கவிதைகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் பத்தாயிரம் ரூபா பரிசு பெற்ற தமிழ் கைதியின் கவிதை..! (சிந்தித்து பார்...!)

அனுராதபுரம் சிறைச்சாலையில் பத்தாயிரம் ரூபா பரிசு பெற்ற தமிழ் கைதியின் கவிதை..! (சிந்தித்து பார்…!)

சிந்தித்து பார்…!
ஏன் இங்கு வந்தோமென்று இனியாவது யோசித்துப்பார்
புத்தகம் படிக்காமல் புகை பிடித்து திரிந்தாயா?
புகையில்லாமல் நீயில்லை என்று பகை தேடிவந்தாயா?
மது அருந்தி வாழ்ந்தாயா மறியலுக்கு வந்தாயா?
காசாசை கொண்டு கை வைத்து வந்தாயா?
வீதி வழி சென்று விபச்சாரம் செய்து வந்தாயா?
கோபத்தில் சென்று கொலைகாரன் ஆகி வந்தாயா?
கிரோயினை விற்று இன்பத்தை தொலைத்து வந்தாயா?
நாட்டை காக்க சென்று வேட்டையாடி வந்தாயா?
துவக்கை தூக்கி உயிரை துச்சமாய் நினைத்து வந்தாயா?
மண் மீட்கச் சென்று மதி கெட்டு வந்தாயா?
வாழும் வயதெல்லாம் பாழாகிப் போச்சுதைய்யா
இங்கு புத்தர் காந்தி யேசு [...]

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் ……

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் …… “தோழர் க.பத்மநாபா”

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் …… “தோழர் க.பத்மநாபா”
 
அகிம்சை தனை போதித்து அகிலம் போற்ற வாழ்ந்தவர் தோழர் நாபா!
அடைக்கலம் தேடி வந்தோரை
அணைத்து முத்தமிட்டவர்… தோழர் நாபா!
அக்கினியில்லாத அரசியல் தந்து
அகராதியொன்றை வகுத்தவர் தோழர் நாபா!
அகம்பாவமில்லாத அகத்தை
அருமை தோழர்கள் முன் காட்டியவர் தோழர் நாபா!
அக்கரை மக்களை சோ்ப்போமென்று
அக்கறை கொண்டெழுந்தவர் தோழர் நாபா!
அப்பாவி மக்களுக்காக தன்னுயிரை
அர்ப்பணித்தவர் தோழர் நாபா!
அரண்மனை சுகபோகம் தனை
அப்-புறம் அகற்றியவர் தோழர் நாபா!
அருகிலிருந்த அசுத்தம்படிந்த மனிதரை
அன்புடன் வழியனுப்பியவர் தோழர் நாபா!
அரியாசனம் தேடி புறப்பட்டவர் அல்ல
அல்லல் படுவோர்க்காய் புறப்பட்டவர் தோழர் [...]

வைகாசி 18ம் நாள்.. இனிவரும் காலங்களில் இதுவே.. உன் இனிய திருநாள்!! -மோகன்

வைகாசி 18ம் நாள்.. இனிவரும் காலங்களில் இதுவே.. உன் இனிய திருநாள்!! -மோகன்

ஈழத்தமிழனே!
இனிவரும் காலங்களில்
இதுவே! உன் இனிய திருநாள்…
புத்தாடை உடுத்து பொங்கலிட்டு
பகலிரவாய் பட்டாசு கொழுத்தி
உற்சாகமாய் கொண்டாட வேண்டிய
முக்கியமான பண்டிகை நாளும் இதுவே
மூன்று சகாப்த கால துன்பங்களுக்கு
விடை கொடுத்த நாள்…
அடைமானத்தில் இருந்த அமைதியை
திருப்பி பெற்ற நாள்..
சிறையில் அடைபட்ட சிரிப்பை
மீட்டு தந்த நாள்…
சிந்திக்கும் உரிமையை
மீண்டும் அமுல் படுத்திய நாள்…

