அதிரடியின் குரல்

ஆயுதம் தூக்கிய யாருமே உத்தமர்களில்லை.. –தாய்லாந்து நண்பர்கள்! // ஊடகதர்மம் என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.. –அதிரடி!

ஆயுதம் தூக்கிய யாருமே உத்தமர்களில்லை.. –தாய்லாந்து நண்பர்கள்! // ஊடகதர்மம் என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.. –அதிரடி!

ஆயுதம் தூக்கிய யாருமே உத்தமர்களில்லை.. –தாய்லாந்து நண்பர்கள்! திருவாளர் கிழக்கான் ஆதம் அவர்களே! உங்கள் விமர்சனத்திற்கு எமது நன்றி! எங்களை பொறுத்தவரையில் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தபட்டவர்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்காக எதோ ஒருவகையில் போராடி மரணித்தவர்களே. அவர்கள் மக்களுக்காக போராட முன்வராமல் இருந்திருந்தால் நீங்களோ அல்லது தமிழ் மக்கள் யாருமே இவர்களை அறிந்திருக்க முடியாது.  இவர்களில் யார் உத்தமர் யார் உத்தமரில்லை என்பதை யாரும் வரையறுத்து சொல்ல முடியாது. நீங்கள் படித்திருக்கிறீர்களா?.. ஒரு பெண் குற்றம் இழைத்து [...]

“கிழக்கின் பிரச்சினை” தொடர்பாக அதிரடியில் வெளியான.. “சாம்பலுக்குள் கணன்று கொண்டிருக்கும் சண்டை..” என்று தொடங்கும் கட்டுரையினை.. கருணாஅம்மான் சார்பு ஊடகமொன்றில் விமர்சித்திருந்த அன்பருக்கான அதிரடியின் பதில்..!!

“தமிழர்களின் எதிரியும், அழிவின் காரண கர்த்தாவும் தமிழர்களேயன்றி சிங்களவர்களல்ல” என்னும் தலைப்பில் ஒரு அரைகுறை ஆக்கத்தினை எழுதி.. அதிரடியில் பிரசுரமான கட்டுரைக்கு மிரட்டல் பாணியில் பதில் தந்திருந்த எம்.. உடன் பிறவாத அன்பருக்கு.. எமது அதிரடி இணையமானது, எப்போது ஆரம்பித்ததோ அன்றைய நாள் தொடக்கம் இன்றைய நாள்வரை கொண்ட கொள்கையினை ஒருபோதும் மாற்றிக் கொண்டது கிடையாது. அதேபோன்று யாருடையவும் வெங்காய மிரட்டல்களுக்கும், அதற்றல்களுக்கும் அடிபணிந்ததும் கிடையாது. யாருடைய தயவிலோ, யாருடைய பணத்திலோ, யாருடைய புகழிலோ தங்கியிருக்கும் இணையமும் [...]

புங்குடுதீவை சேர்ந்தவரான சுவிஸ்சுரேஸ் என்பவர் தொடர்பாக “அதிரடி” இணையத்தளம் சார்பாக..

புங்குடுதீவை சேர்ந்தவரான சுவிஸ்சுரேஸ் என்பவர் தொடர்பாக “அதிரடி” இணையத்தளம் சார்பாக..

புலி முகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவை சேர்ந்தவரான சுவிஸ்சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக சொல்லிக் கொண்டு பணப் பிடுங்கல்களில் ஈடுபட்டு வருகின்றமை, புங்குடுதீவுக்கும் புங்குடுதீவு வாழ்மக்களுக்கும் உதவப்போவதாக கூறிக்கொண்டு “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கி  புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, “மேல் மருவத்தூர் அம்மன் [...]

கிழக்கின் விடிவெள்ளிகள் உட்பட அதிரடி வாசகர்கள் அனைவரினதும் கவனத்திற்கு..! (அதிரடியின் குரல்)

கிழக்கின் விடிவெள்ளிகள் உட்பட அதிரடி வாசகர்கள் அனைவரினதும் கவனத்திற்கு..! (அதிரடியின் குரல்)

அதிரடி இணையமானது ஆரம்பகாலம் முதல் இன்றுவரையில் எந்தவொரு பக்கச்சார்பும் அற்று, எவர் தவறிழைத்தாலும் அதனைச் சுட்டிக் காட்டவும் தயங்காது தொடர்ந்து செயலாற்றி வருகின்றமை நீங்கள் அறிந்ததே. அந்த வகையில் நாம் ஆரம்ப காலத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணாஅம்மானின் ரி.எம்.வி.பி அமைப்பினரை முழுமையாக ஆதரித்து அவர்களது செய்திகள், அறிக்கைகள், கட்டுரைகள், புகைப்படங்கள் என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வந்ததும் நீங்கள் அறிந்ததே. ஆயினும் காலப்போக்கில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்பாக [...]

பிரான்ஸில் நடந்தது என்ன?? புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்வின் இணையதளத்தில் மீண்டுமொரு பொய்யான செய்தி அம்பலத்திற்கு வருகின்றது..!

பிரான்ஸில் நடந்தது என்ன?? புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்வின் இணையதளத்தில் மீண்டுமொரு பொய்யான செய்தி அம்பலத்திற்கு வருகின்றது..!

