோகத்தில் இருந்தார். தியாகதீபம் திலீபன் பெரு மகிழ்ச்சியில் இருந்தார். நீ முன்னாலை போ நான் பின்னாலை வாறன் என்று சொல்லி தன்னை எமலோகம் அனுப்பிய என்னுடைய ஈகைப் பெருந்தலைவன் எமலோகத்திற்கு வந்து தான் கொடுத்த வாக்கைக் காப்பற்றியுள்ளான். எமலோகத்தில் தலைமை இல்லாமல் தவித்த என்னுடைய குறையைப் போக்கியுள்ளார். [...]

தமிழீழ விடுதலைப்புலிகளின் (முன்னைய) தலைவர் பிரபாகரனுடன் மின்மினியின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!! -வாசகர் ஆக்கம்-

தமிழீழ விடுதலைப்புலிகளின் (முன்னைய) தலைவர் பிரபாகரனுடன் மின்மினியின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!! -வாசகர் ஆக்கம்-

தேசியத்தலைவர் மறைந்து விட்டாரா? அல்லது மறைந்து வாழ்கிறாரா? என்ற மனவேதனையுன் வாழும் புலிவிசுவாசிகளே.. இதோ உங்கள் நெஞ்சங்களுக்கு பால் வார்த்த பெருமை இந்த மின்மினிக்கே சேரும். உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை, நீங்கள் கும்பிட்ட தெய்வங்கள் கைவிடவில்லை..
மின்மினியின் போன் நடுச்சாமத்தில் அலறியபோது மின்மினிக்கு மிகவும் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தாலும் ஏதும் முக்கியமான போனாய் இருக்கலாம் என நினைத்து ரிசீவரை காதில் வைத்தபோது யாரு மின்மினியா பேசுறது? என்ற அந்த குரலை மின்மினிக்கு எங்கேயோ கேட்ட குரல் மாதிரி [...]