தமிழ்க் கட்சிகளிடையேயான இன்றைய சந்திப்பு தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து..!
தமிழ்க் கட்சிகளிடையேயான இன்றைய சந்திப்பு தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து..!
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுகாலை இரண்டாவது தடவையாக கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. அத்துடன் மீண்டும் எதிர்வரும் ஏழாம் திகதி கூடுவதென்றும் அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா), [...]
உள்ளதைச் சொல்லுகிறேன் – ஊர்க்குருவி..!
உள்ளதைச் சொல்லுகிறேன் – ஊர்க்குருவி
உலகத்தலைவன் என்னும் பாணியில் உள்ளதைச் சொல்லுகிறேன் என்று வந்து விட்டானே என்று அங்கலாய்க்காதீர்கள். உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பலரும் பல கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் பார்வ்வைக்குப் பார்வை காட்சிகள் வித்தியாசப்படுகின்றன. நாம் காணும் காட்சியை எப்படி பார்க்க விரும்புகிறோமோ அப்படியே பார்க்கத் தலைப்படுகிறோம். அது தவறில்லை ஆனால் அந்தப் பார்வைக்கு நாம் கற்பித்த அர்த்தத்தை மற்றவர் மீது திணிக்கத் தலைப்படும் போதுதான் நிலமை மோசமடைகிறது. அந்தத் திணிப்புகள் வெறும் திணிப்புகளாக மட்டும் இருந்து விடாது [...]
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 08-04-2010 இல் நடந்தேறிய பொதுத்தேர்தல் சம்பந்தமான அறிக்கை
தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வடக்கு கிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என்று”, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் பகிரங்க வேண்டுகோள் எனக்கு ஆச்சரியத்தை தராது போனாலும் நல்லதோர் நகைச்சுவையாகவே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பு இவ் ஆர்வத்தை காட்டியிருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். அவரிலும் சிரேஷ்ட அரசியல்வாதி நான். தேர்தலுக்கு முன்பு பத்து அம்சங்கள் கொண்ட பிரேரணையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செயற்படலாமெனவும் புதிய பிரேரணைகள் இருப்பின் [...]
ஈ.பி.டி.பி. மீது களங்கம் ஏற்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிகள் கப்பம் கோருவோர் அச்சுறுத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! -ஈ.பி.டி.பி. (அறிக்கை)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொலைபேசியூடாக பொதுமக்களிடம் கப்பம் கோரியும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தும் வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எமது மக்களுக்கான நேர்வழியைக் காட்டி எமது மக்களை கடந்தகால துன்ப துயரங்களில் இருந்து மீட்டெடுக்கும் எமது கட்சியின் மக்கள் நலன்சார்ந்த பணிகளைப் பொறுத்துக் கொள்ளாத எமது மக்களைத் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் ஆழ்த்தி அதன்மூலம் தங்களது [...]
தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைததுத் தமிழ் அரச ஊழியர்கள், மேலும் தமிழ் அரசியற் கட்சிகள் போனறவற்றின் கவனத்திற்கு…!!
தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக் கட்டமைப்பு, அழிக்கப்பட் நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரேதேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக்கட்டாய உட்செலுத்தல்கள் இடம் பெறுகின்றமையும், தமிழர்களின் நிலத்தில் தேவையற்ற “புத்தர்” சிலைகளை அமைப்பதும், தமிழ் சரித்திரத்தை ஒதுக்கி புதிய நினைவுச்சின்னங்களை அரசுசார்பில் அதிலும், சிங்கள பண்பாட்டில் அமைப்பது போன்றன முறையற்றது என்று தமிழர்களாகிய தங்களுக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!!!
இதற்கு “நாங்கள் என்ன செய்ய???” என்று [...]
சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈபிஆர்எல்எப் -பத்மநாபா அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நேற்று சனிக்கிழமை காலை மேதின ஊர்வலம் நடைபெற்றது. காலை 10மணிக்கு சுவிஸ் கெல்வெத்தியா பிளாத்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பமான புளொட் இயக்கத்தின் மேதின ஊர்வலம் பெல்வி என்னும் இடத்தில் நிறைவடைந்தது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெண்கள் குழந்தைகள் கழகதோழர்கள் கழக ஆதரவாளர்களும் கலந்து கொன்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.. மேற்படி மேதின ஊர்வலத்தில் புளொட் [...]
சுவிஸ் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” செயற்பாடுகளில் இருந்து ஓராண்டுக்கு ரமணன் என்பவர் அவ்வமைப்பால் நீக்கம்!!
சுவிஸ் நாட்டில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் எனும் அமைப்பால் கடந்த பத்து தினங்களுக்கு முன் ஓர் கலைநிகழ்வொன்று எந்தவொரு அரசியல் செயற்பாடுகளுக்குமோ அன்றில் எந்தவொரு இயக்கங்கள் சார்பாகவோ நடைபெறாது எமது புங்குடுதீவு மண்ணுக்காகவும் புஙகுடுதீவில் உள்ள மக்களுக்காகவுமே நடைபெறும் எனும் அறிவித்தல்களுக்கு அமைய பலரது ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இருப்பினும் இந்நிகழ்வில் இறுதியாக நாடகமொன்றை தயாரித்து அளித்த ரமணன் என்பவர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளை மீறி நடந்து கொண்டதுடன் அரசியல் பேச்சு மட்டுமல்லாமல் [...]
ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும் 57வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் சுவிஸ்வாழ் தமிழ், சிங்கள மக்களுடன் கலந்துரையாடல்..! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும், வன்னிச் சமரின்போது 57வது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிச் சென்றவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்களுக்கும் சுவிஸிலுள்ள தமிழ் சிங்கள மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் சூரிச் மாநகரில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமிழ் சிங்களப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலை ஆரம்பித்துக் கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், வன்னிப் போரின் போது தம்மால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் [...]
சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் தமிழ் திருமணவிழாவில் குடும்ப மோதல் பற்றி சமூகத்தினரிடையே அதிருப்தி
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்திலுள்ள அரோ மாநிலத்தில் தமிழ் திருமண வைபவமொன்றில் குடும்ப உறவுகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயமடைந்ததுடன், 44வயதான ஒருவர் சுவிஸ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதுபற்றி அதிரடி இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலில் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்து அரோ மாநிலத்தில் வடமாகாணத்தின் பிரபல்யமான ஊரொன்றைச் சேர்ந்த குடும்பத்தின் திருமண வைபவமொன்று நடைபெற்றுள்ளது. இவ்வைபவத்தின் போது அதே ஊரைச் சேர்ந்த அவர்களின் நெருங்கிய உறவினர்களான சகோதர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையில் [...]
புத்தள ஐக்கிய தேசிய முன்னணியின் அபேட்சகர் டி.எம்.இஸ்மாயில் ஹாஜியார் அவர்கள் மீண்டும் புத்தளம் பிரதியமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்!… (அறிக்கை)
புத்தள ஐக்கிய தேசிய முன்னணியின் அபேட்சகர் டி.எம்.இஸ்மாயில் ஹாஜியார் அவர்கள் மீண்டும் புத்தளம் பிரதியமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இச்சம்பவம் கடந்த 14ம் திகதி பிற்பகல் 3.00மணியளவில் புத்தளத்தை அண்டிய பகுதியான கட்டக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அபேட்சகர் இஸ்மாயில் ஹாஜியார் அவர்கள்…. நான் என்னுடைய வாகனத்தில் எனது ஆதரவாளர்களுடன் மேற்படி பிரதேசத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தேன். எங்களுடைய ஆதரவாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு அப்பிரதேச பிரதிஅமைச்சர் ஒருவரின் குண்டர்கள் எனக் [...]
“தேர்தலும் எங்கள் நிலைப்பாடுகளும்”.. எனும் தலைப்பில் ஈரோஸ் அமைப்பு சார்பாக பொதுக்குழு உறுப்பினர் ம.சக்தி விடுத்திருக்கும் அறிக்கை..!