புலிகளின் தமிழ்வின் இணையமானது நேற்று வெளியிட்டிருந்த தனது செய்தியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லாச்சப்பல் பகுதியில் நேற்று முன்தினம் ஈ.பி.டி.பி, புளொட் ஆகிய துணை இராணுவக் குழுக்களால் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் வீரமக்கள் தின சுவரொட்டி ஒட்டியிருந்ததாகவும், அதனைக் கிழிந்தெறிந்த வர்த்தகர்களிடம் பலாத்காரமாக தண்டப்பணம் பெறப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இது குறித்து அதிரடி இணையத்திற்கு பிரான்ஸிலிருந்து கிடைக்கப் பெற்ற உண்மைத் தகவல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சனிக்கிழமை காலையில் புளொட் ஆதரவாளர்கள் மற்றும் புளொட் உறுப்பினர்களால் பாரிஸ் லாச்சப்பல் பகுதியிலுள்ள [...]

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) // தமிழ்வின் (லங்காசிறி) இணையதளத்தின் பொய்யான செய்திக்கு அதிரடியின் வன்மையான கண்டனம்!!

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) // தமிழ்வின் (லங்காசிறி) இணையதளத்தின் பொய்யான செய்திக்கு அதிரடியின் வன்மையான கண்டனம்!!

மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது. குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது. பிரபாகரனின் மகன் [...]

சூடுபிடிக்கவிருக்கும் வடபகுதி தேர்தல் களமும்.. வாடிவிடாது இருக்க வேண்டிய தமிழ் வாக்காளர்களும்.. (அதிரடியின் குரல்)

சூடுபிடிக்கவிருக்கும் வடபகுதி தேர்தல் களமும்.. வாடிவிடாது இருக்க வேண்டிய தமிழ் வாக்காளர்களும்.. (அதிரடியின் குரல்)

யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கென நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்களெல்லாம் கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை நன்பகலுடன் முடிந்தாகிவிட்டது. இனி இருப்பதெல்லாம், அரசியல் கட்சிகளின் அதிகப்பிரசங்கித்தனங்களும், அராஜகங்களும், பொய்களும், புரட்டுகளும், போஷ்டர்களும், பிரச்சாரங்களும் தான் என்பது அறிந்ததே. அரசியல் கட்சிகள் எந்தத் தயார்படுத்தல்களிலும் ஈடுபட்டிருக்காத தருணத்தில், மிகவும் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் இது என்பதினாலும், பல்வேறு கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் ஒரு தேர்தல்களம் இது என்பதினாலும் இத்தேர்தல் பலமுனைப் போட்டியொன்றைக் கொண்டிருக்கும் [...]

போர்க்களமொன்றில் உயிரெடுப்பதா குறி? உடையெடுப்பதா குறி?? அசிங்கங்களை மேற்கொள்ளும் ஆட்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே..!! (குறிப்பாக இப்புகைப்படங்களை சிறுவர்கள், பார்வையிட வேண்டாம்!!) -புகைப்படங்கள் இணைப்பு-

போர்க்களமொன்றில் உயிரெடுப்பதா குறி? உடையெடுப்பதா குறி?? அசிங்கங்களை மேற்கொள்ளும் ஆட்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே..!! (குறிப்பாக இப்புகைப்படங்களை சிறுவர்கள், பார்வையிட வேண்டாம்!!) -புகைப்படங்கள் இணைப்பு-

அண்மையில் நடைபெற்று முடிந்த போராட்டம் பல்வேறு உண்மைகளை எமக்கு உணர்த்தியிருந்தது என்பது நாம் அறிந்ததே. அரசபடையினரின் அடாவடித்தனங்கள், புலிகளின் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகள் என்று ஒவ்வொரு தரப்பினரதும் குற்றங்கள் வீடியோ காட்சிகளாகவும், புகைப்படப் பதிவுகளாகவும் கிடைக்கப் பெற்றிருந்தன. அந்த வரிசையிலே தற்போதும் எமக்கு புகைப்படங்கள் சில கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் அரசபடையினர் புலிகள் இயக்கத்தினர் மீது, யுத்தவிதிகளுக்குப் புறம்பான சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கலாமென நாம் சந்தேகிக்கிறோம். அதாவது, உடம்பில் எரிச்சல்களையும், எரிகாயங்களையும் ஏற்படுத்தி உயிரைப் பறிக்கக்கூடிய, [...]

அதிரடியைக் கண்டித்து ரிஎம்விபியின் பொதுச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையும்.. அதிரடியின் பதிலும்..!!

அதிரடியைக் கண்டித்து ரிஎம்விபியின் பொதுச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையும்.. அதிரடியின் பதிலும்..!!

“அதிரடி”யில் பிரசுரிக்கப்பட்ட ரிஎம்விபியின் அறிக்கையானது (புலிப்பயங்கரவாதி பொட்டனின் இணையத்தளமான நிதர்சனத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை குற்றஞ்சாட்டி வெளியான அவதூறான குற்றச்சாட்டுக்களை மறுத்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வன்மையான கண்டனம் -ரிஎம்விபி) ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மானின் தொடர்பாளரால் எமக்கு (அதிரடிக்கு) மட்டுமல்ல ஏனைய சில ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டு அவை அதிரடியிலும் ஏனைய ஊடகங்கள் சிலவற்றிலும் பிரசுரிக்கப் பட்டிருந்தது. “அதிரடி” இணையம் அவ்வறிக்கையைப் பிரசுரிக்க முன்பாக ரிஎம்விபித் தவைர் கருணாஅம்மானுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்திய [...]