நாம் வாழ்வதற்காக -நீ வீழ்ந்தாய்..!! (கவிதை) -சன்

நாம் வாழ்வதற்காக -நீ வீழ்ந்தாய்..!! (கவிதை) -சன்

பதினேழாவது வயதில் மக்களின்
புரட்சியாளன்..
ஐம்பதாவது வயதில் கிட்லரின் விரிவாளன்..
நீ பிரிந்து போனது
எனக்கெந்த மகிழவையும் தரவில்லை..
சுதந்திரம் கிடைத்த உணர்வைவிட..
துவண்டு போன மனதில்
நம்பிக்கை கொன்டு
கை தூக்கி நின்றது..
முகங்களின் சலனமற்ற சந்தோசம்..
கண்கழில் மலர்ந்த கண்ணீர் பளிங்குகளாய்
விழிகளெல்லாம் நனைந்தன..
வார்த்தைகள் கொதிப்பற்ற மகிழ்வாய்
எல்லாம் கிடைத்த உணர்வு..

கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட நம் உறவுகளுக்காய்.. (கண்ணீர் அஞ்சலிக் கவிதை) -சுதா

கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட நம் உறவுகளுக்காய்.. (கண்ணீர் அஞ்சலிக் கவிதை) -சுதா

புத்தனின் போதனையை
கட்டிக்காக்கும் அரசொன்றை
அரசாட்சி செய்யும் அரக்கன்
மகிந்தவின் இனவொழிப்பின்
இரக்கமில்லா இச்சையில்..
அரக்கன் பிரபாகரன் – தன்
உயிர் காக்கும் ஆசையில்
அகப்பட்டு அனியாமாய் அபகரிகப்பட்டு
ஆத்மாக்காளை விட்டுச்சென்ற
நம் இனிய உறவுகளுக்காய்
எங்கள் ஆத்மாக்களிலிருந்து
அழுது கண்ணீர் வடிக்கின்றோம்..

அஞ்சலி எதற்கு???!!

அஞ்சலி எதற்கு???!!

ஊர் கூடி தேர் இழுக்க முயன்றோம்…..
அவர் எவரோ தலமைச் சாரதி என்றோம்…
தலைவன் என்றோம்,
தேசியத் தலைவன் என்றோம்…
அப்பாலும் போய் தொழுதோம்…
சூரியத்தேவன் என்றோம்…
துதி பாடினோம்… அன்று!
இன்று.. முள்ளிவாய்க்கால் கரையோரம்..
முடிந்து போயிற்று எமது போராட்டம்!
களமாடி மரித்துப்போன..
போராளிகளும், மக்களும்
கூடவே தலைமைச் சாரதியும் தான்!!..

அவுஸ்திரேலிய கடலில் ஐக்கியமாகிப் போன நம் உறவுகளுக்காய்.. (கவிதை)

அவுஸ்திரேலிய கடலில் ஐக்கியமாகிப் போன நம் உறவுகளுக்காய்.. (கவிதை)

கடன் பட்டு காசு கொடுத்து
கடவுச்சீட்டுக் கூட இல்லாமல்
கண்ணுக் கெட்டாத தேசமொன்றை தேடி
கால்கள் நடந்த நம்  தேசம்விட்டு
கப்பலில் ஏறி தமிழா நீ எங்கே வந்தாய்?
கடல் கடந்த தேசம் தேடி
காசு பிழைக்க போனாயோ?
கப்பலில் இருந்த பொழுதினில் -பல
கனவுகளை சுமந்து வைத்திருந்திருப்பாய்..
கட்டிய மனைவியை நீ விட்டுவந்தாயோ
அன்றில் காதலித்தவளை விட்டு வந்தாயோ
அன்றில் உன் கண்மணிகளை தான் விட்டு வந்தாயோ??

அன்னையர் தினத்திலே......... (கவிதை) -வள்ளியம்மை சுப்பிரமணியம்.

அன்னையர் தினத்திலே……… (கவிதை) -வள்ளியம்மை சுப்பிரமணியம்.

மக்களே தாய்பற்றி எழுதுவது வழக்கமாம்…….அந்த
அக்கறையில் அன்னையே எழுதி அனுப்புகிறாள்.
பிள்ளைகள் உணர்வினைப் பெற்றவள் சொல்வதே
கொள்ளை இன்பமாம் அன்னையர் நாளிலே……..
உண்ண உணவளித்து உறங்க இடமளித்து
வண்ணத்தில் உடைகள்பல வாங்கித் தருமொருவர்!