கடந்தகால செயற்பாடுகள் அனுபவங்களிலிருந்து அவற்றைப் பக்கச் சார்பற்ற ரீதியில் மீள்சிந்தனைக்கு உட்படுத்தி அவற்றிலிருந்து நடைமுறைக்கு செல்வது பொருத்தமான காரியமாக அமையுமென்பதால் நாம் இத்தேர்தலில் இருந்து விலகியிருக்க விரும்புகின்றோம். திருமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட நேரிடும் என்ற காரணத்தினால் இன்றைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாராளுமன்றத்தில் தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதுடன், இத்தேர்தல் மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு எந்தவிதமான தீர்வும் எட்டப்படாதென ஈரோஸ் அமைப்பினராகிய [...]
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் மாவட்ட பிரதேசங்களுக்கு விஜயம்.. (புகைப்படங்கள் இணைப்பு)!
நேற்றைய தினம் மன்னார் மாவட்ட முருங்கன், அடம்பன், உயிலங்குளம், மாந்தைகிழக்கு, பாப்பாமோட்டை, காத்தான்குளம் உட்பட பல பகுதிகளுக்கு புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் குழு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது. மேற்படி பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த புளொட் பிரதிநிதிகள் குழு அங்குள்ள மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். புளொட் தலைவர் சித்தார்த்தனுடன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா [...]
சர்வதேசத்திற்கு பயந்து பிரபாகரனை உயிருடன் பிடித்து அவருடன் பேசியிருந்தால் பிள்ளையான், கருணாஅம்மான் போல் பிரபாகரனுக்கும் முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும்… -சரத் பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவால் தென் இலங்கை மக்களிடையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்ட கை ஏட்டின் தமிழாக்கம்.. இரண்டாம் போர்…. என் அன்பார்ந்த இலங்கை மக்களே, முப்பது வருட காலமாக இலங்கையில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து மக்களுக்கு சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருக்கும் அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எமது நாட்டில் சர்வாதிகாரம் பெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையில்லாத அதிகாரத்தை அவர் தவறான செயலில் ஈடுபடுவதனாலேயாகும். நான் இத் தேர்தலுக்கு போட்டியிட காரணம், நாட்டை [...]
பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி முன்வைத்துள்ள கோரிக்கை- (விரிவான அறிக்கை)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி 15 அம்ச கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அது தொடர்பாக கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போதைய அரசியல் நிலைமையை மிக்க அவதானத்துடன் பரிசீலித்து ஜனாதிபதி அவர்களுக்கும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கும் இவர்களில் யார் வெற்றிபெற்றாலும் அதனை அமுல்படுத்துமாறு 15 அம்ச கோரிக்கையை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைக்கும் கோரிக்கைகள் புதியவையல்ல. அவை சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி [...]
“கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி அமைப்பு” என்ற பெயரில் ஒரு அமைப்பு!.. கிளிநொச்சி வாழ் மக்களே விழித்தெழுங்கள்.. (அம்பலத்துக்கு வரும் அந்தரங்கங்கள்..!!)
அண்மையில் அதாவது, 16.12.2009 புதன்கிழமை வீரகேசரியில் ஒரு செய்தி பிரசுரமாகியிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக ஸ்ரீதரன் என்பவர் உள்ளதாகவும், அத்துடன் வட மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் அரியரத்தினம், கரச்சி பிரதேசசபை விசேட ஆணையாளர் பொன். நித்தியானந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் யோகநாதன், தர்மரத்தினம், வேழமாலிகிதன. அமல் போன்றோர் கலந்து கொண்டதாகவும், அச்செய்தி தொடர்கிறது..
யார் இந்த ஸ்ரீதரன்?.. பிரபாகரனின், கல்வி நடவடிக்கைகளின் இணைப்பாளர் [...]