செய் அல்லது செத்து மடி எனும் நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் புலிகள் --பீமன்

செய் அல்லது செத்து மடி எனும் நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் புலிகள் –பீமன்

வன்னிப் பெரு நிலப்பரப்பில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் உக்கிரமடைந்து வருகின்றது. வன்னி மீது பல முனைகளாலும் போர் தொடுக்கப்பட்ட போது கிழக்கை போன்று வன்னியில் புலிகளுடன் மோத முடியாது என்றும் புலிகள் பல இடங்களை விட்டு ஓடிய போது அவை புலிகளின் பொறி எனவும் புலிகள் படையினரை உள் இழுத்து தாக்குவதற்காக தந்ரோபாய பின் வாங்கல்களை மேற்கொள்கின்றார்கள் என்றும் படையினரை உள்ளே இழுக்கும் புலிகள் திரும்பி தாக்கும் போது புலிகளுடைய சகல நவீன யுத்திகள் பிரயோகிக்கப்படும் [...]

வான் புலிகளின் திருமலைத் தாக்குதல்.. புலிகளுக்கு வெற்றியா? --பீமன் (அதிரடியின் குரல்)

வான் புலிகளின் திருமலைத் தாக்குதல்.. புலிகளுக்கு வெற்றியா? –பீமன் (அதிரடியின் குரல்)

கடந்த 26ம் திகதி மாலை 9.05 மணிக்கு வான் புலிகள் திருமலை கடற்படை தளத்தின் மீது நடாத்திய தாக்குதல் அவர்கட்கு வெற்றியா? தோல்வியா? என்கின்ற கேள்விக்கு பலரும் பல கோணங்களில் விடை கொடுத்து கொண்டே இருக்கின்றனர். எதிரியானவன் அசமந்த போக்கை கடைப்பிடிக்கின்ற போது அல்லது எதிரியின் பலத்தை குறைத்து எடை போடும் போது வெற்றி என்பது நிச்சயமானதாகும். இதற்கு எவரும் விதிவிலக்கு கிடையாது. கடந்த காலங்களில் தொடர் தோல்விகளையே சந்தித்து வரும் புலிகள் தமது இருப்பு கேள்விக் [...]

கிழக்கு மக்களை பீடிக்கும் பிள்ளையானின் பதவிப் பேராசை :ரிஎம்விபி திலீபனின் தாயிடம் மன்னிப்பு கேட்டார் கேணல் கருணா.. -பீமன்

கிழக்கு மக்களை பீடிக்கும் பிள்ளையானின் பதவிப் பேராசை :ரிஎம்விபி திலீபனின் தாயிடம் மன்னிப்பு கேட்டார் கேணல் கருணா.. -பீமன்

கிழக்கு மாகாணம் பாசிசப் புலிகளின் வன்பிடியில் இருந்து இலங்கை அரச படைகளால் மீட்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்கின்றது. இதனூடாக அங்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள் மற்றும் பணிகள் மிகவும் ஸ்தம்பிதம் அடைந்து வருகின்றது. இதற்கான அடிப்படை காரணிகளை தேடுகின்ற போது அனைவரது சுட்டு விரல்களும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் பக்கம் நீழ்கின்றது. அம் மாகாணத்தின் மிகவும் அதியுயர் பொறுப்பு மிக்க ஓர் பதவியை அதற்குரிய தகுதி தாராதரங்கள் அற்ற ஒரு நபர் ஆக்கிரமித்துள்ளமையே முன்னேற்றமின்மை [...]

புலிகளின் புலித்தேவன் புலிகளால் கைது! சிறிலங்கா இராணுவ ஆழ ஊடுருவும் படையணியின் உறுப்பினர் என்கிறது ரிபிசி வானொலி – பீமன்

புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளரும் சமாதான பேச்சுக்களின் போது புலிகள் சார்பாக பங்கெடுத்து வந்தவருமர்ன சீவரெட்ணம் புலித்தேவன் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிபிசி வானொலி செய்தி வெளியிட்டுள்ளதுடன் செய்தியை மீள் பிரசுரிப்புக்குக்காக பல இணையத்தளங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக இல்லா விட்டாலும் புலிகள் சாமாதான பேச்சுக்களில் கலந்து கொண்டு அவற்றில் ஆர்வம் காட்டியவர்களை படிப்படியாக ஓரம் கட்டியும் அவர்களை கொன்றொழித்து வருவதும் யாவரும் [...]

செல்வி மகேஸ்வரி அவர்களின் படுகொலை தொடர்பாக ஈபிடிபி சார்பில் முகவரியற்ற வாசகர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அதிரடியின் பதில்…

அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்,.. உங்களுடைய கடிதத்தின் கருப்பொருளை உணர்ந்துள்ளோம். அனைவரது கருத்துக்களுக்கும் தொடர்சியாக பதிலளித்து கொண்டு இருக்க முடியாத காலப் பற்றாக்குறையையிட்டு மனம் வருந்துகின்றோம். இதன் உண்மைகள் எவை என்பதை என்றும் அதிரடி ஆதாரங்களுடன் கொண்டு வரும் என தெரிவித்து கொள்வதுடன் அதிரடி நிர்வாகம் பொது தேவைகளுக்காக எந்த ஒரு விடயத்திலும் எவ்விதப்பட்ட செய்திகளையும் எவ்வித ஒழிவு மறைவுமின்றி வெளிக் கொண்டு வரும். அதனால் தனிநபர்கள் பாதிக்கப்படுவதிலும் பார்க்க சமுதாயம் நலன் கலந்திருப்பின் தனிநபர்களின் அந்த பாதிப்புகளை [...]