பயப்படுகிறோம்.!!!! --ஒரு மின்அஞ்சல் வாசகரின் கவிதை

பயப்படுகிறோம்.!!!! –ஒரு மின்அஞ்சல் வாசகரின் கவிதை

நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா… மரமனிதர்களா என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்
உங்களுக்கு வதைசெயும் ஒருநாள்
தம்பட்டம் அடிக்காதீர்கள்!
பயப்படுகிறோம்…..
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்கு தெரியப் போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை..

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்..  -திருமதி.வள்ளியம்மை (கவிதை)

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்.. -திருமதி.வள்ளியம்மை (கவிதை)

தமிழ்மணக்கச் சிங்கையிலே நான்காண்டு முன்னர்
அமிழ்தான சித்திரைத் தமிழ்விழா தொடங்கி…
அறிஞர்கள் பங்கெடுத்து வழிநடத்தும் செய்கையால்…
குறிப்பாக மணக்கிறது பூக்களும், பழங்களும்…
பாலர்பள்ளி ஆடல் பாடல் விநோத உடை மல்லிகை.
உயர்நிலைப் பள்ளி சொற்களமோ இதழ்விரித்த தாமரை.
திருக்குறள் விழாவிலே திகழ்ந்தவைகள் றோசாமலர்.
மாதவி இலக்கிய மன்றத்தில் மணத்தது சாமந்திப்பூ.!

தம்பிக்கு எந்த ஊரு...??? (வவிதரனின் கவிதை)

தம்பிக்கு எந்த ஊரு…??? (வவிதரனின் கவிதை)

தழைத்த செடிகளை எல்லாம்
தம்பியொருவன்—தன் நலத்துக்காய்
தரைதனில் புதைத்து போனான்
தரணியறியும் உன் வரலாறு
தம்பியே உனக்கு எந்த ஊரோ!!!!
தரங்கெட்ட செயல்களை
தலையில் சுமந்து–நீ
தள்ளாடி நடந்த நம் மக்களை
தட்டேந்த வைத்த உன் வரலாறு
தம்பியே உனக்கு எந்த ஊரோ!!!!..

கள்ளர் கூட்டம்..!! (கவிதை) –ஜனநாயகம் (தமிழ்அரங்கம்)

கள்ளர் கூட்டம்..!! (கவிதை) –ஜனநாயகம் (தமிழ்அரங்கம்)

ஊரை அடிச்சு
உலையில போடுவார்
என்ர பிள்ளையள்
கொட்டின ரத்தத்த
விட்ட அரும் உயிர
சொல்லி அழுதல்லோ
ஊரெல்லாம்
உலகமெல்லாம்
சொத்துச் சேத்தாங்கள்..
எங்கட ராசா ராசாத்தி
நீங்கசெத்த
வருசப்பழங்சலிப்பு
நாங்க இன்னம்
வாயாறச் சொல்லயில்ல..

பிரியமிள்ளதவளுக்கு... இதயமில்லாதவன் எழுதும்  இரங்கல்பா! (கவிதை)

பிரியமிள்ளதவளுக்கு… இதயமில்லாதவன் எழுதும் இரங்கல்பா! (கவிதை)

என் மீது
ப்ரியம் உள்ளவள் போல் நடித்த…
பிரியமிள்ளதவளுக்கு…
இதயமில்லாதவன் எழுதும்
இரங்கல்பா!..
என்
முதுகெலும்பை
முற்றிலுமாய் ஒடித்துவிட்டு நான்
சாய்ந்து உட்கார
சாய்வு நாடகாலி தருகிறாயே…?