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! (புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை 2009)
இன்று மாவீரர் நாள்.. இந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் இப் புனிதநாளில் நான் என்ன செய்தியை உங்களுக்கு சொல்ல போகிறேன் என்பதையிட்டு நீங்கள் எல்லோரும் மிகுந்த ஆவலாக கடந்த மே மாதம் 17 திகதியிலிருந்து காத்துக் கிடக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன். எம்முடைய தமிழீழ பெரும் தேசத்தை மீட்டு, தமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நான் நினைவு கூர்ந்து, அவர்களை கௌரவிப்பதற்கு எனக்கு [...]
சுவிஸில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பொதுமக்களுடனான சந்திப்பு- (விரிவான செய்தி.. புகைப்படங்களுடன்)
சுவிஸில் இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (22.11.2009) சூரிச் மாநகரில் புளொட் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான பொதுக் கூட்டமொன்றினை நடத்தியிருந்தார். இதில் பெருந்தொகையான மக்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பல புலி ஆதரவாளர்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது இலங்கையில் தற்போது இருக்கின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் பற்றியும், மீள்குடியேற்றங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் புளொட் தலைவர் [...]
புலிகளின் சுவிஸ் கிளையின் புதிய தலைவராக ரகு (பாண்டியன்) நியமிக்கப்பட்டுள்ளார்..!! (சுவிஸ் புலிகளின் அம்பலத்திற்கு வரும் அந்தரங்கங்கள்..)
சுவிஸ் கிளையின் புதிய தலைவராக லவுசானில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தவரின் தம்பி ரகு (பாண்டியன்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு போராளியாக புலத்திலிருந்தே இணைத்துக் கொண்டவர். விடுதலைப் போராட்டத்தையும், வெளிநாட்டுக் கிளைகளையும் வெளிநாடுகளில் நாசமாக்கியவர் என பேசப்படும்; கஸ்ரோவின் நம்பிக்கைக்குரியவர். ஆரம்பத்தில் இவர் ரிரிஎன் தொலைக்காட்சிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சில நாட்களிலேயே ரிரிஎன் தொலைக்காட்சியை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. இவருடைய கடும்போக்கும், அடாவடித்தனமுமே இந்நிலையை தோற்றுவித்தது. தேசியத்தலைவரின் மரணத்திற்குப் பின்னர் வெளிநாட்டுக் கிளைகள் அனைத்தும் [...]
மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர் என்ற தலைப்பில் கனடாவில் புளொட் துண்டுபிரசுரம்!
கனடாவின் ரொறன்ரோ, மொன்றியல் மாநிலங்களில் புளொட் இயக்கத்தின் கனடா கிளையினரால் துண்டு பிரசுரம் ஒன்று வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. போராட்டம் என்ற பெயரில் கனடாவில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை கண்டித்துள்ளதுடன் போராட்டத்திற்காக தம்முயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்கள், போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவ் துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் சனிக்கிழமை மாலைவரை 10,000க்கு மேற்பட்ட பிரதிகள் வரை விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதனை பொதுமக்களும், வர்த்தகர்களும் ஆர்வத்துடன் வாங்கி தமது ஆதரவினை புளொட் இயக்கத்தினருக்கு [...]
ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள் போராளி பத்மநாபா -தோழர் ஜேம்ஸ் (அறிக்கை)
தோழர் பத்மநாபாவின் 57 வது பிறந்த தினம் 19.11.09 ஆகும். சோதனைகளுடன் நிறைந்த சாதனையாளராக வாழ்ந்ததே அவரின் வாழ்க்கை முறை. மத்திய தர குடும்பத்தில் சகோதரிகளுடன் தனி ஒரு ஆண்மகனாக பிறந்தவரே பத்மநாபா தனது இளம்பிராயத்திலேயே மனித குலத்தின் விடுதலைக்கான சிந்தனையின் பால் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். தமிழ் இளைஞர் பேரவையில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இனைஞர் பேரவையை தனது இளைஞர் அணியாக பாவித்து தமது பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்ப [...]
புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவின் இறுதி நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள்..
கடந்த 30.10.2009அன்று பிரான்ஸில் அகாலமரணமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவிற்கு (இராஜமனோகரன் பிரபாகரன்) இறுதி அஞ்சலி நிகழ்வுகளும் இறுதிக் கிரியைகளும் 12.11.09ல் பிரான்ஸில் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடியானது கழகத் தோழர்களான சாலிரவி (பிரான்ஸ்), சுகுமார் (பிரான்ஸ்), யூட் (ஜேர்மன்), அப்பன் (ஜேர்மன்) ஆகியோரினால் தோழர் பிரபாவின் பூதவுடல்மீது போர்க்கப்பட்டு கழக மரியாதையும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானது. புளொட் தோழர்கள், [...]
பதவி விலகுவதற்கான சரத் பொன்சேகாவின் பதினாறு ஷரத்துக்கள்…
முப்படைகளின் பிரதானி என்ற பதவியிலிருந்தும், சிறிலங்கா இராணுவத்திலிருந்தும், பதவி விலகுவதற்கான இராஜினாமாக் கடிதத்தை சிறிலங்கா ஜனாபதிக்கு நேற்று அனுப்பிவைத்தார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இவரது ராஜினாமா கடிதம் கிடைத்ததை ஜனாதிபதிச் செயலகம் உறுதி செய்திருந்தது. அவரது பதவி விலகலுக்கான காரணங்களாக பதினாறு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதினாறு காரணங்களும் இப்போது ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளது. சரத் பொன்சேகா ஜனாதிபதி மீது தொடுத்திருக்கும் கனைச் சரங்களாகவோ , அல்லது குற்றச் ஷரத்துக்களாகவோ கறிப்பிடக் கூடிய [...]
புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவின் இறுதி நிகழ்வுகள்..
கடந்த 30.10.2009அன்று பிரான்ஸில் அகாலமரணமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவிற்கு (இராஜமனோகரன் பிரபாகரன்) இறுதி அஞ்சலி நிகழ்வுகளும் இறுதிக் கிரியைகளும் இன்றையதினம் பிரான்ஸில் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடியானது கழகத் தோழர்களான சாலிரவி (பிரான்ஸ்), சுகுமார் (பிரான்ஸ்), யூட் (ஜேர்மன்), அப்பன் (ஜேர்மன்) ஆகியோரினால் தோழர் பிரபாவின் பூதவுடல்மீது போர்க்கப்பட்டு கழக மரியாதையும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானது. புளொட் தோழர்கள், [...]
புளொட் பிரான்ஸ் அமைப்பாளர் பிரபாவின் அஞ்சலி நிகழ்வுகள் புளொட் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில்..
கடந்த 30.10.2009 அன்று பிரான்ஸில் அகால மரணமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட அங்கத்தவரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளருமான யாழ். வடமராட்சி பொலிகண்டிப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தோழர்.பிரபாவின் (இராஜமனோகரன் பிரபாகரன்) அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன. கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் தலைமைக் காரியாலயகத்தில் புளொட் அமைப்பின் தலைவர் த.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இன்றுபிற்பகல் 12.30அளவில் தோழர் பிரபாவிற்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டமும் [...]
கண்ணீர் அஞ்சலி..!! (புளொட் பிரான்ஸ் அமைப்பாளர் ராஜமனோகரன் பிரபாகரனுக்கு புளொட் சர்வதேச ஒன்றியம் சார்பான அறிக்கை) // தோழனே பிரபா…
இனத்தின் துயர் கண்டு விடுதலை கேட்டோம். இன விரோதிகளால் எமது பாதை தடைப்பட்டது. ஆனாலும் தடை தாண்டிப் பயணிக்க நாம் பட்ட வேதனைகள் சோதனைகள் எத்தனை? தளத்திலும்இ பின் புலம் பெயர்ந்த இன்றைய நிலையிலும் அயராது தோள் தந்த தோழனே இன்று திடீரென எம்மைப் பிரிந்ததேன்? உன் தேவைஇ எம் தமிழ் உலகுக்கும் உன் இனிய குடும்பத்திற்கும் இன்றும் இருக்கும் போதுஇ எப்படி நீ பிரிந்தாயோ! விண்ணுலகில் உன் சேவை தேவைப் பட்டதால் விரைந்து சென்றாயோ? உன் [...]
புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்துடன் ஓர் அறிவித்தல்!! (கற்பனை தான் ஆனால் நிஐமாகலாம்.. -வாசகர் ஆக்கம்-)
தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் 2009 ஆம் அண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் தின விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் உலகின் அனைத்து நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற ஈழத் தமிழர்களுக்கு அறியத் தருகின்றோம்.. எமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், நவம்பர் மாத 27ஆம் திகதி நடைபெறவிருக்கும் ‘மாவீரர் தினவிழா”வில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், [...]
துயர் பகிர்வோம்.. !!! (புளொட் பிரான்ஸ்கிளை அமைப்பாளர் தோழர்பிரபாவின் இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்..!)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளருமான தோழர்.பிரபா அவர்கள், 30.10.2009 அன்று அகால மரணமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் ராஐமனோகரன் பரமேஸ்வரி ஆகியோரின் புதல்வரும், இவர் முரளிகரன் (பிரான்ஸ்-00336.66289603) கிருபாகரன் (இந்தியா) ஆகியோரின் சகோதரரும் ஆவார். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட தோழர், நண்பர்களாலும், கழகத் தோழர்களாலும் பிரபா என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். [...]
“கிழக்கின் பிரச்சினை” தொடர்பாக அதிரடியில் வெளியான.. “சாம்பலுக்குள் கணன்று கொண்டிருக்கும் சண்டை..” என்று தொடங்கும் கட்டுரையினை.. கருணாஅம்மான் சார்பு ஊடகமொன்றில் விமர்சித்திருந்த அன்பருக்கான அதிரடியின் பதில்..!!
“தமிழர்களின் எதிரியும், அழிவின் காரண கர்த்தாவும் தமிழர்களேயன்றி சிங்களவர்களல்ல” என்னும் தலைப்பில் ஒரு அரைகுறை ஆக்கத்தினை எழுதி.. அதிரடியில் பிரசுரமான கட்டுரைக்கு மிரட்டல் பாணியில் பதில் தந்திருந்த எம்.. உடன் பிறவாத அன்பருக்கு.. எமது அதிரடி இணையமானது, எப்போது ஆரம்பித்ததோ அன்றைய நாள் தொடக்கம் இன்றைய நாள்வரை கொண்ட கொள்கையினை ஒருபோதும் மாற்றிக் கொண்டது கிடையாது. அதேபோன்று யாருடையவும் வெங்காய மிரட்டல்களுக்கும், அதற்றல்களுக்கும் அடிபணிந்ததும் கிடையாது. யாருடைய தயவிலோ, யாருடைய பணத்திலோ, யாருடைய புகழிலோ தங்கியிருக்கும் இணையமும் [...]
புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் யாழ். விஜயம்.. (புகைப்படங்கள் இணைப்பு)
புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகரபிதாவும், வவுனியா நகரசபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினரான எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் வவுனியா நகரசபை செயலர் ஜெயராஜ் உள்ளிட்ட குழுவினர் இருநாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். இவர்களின் இந்த விஜயமானது நேற்றும் நேற்று முன்தினமுமான 18ம் 19ம் திகதிகளில் அமைந்திருந்தது. வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் யாழ். மத்திய கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்விலும் இவர்கள் [...]
சுத்துமாத்து சுவிஸ்சுரேசின் அடிப்படை ஆதாரமற்ற மேடைப் பேச்சு..!! –புங்கையூர் உண்மைவிளம்பிகள்!!