(செல்வி. மகேஸ்வரி யக்காவின் படுகொலை) ஈபிடிபியின் மழுப்பலான மறுப்புக்கு மத்தியிலும் அதிரடியின் செய்தி உண்மையென்பதை ஆணித்தரமாக ஆதாரப்படுத்தும் மகேஸ்வரி அக்காவின் சம்பவத்தை நேரில் கண்ட அவரது உடன்பிறந்த சகோதரர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களின் பகிரங்க வாக்குமூலம்…

வெளியிலிருந்து துப்பாகியுடன் உள்ளுக்கு வந்த சின்னப்பையன், அக்காவைப் பார்த்து விட்டு, அடையாளம் சரியென்பது போல், அவனைக் கூப்பிட்டவனைப் பார்த்துத் தலையாட்டினான். ஐ.டியை வாங்கியவனுடன் வந்து நின்றிருந்த மூன்றாமவன், உடனயாகத் தனது இடுப்பிலிருந்து துப்பாக்கியின் மூலம் அக்காவின் நெற்றியில் குறிவத்துச் சுட்டான். அக்கா உடனே கீழே விழுந்தா. மற்றவர்கள் கதறினார்கள். சுட்டவன் கீழே விழுந்து கிடந்த அக்காவில் இன்னும் ஐந்து தரம் சுட்டான். நெற்றியில் இரு குண்டுகள், மார்பில் இரண்டு குண்டுகள் வயிற்றில் ஒரு குண்டு என்று ஐந்து [...]

இரண்டாம் உலகப் போரில் கிட்லரின் சித்திரவதைகளை வென்ற கொடூரம் வடமராட்சி கரவெட்டியில்... செல்வி மகேஸ்வரியின் படுகொலைச் சம்பவத்தின் போது புலிகளால் நடாத்தப்பட்ட அராஐகத் தாண்டவம்!!

இரண்டாம் உலகப் போரில் கிட்லரின் சித்திரவதைகளை வென்ற கொடூரம் வடமராட்சி கரவெட்டியில்… செல்வி மகேஸ்வரியின் படுகொலைச் சம்பவத்தின் போது புலிகளால் நடாத்தப்பட்ட அராஐகத் தாண்டவம்!!

பெண்மைக்கெதிராக தமது கோரங்களை பேராசிரியர் ரஜணி திரணகமவில் தொடங்கிய புலிப்பாசிசம் மனித உரிமைவாதியும் முதல் நிலை பெண்ணியல் வாதியுமான செல்வி மகேஸ்வரி அவர்களை கொலை செய்ததுடன் பெண்மையை கொச்சைப்படுத்தி கொண்டே செல்கின்றது. கடந்த 13 ஆம் திகதி மாலை நேரம் அது, செல்வி மகேஸ்வரியின் தாயார் மரண படுக்கையில் கிடக்கின்றார், அவரது இறுதி கடமைகளை முடிப்பதற்காக வீட்டில் குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒன்று கூடி இருக்கின்றனர். மாலை 6.30 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிலர் நடமாடித் திரிவதை [...]

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே ஐ.ம.சு. முன்னணி வெற்றி:- பிள்ளையான் முதலமைச்சர் கனவுலகில், மகிந்த ராஜபக்ச சங்கடத்தில், கழுகுகள் சிறகடிக்காமல் வான்பரப்பில்.. --பீமன்

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே ஐ.ம.சு. முன்னணி வெற்றி:- பிள்ளையான் முதலமைச்சர் கனவுலகில், மகிந்த ராஜபக்ச சங்கடத்தில், கழுகுகள் சிறகடிக்காமல் வான்பரப்பில்.. –பீமன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மொத்தமாக 6 ஆசனங்களை பெற்றுள்ளனர். இதில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பாக களமிறங்கிய பொதுநபர்களான து.நவரெட்ணராஜா, சி.த.செல்வராஜா, சு.புஸ்பராஜா ஆகிய மூவருமே அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு களத்தில் குதித்திருந்த போதிலும் மூவரே வெற்றி பெற்றுள்ளனர். இந்த படுதோல்விக்கு பிள்ளையானின் சுயநலம் கருதிய செயற்பாடுகளே [...]

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் முதுகில் சவாரி செய்ய எங்களுக்கும் அனுமதி தாருங்கள்! ஈபிடிபி ஜனாதிபதியிடம் மனுத்தாக்கல் -பீமன்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்சிகள் கூட்டணிகள் அமைத்தும் தனித்தும் போட்டடியிட மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி எனப்படும் ஈபிடிபியினர் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிய வருகின்றது. கடந்த மட்டு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் புளொட் ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட ஈபிடிபி யினர் மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைய முற்பட்டு [...]

பிள்ளையானின் பதவிப் பேராசையினால் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் அபாயம்… -பீமன்

நடந்தேறி முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் மக்கள் ஒர் ஜனநாயக சூழலில் வாழ விரும்புகின்றார்கள் என்பதையும் அவர்கள் புலிகளின் அராஜகங்களை முற்றிலும் வெறுத்து நிற்கின்றார்கள் என்பதையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிகளின் தேர்தல் வெற்றியானது எடுத்து காட்டுகின்றது. இங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசத்தில் மக்கள் இதுவரை அனுபவித்துள்ள நன்மை தரக்கூடிய அனுபவங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது அல்லது இல்லை என்றே கூறலாம். இருந்து போதிலும் மக்கள் இவை அனைத்துக்கும் [...]

புலம்பெயர் தேசத்தில் இருந்து கிடைக்கின்ற நிதியுதவியை தக்க வைத்து கொள்ள அப்பாவி சிங்கள மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் புலிகள் வன்னி கள முனையில் இறக்கும் தமது உறுப்பினர்களை அங்கேயே குழிதோண்டி புதைத்து வருகின்றனர்…

புலிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னி நிலப்பரப்பு அதன் மும் முனைகளாலும் அரச படைகளினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்கு புலிகளின் பிடியில் வாடுகின்ற மக்களை மீட்பதற்கான முழு ஏற்பாடுகளுடன் வன்னியை நோக்கிய படை நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. அனுபவம் மிக்க படைத்துறை வல்லுனர்களின் வழிநடத்தலில் இடம் பெற்று வரும் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் படுதோல்விகளை சந்தித்து வருகின்றனர். கருணாவின் வெளியேற்றத்தின் ஊடாக அவர்கள் எதிர் பார்த்திராக பின்னடைவுகளை சந்தித்து வரும் புலிகள் தமது போரிடும் திறன் அல்லது [...]