வஞ்சகமாய் உன்னை கொன்றவனவன்.. நீ போன வழி வந்து சேர்ந்த கதை தெரிந்தால்..!! -கி.பாஸ்கரன் (கவிதை)

வஞ்சகமாய் உன்னை கொன்றவனவன்.. நீ போன வழி வந்து சேர்ந்த கதை தெரிந்தால்..!! -கி.பாஸ்கரன் (கவிதை)

உண்ணாவிரத சதிக்குள் நீ மூழ்கலானாய்!
உடனிருந்து கொல்லும் காலனின் (பிரபாகரன்)
சூழ்ச்சியின் மாயையில் நீ வீணாய் வீழ்வதானாய்!
உண்மை எதுவென்று அறியாமல்
உன்னையே நீ உணவின்றி அழிக்கலானாய்!
உன் உதிரம் உனக்கு தெரியாமல்
உணர்வின்றி உறைந்து போவதானாய்!
உடலும் உள்ளமும்  சோர்ந்து போகலானாய்
உதடுகள் நீரின்றி வறன்டு போகலானாய்!
உன் குடலும் சுருங்கி உன்னுடலும் குறுகலானாய்!
உன் நினைவும் மங்களாகி மீளமுடியாத உறக்கமானாய்!..

எங்கள் தோழர்களின் ஆத்மா சாந்திக்காக...

எங்கள் தோழர்களின் ஆத்மா சாந்திக்காக…

கந்தன்கருணை படுகொலை எங்கள்
கண்மணிகளை கருக்கிய படுகொலை
காட்டு மிராண்டித்தனமான படுகொலை
கருணை இல்லாத பாசிச புலிகளால்
கண்ணீர்சிந்தவைத்த படுகொலை
காவிய நாயகர்களின் கைகளை
கட்டிவிட்டு புலிகள்கர்வம் காட்டிய படுகொலை
கண்ணில் இருந்து மறையுமா இந்த
காலச் சுவடுகள் பாசிச தலைவா??
காலங்கள் உங்களுக்கு மட்டும்சொந்தமல்ல….

மடைமையே இனிமேலும் நீ பிறக்காதே.. (கவிதை)

மடைமையே இனிமேலும் நீ பிறக்காதே.. (கவிதை)

தமிழனுடைய இரத்தத்தை நீ
துப்பாக்கியால் சிந்த வைத்தாய்…
எங்களுடைய இரத்தத்தை
நாங்கள் உனகெதுராய்
பேனாவால் சிந்தினோம்….
உன்னுடைய துப்பாக்கியிலிருந்த
தோட்டாக்கள் முடிந்து விட்டன
உன்னால் இனிமேல் சுடமுடியாது
நீ இறந்து போய் விட்டாய்
எங்களுடைய இரத்தம்
இன்னும் சிந்திக் கொண்டிருக்கிறது
உன்னைப் போன்றவர்களுக்கு எதிராய்
உயிருள்ளவரை அது சிந்திக் கொண்டிருக்கும்..

சுத்திபுட்டானேயடா நம்ம (தறு)தலைவன்.. நம்மையெல்லாம் நல்லா சுத்திபுட்டானேயடா..!! -கரிகாலன் (கவிதை)

சுத்திபுட்டானேயடா நம்ம (தறு)தலைவன்.. நம்மையெல்லாம் நல்லா சுத்திபுட்டானேயடா..!! -கரிகாலன் (கவிதை)

சுத்திபுட்டானேயடா நம்ம (தறு)தலைவன்
நம்மையெல்லாம் நல்லா சுத்திபுட்டானேயடா
நமக்கென்று உலகத்தில் ஒரு நாடில்லை என்றான்
நான் அதை உங்களுக்கு அமைத்து தருவேன் என்றான்
நாமளும் அதை நல்லா நம்பியிருந்தோமடா
நமக்கு நல்லா நாமம் போட்டுவிட்டு
நாட்டை விட்டே நைசாய்
நழுவி போய் விட்டானேயடா..

பெண்ணின் பெருமை!	(கவிதை) -வள்ளியம்மை சுப்பிரமணியம்.