புங்குடுதீவு சுரேஸ_ம் அவரது கூட்டாளிகளுமாக சேர்ந்து இடம்பெயர்ந்த மக்களின் அவலங்கள் தொடர்பிலும் மற்றும் மேல்மருவத்தூர் அம்மன்கோவில் மற்றும் புங்குடுதீவு மக்களுக்கான உதவி என்ற பெயரில் பிரச்சாரங்களை முன்னெடுத்தும் பெருமளவு சுவிஸ் பிராங்குகளை வசூலித்து சுருட்டி வந்தமை தொடர்பிலான உண்மைத் தகவல்களை அதிரடி இணையம் உட்பட பல இணையத்தளங்கள் அம்பலப்படுத்தி வந்தது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சுவிஸில் வன்னி மக்களுக்கான இறுவெட்டு வெளியீடு எனும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்த இந்த சுரேஸ், தனது சுத்துமாத்துத் தனங்களை முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் [...]
“சுவிஸ்சுரேஸ்” சுத்துமாத்துப் பேர்வழி என்கிறது அறங்காவலர் சங்கம்..!
புலிமுகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவைச் சேர்ந்த சுவிஸ்சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக கூறி பணவசூலில் ஈடுபட்டமை. புங்குடுதீவுக்கும் புங்குடுதீவு வாழ்மக்களுக்கும் உதவப் போவதாக கூறிக்கொண்டு புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை. மேல் மருவத்தூர் அம்மன் கோயிலை சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை. தடுப்பு [...]
புங்குடுதீவை சேர்ந்தவரான சுவிஸ்சுரேஸ் என்பவர் தொடர்பாக “அதிரடி” இணையத்தளம் சார்பாக..
புலி முகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவை சேர்ந்தவரான சுவிஸ்சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக சொல்லிக் கொண்டு பணப் பிடுங்கல்களில் ஈடுபட்டு வருகின்றமை, புங்குடுதீவுக்கும் புங்குடுதீவு வாழ்மக்களுக்கும் உதவப்போவதாக கூறிக்கொண்டு “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கி புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, “மேல் மருவத்தூர் அம்மன் [...]
போலிகளின் பூச்சாண்டிச் (புங்குடுதீவு சுரேஸ்) செயல்களுக்கு பயம் கொள்ள மாட்டோம்! -சுவிஸ்வாழ் புங்கையூர் மக்கள் ஒன்றியம்
நாங்கள் அறிந்தவரை “புங்குடுதீவு சுரேஸ்” என்பவர் தன்னைப்பற்றி ஊடகங்களில் (இணையத்தளங்களில்) பரவிய செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானவை என்றும் தான் வழக்கு தொடரப் போவதாக தனது நண்பர்களுக்கு சொல்லித் திரிவதாக அறிகின்றோம். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சட்டுகள் பொய்யானவையென்றால், அவர் முதலில் தனக்கு எதிராக வந்த அறிக்கைக்கு மறுப்பறிக்கையை சம்மந்தப்பட்ட ஊடகங்களுக்கு தனது சார்பாக வெளியிட வேண்டும். அல்லாவிட்டால் அவரின் ‘நம்பகத்தன்மை” சந்தேகத்துரியவையாகும். அவர் ‘அதிரடி இணைய” தளத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தால் அவருக்கு எதிராக சாட்சி [...]
புலம்பெயர் சுவிஸ் வாழ் தமிழர்களே! ஏமாறாதே! ஏமாறாதே! உன்னை ஏமாற்றுபவனை ஏறிமிதித்து அவன் முகத்தில் உமிழ்ந்துவிடு!! -வன்னி வாழ் தமிழர்கள்
கடந்த 29.09.209 அன்று அதிரடியில் பிரசுரிகப்பட்டிருந்த ‘சுவிஸ் வாழ் தமிழ் மக்களே மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்!! புறப்பட்டு விட்டான் (புங்குடுதீவு) சுவிஸ் சுரேஸ்!! என்ற அறிக்கை மூலம் சுரேஸ் என்பவரால் நீண்ட காலங்களாக சுவிஸில் நடத்தப்பட்ட, நடத்த படவிருந்த தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ‘தந்திரமான” நிகழ்ச்சிகளின் உண்மைத்தன்மையை முழு விபரங்களுடன் தமிழர்களின் நலன்கள் சார்பாக இயங்கும் இணையத்தளங்கள் பிரசுரித்து, அவரின் லீலைகளை துகிலுரித்து காட்டி சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் இவரை போன்ற போலி ஆசாமிகளின் [...]