கடந்த சில தினங்களாக பொதுமக்கள் மீதான புலிகள் நடாத்தும் குண்டு தாக்குதல்களின் பின்னனி என்ன? (அதிரடியின் அலசல்)

புலிகளின் தலைமை இப்பொழுது மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. தங்களுடைய மரணத்தினை பாதுகாப்பதற்காக எத்தனை பேருக்கு மரணத்தை வரவழைக்க முடியுமோ அதை செய்வார்கள். அதற்காக என்ன விதமான பயங்கரமான வேலைகளை செய்ய முடியுமோ அதை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அதாவது இப்பொழுது புலிகளால் நடத்தப்படுகின்ற போராட்டமானது தலைவரையும் அவரது குடும்பத்தினரையும், தலைவருக்கு அடுத்தபடியாக இருக்கும் முக்கிய பிரமுகர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் காப்பாற்றுவதற்காக நடத்தப்படுகின்ற போராட்டமாகும். பாதுகாப்புப் படையினரது தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாது தோல்வியடைந்துள்ள புலிகள், நாட்டில் [...]

புலிகளின் உளவாளியாக மாறுவேடம் பூணும் மகேஸ்வரனின் கொலையாளியும் – மகிந்த அரசிற்கு பூச்சாண்டி காட்டும்…

இலங்கை பாராளுமன்றிற்கும் செங்கோலுக்கும் மிக நீண்ட இடைவெளி உண்டென்றும் அச் செங்கோல் பாராளுமன்றிலிருந்து வெளியகற்றப் பட வேண்டும் என்கின்ற வகையில் தனது கருத்துக்களைக் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.தி.மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதானது யாவரும் எதிர்பார்த்த விடயமேயாகும் என்பதுடன் அவர் பாராளுமன்றத்தில் தான் சார்ந்த மக்களுக்காக குரல் கொடுத்துவந்த விதம் பலராலும் வரவேற்கப்பட்டிருந்தது. திரு. மகேஸ்வரனின் அரசியல் பிரவேசம், முன்னேற்றம் அதி வேகமும் விவேகமும் நிறைந்ததாகவே காணப்பட்டது. யாழ் காரைநகர்ப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் [...]

அரபாத்தின் முன்னைநாள் காதலி மதிவதனி பிரபாகரன் பதுங்குகுழியில் இருந்து மெல்ல மெல்ல தலைகாட்டுகிறார்…

அரபாத்தின் முன்னைநாள் காதலி மதிவதனி பிரபாகரன் பதுங்குகுழியில் இருந்து மெல்ல மெல்ல தலைகாட்டுகிறார்…

மதிவதனி எம்மக்களை ஏமாற்றக் புறப்பட்டிருக்கும் விதம் பார்வைக்கு மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவற்றின் வக்கிரத் தன்மையை கூறித் தான் ஆக வேண்டும். வாழத் துடிக்கும் பச்சிளம் பாலகர்களை யுத்த முனையில் பலிக் கடாக்களாக்கி கொண்டு எதிர்காலத்தில் சிசுக்களை சுமக்க வேண்டிய கன்னிகளின் வயிற்றில் பயங்கர வெடிகுண்டுகளை சுமக்க வைத்து அவர்களை வெடித்து சிதற வைக்கும் அரக்கனுக்கு துணைநின்று கொண்டு எம்மக்கள் பணத்தில் உல்லாச வாழ்வு நடாத்தும் மதிவதனி மக்கள் முன் தோன்றும் போது எதுவும் அறியா அப்பாவித் [...]

விலைமாதர்களின் குணாதிசயங்களுக்கு ஒத்த புலித்தலைவரின் கொலையறிக்கை…

விலைமாதர்களின் குணாதிசயங்களுக்கு ஒத்த புலித்தலைவரின் கொலையறிக்கை…

பாசிசப் பேய்க் குஞ்சியின் கொலையறிக்கை கொலைகளின் எண்ணிக்கை கூறப்படாமலே வாசித்து முடிவுற்று விட்டுது. இவ்வறிக்கையை கேட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் கொலைகாரனின் சினிமாப்பட சொற்பிரயோகங்களில் மருகேறி கடவாய் இரண்டுகளிலும் விரல்களை விட்டு விசில்களும் அடித்து மகிழ்ந்திருந்தனர். பரிதாபம் என்னவெனின் தலைவரின் பாசையில் சொல்வதானால் இப்பேச்சு தமிழரின் புலம்பெயர் வாழ்விற்கு வைத்த ஆப்பு என்று தான் கூறவேண்டும். பயங்கரவாதத்திற்கு உலகில் எங்குமே இடமில்லை என்பதை மிகத்தெளிவாக தான் நேசிப்பாதாக புளுடா விடும் மக்களுக்கு மிகவும் சூசகமாக கூறி முடித்திருக்கின்றார். [...]

கண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள்…

கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சதியில் சிக்கியிருந்த ராசிக், மோகன், வரதன் போன்றோரின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவராக பிள்ளையான் என்பவர் மாறி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. சகல தமிழ் அமைப்புகளில் இருந்தும் சதா சில உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சதிவலையில் சிக்கியிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களின் மனமாற்றங்களுக்கான பின்னணி புலிகளியக்கத்தின் மீதுள்ள அளவற்ற வெறுப்பும் அவ்வியக்கத்திற்தெதிராக தீவிரமாக போராட வேண்டும் எனும் மனத் தூண்டுதலுமாகவே இருந்துள்ளது. அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து [...]