பெண்ணின் பெருமை! (கவிதை) -வள்ளியம்மை சுப்பிரமணியம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
திட்டமிட்டுக் குடும்ப நிர்வாகம் நடாத்துவதும்
கட்டுப்பாடாய் இல்லறத்தை கவனமாக உயர்த்துவதும்
எட்டுத்திசை எங்கணுமே பெண்ணின் பெருமையதே!
கருவை உருவாக்கக் காத்திருந்தாள் பத்துமாதம்
அருவருப்புக் கொள்ளாது அனைத்துப் பணிவிடையும்
விருப்பத்துடன் நிறைவேற்றி விளக்கொளியாய்
வலம்வரும் அருமைப் பெண்மையின்
பெருமையைப் போற்றுவோம்!…

ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி!!! -வள்ளீயம்மை சுப்பிரமணியம்

ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி!!! -வள்ளீயம்மை சுப்பிரமணியம்

ஈழத்து மண்ணிலே பிறந்த இனமொன்று
வாழ்கின்ற வயதிலே வளமிழந்து இடம்பெயர்ந்து
சூழ்கின்ற துயரங்கள் சுழன்றடித்த போதினிலே -மனமும்
பாழ்பட்டுப் போகாமல் பக்குவப் படுத்தவேண்டி
ஆழ்ந்த சிந்தையுடன் அயராது பாடுபட்டு -தோல்வியில்
மூழ்கிப்போய் மூலையிலே முடங்கிக் கிடக்காமல்
வீழ்ச்சியில்லா வீறுகொண்ட வீரமான மாதரசி!
தாழ்வில்லை உன்பணிக்கு தரணியிலே முன்னுரிமை!!

“எல்லோரும் சேர வேண்டும்

“எல்லோரும் சேர வேண்டும்” –திருமதி.வள்ளியம்மை (கவிதை)

“எல்லோரும் சேர வேண்டும் – சிங்கையில்
நல்லோர்கள் இணைய வேண்டும்
கவிமாலைக் குடும்பங்கள் நாம் – இங்கே
கவி பாடி மகிழ வேண்டும் (எல்லோரும் )
பிச்சினிக் காடார் பெருமை வேண்டும் -முன்னோடியை
மெச்சினாம் நினைக்க வேண்டும்
ஆசியான் கவி ஆசி வேண்டும் -அவரது
தேன்கவியில் திழைக்க வேண்டும் (எல்லோரும் )

செந்நாரை..!!! -வம்சிகன். (சிறுகவிதை)

செந்நாரை..!!! -வம்சிகன். (சிறுகவிதை)

ஆலமரம் அரசமரம்
ஆள ஒற்றைத் தேசம் வரும்.
நாலு மரம் நட்டுவைச்சா
நாளை ஒரு தோப்பு வரும்.
கோலமிட முற்றம் வரும்
கொண்ட சுற்றம் வாழ வரும்.
வாழை வைத்த தோப்புக்குள்ளே
வம்சமெல்லாம் உச்சம் வரும்.
சிகிரியாவின் சித்திரங்கள்
செந்தமிழில் பேச வரும்.
சீனன்குடா அலையசைந்தால்
சிங்களத்தின் ஓசை வரும்..

இறக்கைகள் முளைத்து பறக்க முன்னே.. (கவிதை)

இறக்கைகள் முளைத்து பறக்க முன்னே.. (கவிதை)

இளஞர்களின் உயிர்தனை
இலவசமாய் இரவல் வாங்கி -தன்
இருப்புதனை நிலைநாட்டிட
இறக்க வைத்தான் ஒருவன்
இறுதியாண்டில் இறந்தவர்க்கு
இரங்கல் ஒப்பாரிவைக்க
இவன் வருவான் என்றொண்ணி
இலவு காத்த கிளிபோல்
இரவு பகலாய் காத்துக் கிடந்தனர்; பலர்
அவன் வரவேயில்லை..
இவன் ஏன் இந்த வருடம் வரவில்லை
இதுவென்ன சோதனையோ?
இவனுக்கேதாவது நடந்திருக்குமோ?
எனவெண்ணி இங்குமங்கும்
இடர்கொண்டு தவித்தனர் பலர்..