முதன்முறையாக சுவிஸ் புலிகளிடையே நேரடிக் கைகலப்பு! அம்பலத்திற்கு வரும் அந்தரங்கங்கள்!!
புலிகளின் புதிய தலைவராக தன்னைப் பிரகடனப் படுத்தியிருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதனின் ஆதரவாளரான இதுவரை காலமும் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளைக்குப் பொறுப்பாளராக செயற்பட்டு வந்த குலம் மற்றும் அவரது ஆதரவாளராக இயங்கிவந்த புலிகளின் சூரிச் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயம் உள்ளிட்ட குழுவினருக்கும், புலிகள் அமைப்புக்கு தானே தலைவரென இரகசியமாகப் பிரகடனப்படுத்தி நோர்வேயிலிருந்து செயற்படும் நெடியவனின் ஆதரவாளர்களான புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை நிதிப் பொறுப்பாளர்களான அப்துல்லா, மாம்பழம், லவுசான் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு அல்லது [...]
அன்பார்ந்த நோர்வே வாழ் தமிழ் மக்களே சிந்தித்து செயற்படுங்கள்!! –புளொட் நோர்வேக் கிளை!
எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகபிரதிநித்துவ, மந்தைத் தத்துவத்தினால் இன்று எமது தாயக மண்ணில் ஏற்படுத்தியுள்ள அவலநிலை என்ன என்பதை சற்று சிந்திப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின், குழந்தைகளின், அப்பாவி மக்களின், சொந்தங்கள் சுற்றத்தினரின் உயிர்களை காவுகொண்ட இந்த திசைதவறிய ஆயுதப்போராட்டம் பல கோடி சொத்தழிவையும், என்றும் எம்தினத்தின் பெருமைக்குரிய அழியாச் செல்வமாகவும் அடையாளமுமாக இருந்த கல்வி வளத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி முட்கம்பி வேலிகளுக்குள் உணவுக்காக கையேந்தும் ஒரு இழிநிலையில் [...]
சுவிஸ்வாழ் தமிழ்மக்களே மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்!! ‘மீண்டும் புறப்பட்டு விட்டான் “(புங்குடுதீவு) சுவிஸ் சுரேஸ்”..!!!
முள்ளிவாய்கால் பிரதேசத்தில் ரணகளத்தில் சிக்குப்பட்டு இரத்தமும் சதையுமாய் குற்றுயிராய் கிடந்தவர்களையும், பிணங்களாய் கிடப்பவர்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து, மரண ஓலமிடும் மனிதர்களை கூட நின்றுகூட பார்க்க நேரமில்லாமல் ஒவ்வொருவரும் தமது உயிர்;களை கையில் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் உயிர்போகின்ற நிலைமையிலிருந்து மீண்டு, எங்கோ ஓர் திக்குதிசை தெரியாமல் ஓடி, யாரோ நமது உயிர்களை காப்பாற்ற போகிறார்கள் என்றெண்னி ஒடிவந்த மக்கள் இன்று.. வெறும் உயிருடன் மனம் வெதும்பி துன்பம் மிகவுழன்று, துயர் நிறைந்த வாழ்கையில் மீண்டும் [...]
“நாடுகடந்த தமிழீழம்” தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் கனடாவில் புளொட் துண்டுபிரசுரம்! (முதன்முறையாக புலிகளால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் கனடாவில் வினியோகம்..)
நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் என்று புலிகள் [...]