சுனா.பனாவின் படுகொலையும்! வெளிவரும் சந்தேகங்களும்…!!

தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கட்டிடம் தரைமட்டமாகி உள்ளதாகியுள்ளதாக தெரியவரும் அதேநேரம் சு.ப வின் உடலில் அதற்கான எவ்வித அடையாளங்களும் தெரியவில்லை எனும் போது அவர் படுகொலை செய்யப்பட்டு அவ்விடத்துக்கு கொண்டு வந்து போடப்பட்டார் எனும் வாதம் நிலை கொள்ளுவதோடு அவர் வான் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தால் இவ்வாறன இலகு தாக்குதலில் அழிக்கப்படக் கூடிய அவ்விடத்தில் சு.ப வை தங்க வைத்து புலித்தலைமையே தமது இரட்டை வேட உளவாளிகள் மூலம் சிறிலங்கா வான்படைக்கு தகவல் கொடுத்துள்ளனர் என்பது மிகவும் [...]

புளொட் தலைவர் சித்தார்த்தன் புலிகளால் இலக்கு!; புளொட் இராணுவப் பிரிவினரால் தாக்குதல் முறியடிப்பு!!

பிரபாகரனின் குணங்குறிகளுக்கு எதிர்மறையாக திரு.சித்தார்த்தன் அவர்கள் தனது தோழர்களுடன் மிகவும் அன்பாகவும் பணிவாகும் பழகும் இயற்குணம் படைத்தவர். கழக உறுப்பினர்களின் துன்ப துயரங்களில் உரிமையுடன் பங்கு கொள்ளும் இவர் தன் தோழர்களின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினரை கௌரமாக நடத்துவதிலும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதிலும் ஆத்ம திருப்தியடைவார். இதன் பொருட்டு இறந்த தோழர்களின் வீடுகளுக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறவேனும் திரு.சித்தார்த்தன் அவர்கள் அங்கு வருவார் என்பதை நன்குணர்ந்த புலிகள் வழியில் கிளைமோர் குண்டுகளை பொருத்தி காத்திருந்தனர். ஆனால் [...]

ரிஎம்விபி எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் அதிகரித்துள்ள உட்பூசல்கள்;: உருவானதா…? அல்லது, உருவாக்கப்பட்டதா!!!? (அதிரடியின் ஆய்வு)

கடந்த காலங்களில் அரசியலில் தாக்கஞ் செலுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட ஈபிஆர்எல்எப் போன்ற தமிழ் இயக்கங்களை சிறுசிறு குழுக்களாக பிளவுபடுத்தி ஈற்றில் ராசிக் குழுவாக்கி கைபொம்மையாக்கி எடுப்பார் கைப்பிள்ளையாக வைத்திருந்தது போல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்ய வேண்டிய தேவை அரசுக்குக் வேண்டியதாகி உள்ளது. இதன் நிமித்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை பிளவுபடுத்துகின்ற வேலையைச் செய்வனே நிறைவேற்றுவார்களென அரசு தேர்ந்தெடுத்துள்ள பிரிவு தான் அரசபடையினரின் உளவுப்பிரிவினர். அரச படையின் புலனாய்வுப் பிரிவினரும் [...]

ரிஎம்விபியின் முக்கிய உறுப்பினர் முரளியின் இழப்பின் பின்னால் பிதற்றும் பொறாமைப் பொறியும் தூசனம்.கொம்மும்…

அண்மையில் திருமலை அன்புவழிபுரத்தில் புலிகளினால் நயவஞ்சகத்தனமாக படுகொலை செய்யப்பட்ட ரிஎம்விபியின் விடுதலைப் போராளியான லெப்.கேணல் முரளி எனப்படும் நடராசா குமணன் என்பவரின் இறுதிச் சடங்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபியின்) தளபதிகள், உறுப்பினர்கள், பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

சுவிசும் சுழிபுரமாக மாறிவிடுமெனக் கூக்குரலிடும் மானம்கெட்ட தமிழா.. நாம் யாரிடம் நீதிகேட்டுப் போராடுவது??

சுவிசும் சுழிபுரமாக மாறிவிடுமெனக் கூக்குரலிடும் மானம்கெட்ட தமிழா.. நாம் யாரிடம் நீதிகேட்டுப் போராடுவது??

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட எந்த அநியாயத்தையும் செய்யலாம் என பகவத்கீதையில் கூறப்படுகின்றது. இராணுவத் தலைவனோ, குடும்பத் தலைவனோ அறக்கடமைகளை நிறைவேற்றுவதே அவனுக்கு உகந்ததாகும். இத்தகுசெயல்கள் உலகீயமான மனிதனை ஜடக்கணங்களில் இருந்து விடுவித்து அவன் இதயத்தை மெதுவாக தூய்மையாக்குகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக துறவு பூணுவதை கடவுள் ஏற்பதில்லை. இது புலிகளுக்கும் புலிப்பினாமிகளுக்கும் சிறந்த போதனையாகும் என கருதுகிறேன்.
இதனை முழுமையாக அதிரடியின் குரல் பகுதியில் பதிவு செய்துள்ளோம்.

சிறிலங்கா அரசின் தமிழ் மக்களை பிரித்தாளும் நுட்பத்திற்கு துணை போகும் ஈபிடிபியும் அதன் தினமுரசு பத்திரிகையும்…

சிறிலங்கா அரசின் தமிழ் மக்களை பிரித்தாளும் நுட்பத்திற்கு துணை போகும் ஈபிடிபியும் அதன் தினமுரசு பத்திரிகையும்…

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை ரீதியில் (வடகிழக்கின் 9 மாவட்டங்களிலும் கொழும்பு மாவட்டத்திலும்) இருபத்திமூவாயிரம் மக்கள் ஈபிடிபிக்கு வாக்களித்துள்ளனர். அதன் உண்மை என்னவெனின் அவர்கள் புலிகளின் அராஐகங்களை வெறுத்து புலிகளை வெறுக்கின்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கின்றார்கள். எனவே அவர்களது அரசியல் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய தார்மீக கடமை உணர்ந்து ஈபிடிபி செயற்பட வேண்டும். அதைத்தவிர்த்து அரசுடன் இணைந்து நின்று ஏனைய தமிழ் கட்சிகளை சிதைக்க முற்படுவதும் சிறிலங்காவின் தமிழினத்தின் மீதான நயவஞ்சகங்களுக்கு [...]

தொப்பிக்கல மீட்பானது……… துளிர்ப்பின் பின்பே, களிப்பாக வேண்டும். (அதிரடியின் குரல்)

தற்போது, மீட்டிருக்கும் தொப்பிக்கலவை தக்க வைத்துக் கொள்வதற்கு படையினருக்கு 20 ஆயிரம் படைவீரர்கள் தேவைப்படுவார்கள் என்பது இராணுவ ஆய்வாளர்களின் கருத்தாகும். ஆனால் கிழக்கு மாகாணம் இன்னும் மீட்கப்படவில்லை என்பதை நிரூபிப்பதற்கு புலிகளின் 20 பேரைக் கொண்ட சிறு குழுக்களே போதும். புலிகள் அவ்வப்போது நடத்துகின்ற ஒரு சில கெரில்லாத் தாக்குதல்களே கிழக்கு இன்னும் விடுவிக்கப் படவில்லையென்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி விடும். (இதனை முழுமையாக “அதிரடியின் குரல்” பகுதியில் பதிவு செய்துள்ளோம்.)

புலிகளே!, கூறிய பொய்களெல்லாம் போதும், போதும்!! வங்கிக் கணக்குகள் அதிகரித்தது காணும், காணும்!!!

அண்மையில் தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததும், கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும். இந்த வகையில் பல கட்சிகளும், சமூக அமைப்புக்களும், நிறுவனங்களும், குழுக்களும், தங்களது வன்மையான கண்டனங்களை வெளியிட்டிருந்தது. இது எதார்த்தமானதும், நீதியானதுமாகும். ஆனால் இந்த விடயத்தில் புலிகள் அமைப்பினரும், தங்களது கண்டனத்தையும், கருத்துக்களையும் அவர்களது இணையத்தளத்தினூடே வெளியி;ட்டிருந்தார்கள். இவர்கள் வெளியிட்ட கண்டனமானது, செல்லுபடியற்றதும், தங்கள் சுயலாபத்திற்காகவும் வெளியிடப்பட்டதுமாகும். குறிப்பாக சொல்லப் போனால் இது ஒரு போலியான வாய்ப்பிரசங்கமே ஆகும். இவ்வாறு [...]

அதிரடியின் ஆசிரிய பீடத்திலிருந்து……

ரிஎம்விபி அமைப்பினருக்கும் அவர்களின் சார்பிலும் அவர்களுக்கு ஆதரவாகவும் எம்முடன் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள அனைவருக்கும்… அதிரடியின் ஆசிரிய பீடத்திலிருந்து…… அதிரடி இணையத்தளமானது எந்தவொரு விடயமாயினும், அதுகுறித்து ஆராயாமலோ, அல்லது அப்பிரச்சினைக்கு ரியவர்களைத் தொடர்பு கொள்ளாமலோ! வருகின்ற ஆக்கங்களையும், செய்திகளையும் வெறுமனே பிரசுரிக்கின்ற ஒரு பித்தலாட்டக்குழுவல்ல என்பதனை முதலில் இவ்விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த விடயமாயினும் சரி அந்த விடயத்தை அதிரடி இணையத்தளம் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அவ்விடயத்தை அக்குவேறு ஆணிவேறாக [...]

புலிகளென்ன தீர்க்கதரிசிகளா? அல்லது தீர்த்துவிட்டே தரிசிப்பவர்களா?…

நாட்டின் நரமாமிச புரத்தின் நாயகர்களான, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் கூட்டம், தற்போது புரியாத புதிரான ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறார்களாம். அதுவும், அதனை நயம்பட நாசூக்காகச் செய்து கொண்டிருக்கிறார்களாம். அதாவது, கடத்தப்பட்டுக் காணாமல் போயிருக்கும் தமிழர்களுக்கு (கடத்தப்பட்ட ரிஆர்ஓ எனும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு) இவர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்களாம். இவர்கள் கடத்தப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன் கடத்தப்பட்டவர்களெல்லாம் இறந்து விட்டார்கள் என்று இவர்களுக்கு அறிவித்தது யார்??? ஒருவேளை, இவர்களுக்கு மறைவான [...]

புலிகளின் தற்காப்பு அங்கிகளாம்!! (அதிரடியின் இராணுவ ஆய்வாளரின் தகவல் கட்டுரை)

புலிகளின் தற்காப்பு அங்கிகளாம்!! (அதிரடியின் இராணுவ ஆய்வாளரின் தகவல் கட்டுரை)

புலிகளின் தற்காப்பு அங்கிகளாம்…. யாழில் இராணுவத்தினரின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்று உள்ளாடைகள் உட்பட அனைத்து ஆடைகளையும் ஆண் பெண் பேதமின்றி களைந்து காட்ட புலிகள் மேற்கொள்ளும் மற்றுமோர் நடவடிக்கை… எம்மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் உடல்களில் வெடிகுண்டு ஜக்கட்டுகளை அணிவித்து யாழ் குடாநாட்டிற்கு அனுப்பி வருகின்றனர். இச்செயற்பாடனது புலிகள் இயக்கத்தின் உண்மை முகம் தெரியாத எம்மில் சிலருக்கும் புலிப்பாசிசம் என்றால் என்னவென்று புரிய வைக்கும் என நம்புகிறோம். இந்நிலைமைகளில் இருந்து [...]

விடுதலையை விட்டுவிட்டு வித்தை காட்டினால் மட்டுமே போதும்… கோடி கோடியாகக் கொட்டும் புலிகளுக்கு… (புலிகளுக்கு அதிரடியின் வேண்டுகோள்!!!!)

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் விடுதலைக்கு என ஆரம்பித்து அதுவே பின்னாட்களில் வடக்கு,கிழக்குத் தமிழர்களின் விடுதலையாகி இப்போது வடக்குத் தமிழர்களின் விடுதலைக்காக என நடந்து கொண்டிருக்கிறது. இதுவே இனிவரும் காலங்களில் புலிகளுக்கான விடுதலையாகி பின்னர் தலைவருக்கான விடுதலையாக முற்றுப்பெறும் என்பது டாவினின் பரிணாம விதியாக அல்லாமல் அதிரடியின் பரிணாம விதியாகப் பதியப்படவுள்ள நிலையில், புலிகளின் தலைமையோ! தமிழ்மக்களையே தவிடு பொடியாக்கி, புலிகளையும் புண்ணாக்கி, கடைசியில் தன்னையும் மண்ணாக்குவதற்கிடையில் நடத்தும் நாடகங்களும், காட்டும் வித்தைகளும், அப்பப்பா…… ஏராளம்…. [...]

புலிகளின் நல்வாழ்வுக்காக மக்களின் வாழ்வில் விஷப்பரீட்சை மேற்கொள்ள முயலும் பிரான்ஸ் புலிகள்… (அதிரடியின் அலசல்)

புலிகள் எம்மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி பலிக்கடாக்களாக்குவதற்கு தங்களாலான சகல பிராயத்தனங்களையும் மேற்கொண்டு தோல்வி காணும் நிலையில், இம்முறை பிரான்ஸ் வாழ் மக்களின் இருப்பை சீர்குலைக்க முயல்வது மிகவும் வேதனையளிக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைள் சர்வதேச மட்டத்தில் பல பயங்கரவாத வழக்குகளை விசாரித்து சிறந்த தீர்ப்பு வழங்கியமைக்கான சிறப்பு விருதினைப் பெற்ற நீதிபதி jean-Louis Bruguiere அவர்களால் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேற்படி சிறப்பு நீதிபதியின் நேரடி மேற்ப்பாற்வையில் புலிப் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் பற்றி [...]

தலைநகர் வாழ் தமிழரை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கோரமான படுகொலைகள்… (அதிரடி ஆசிரியர் குழு சார்பாக..)

அண்மைக்காலமாக தலைநகரில் நடத்தப்பட்ட ஆட்கடத்தல்களுக்கும், பொலிஸாருக்கும் தொடர்பிருப்பதாக பல ஊடகங்கள் காரசாரமாக விமர்சித்திருந்தமை அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் கடத்தப்பட்டவர்கள் தான் கொலை செய்யவும் பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தால் மக்களும், ஊடகங்களும் இன்னும் பொலிஸாரினைக் துருவித் துருவி விமர்சிக்கலாம் என்பதனாலேயே இச்சடலங்கள் இனங்காண முடியாதவாறு கண்கள் இறுக்கிக் கட்டப்பட்டு, முகம் ஊதி வெடிக்கச் செய்யப்பட்டு உருக்குலைக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாறு இறந்து கிடந்த ஐந்து சடலங்களின் தொந்தி வயிறுகளும், வயதுத் தோற்றங்களும் அவர்கள் வர்த்தகர்கள் அல்லது வசதிபடைத்தவர்கள் என்பதைப் பறைசாட்டுகின்றன. [...]

யுத்த நிறுத்தத்திற்கு (

யுத்த நிறுத்தத்திற்கு (“கானல்நீர்” பத்திரத்துக்கு) இன்றோடு வயது ஐந்து….

யுத்த நிறுத்தத்திற்கு (“கானல்நீர்” பத்திரத்துக்கு) இன்றோடு வயது ஐந்து, இனித் தொடர்வது.. புலிகளுக்கு அழிவா?… இல்லை, இலங்கைப் படையினருக்கு… இழிவா? ஜனாதிபதியின் கதைகளுக்கெல்லாம் “ஆமா” போட்டுக் கொண்டு நல்ல பிள்ளையாட்டம் தலையாட்டிக் கொண்டிருக்கும் தமிழரசியல் தலைவர்களைத் தவிர தமிழ் மக்களுக்காக, தமிழர் உரிமைக்காக என்றெல்லாம் குரலெழுப்பும் அரசியல் தலைவர்களைத் தட்டுவதே ஜனாதிபதியின் திட்டமுமாகும். தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கூட்டமைப்புத் தலைவர்களுள் ஒருவரான ரவிராஐ, புளொட்டின் கிழக்குத் தளபதி ராஐ;மாமா ஆகியோரை யாரையோ (???? ) [...]