உண்மை தனை நிலைநாட்டிய ஒர் கருணை உள்ளம்... அவரே என்றும் எங்கள் கருணாஅம்மான் (கவிதை)

உண்மை தனை நிலைநாட்டிய ஒர் கருணை உள்ளம்… அவரே என்றும் எங்கள் கருணாஅம்மான் (கவிதை)

மலர்கள் மத்தியில் நல் மணம்பரப்பிய ஓர் மலர்
மலர்ந்த முகத்துடன் எங்கள் கருணா அம்மான்
மலர்தூவி வாழ்த்திடுவோம்–நாங்கள்
மகிழ்ச்சி பொங்கிடவே சிரித்து மகிழ்ந்திடுவோம்
தெளிந்த நீரோடை எங்கள் அம்மான்
தெளிவு பெற்றதால் மக்கள் –என்றும்
தெருக்களில் நிற்க்கவில்லை– நாங்கள்
தெம்மாங்கு பாட்டு படித்து அவருக்கு
தேனிசைகீதம் பாடிடுவோம்–அடிடுவோம்
உன் நாமம் உயர்வான நாமம்
உள்ளத்தில் களங்கமில்லை
உவைகையில் ஒர் குறைவும் இல்லை
உண்மையுடன்  அம்மான் என்றும்–நாம்
உரைக்கின்றோம் பறை சாற்றுகின்றோம்..

என் அன்னை சிறீலங்காவுக்கு... முதலில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய மக்களின் கதவைத் திறந்து... (கவிதை)

என் அன்னை சிறீலங்காவுக்கு… முதலில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய மக்களின் கதவைத் திறந்து… (கவிதை)

மக்களின் ஐக்கியம் ஒன்றேநாட்டின் பலமாக
மதபேத இனபேத பிரதேச பேதமிலா
மக்கள் மனதில் வன்முறையை விதைகாத
தக்கநீர் வளத்தைத் தரமாக உயர்த்திட
விக்கினம் இல்லாத விவசாயம் மேம்பட
தரணிசூழ் உப்புநீர் ந்ன்னீராய் மாற்றிட
அறிஞர் பலரின் ஆலோசனை பெற்றால்
அனைத்து மாகாணங்களும் செழிப்புடன் வளருமே!
எண்ணிக்கையில் குறைவான இனத்திலே உதித்துக்
கண்ணியமாகக் கடமைகள் ஆற்றிய நாதன்….
நண்ணியே அவரை நாட்டின் தலைவனாய்ப்
பண்ணிய சிங்கையைப் பார்த்தே மகிழ்வாய்
மண்ணின் அளவில் சிறிதாக இருந்தாலும்
திண்ணமான சாதனைத் திறமைகள் மிளிரும்
விண்ணுலகம் என்பது மானிடர் வாழ்கின்ற
மண்ணில் தானன்றோ மலர்ந்து சிரிக்குது!…

கொத்து ரொட்டி விற்று வயிறு வளர்க்கும் புலித்தமிழா? (கவிதை)

கொத்து ரொட்டி விற்று வயிறு வளர்க்கும் புலித்தமிழா? (கவிதை)

கொலை இல்லாத இலங்கையடா புலித்தமிழா?
கொள்கை ரீதியாக நீ ஏற்க வேணுமடா புலித்தமிழா?
கொலைகார கூட்டம் புலிகள் எங்கேடா புலித்தமிழா–இப்போ
கொலைகள் எதையும் காணோமடா புலித்தமிழா?
கோமான்களை அழித்தனர் புலிகளடா புலத்தமிழா?
கொடிபிடித்த புலித்தமிழர் எங்கேடா புலித்தமிழா?
கொசு வலைக்குள் ஒழிந்திருப்பரடா புலித்தமிழா?
கொண்டு வா அவனை கண்முன்னே புலித்தமிழா?
கொக்கரித்த கோசமெல்லாம் காணோமடா புலித்தமிழா?
கொட்டாவி விட்டபடி மதிலில் உறங்கனரடா புலித்தமிழா?
கொடியேற்றமில்லாத விழாக்கள் தொலைந்தது புலித்தமிழா?
கோமணமும் இப்போ மிச்சவில்லை புலித்தமிழா?…

இலங்கை மன்னர்கள்!!! -இனியவன் இஸாறுதீன் (கவிதை)

இலங்கை மன்னர்கள்!!! -இனியவன் இஸாறுதீன் (கவிதை)

ஆதியிலிருந்தே
அசையவில்லை
எங்கள் ஆராய்ச்சிமணி..
குற்றங்கள் என்னவோ
குறைந்து விட்டனவாம்
நம் தேசத்தில்..
ஆயுள்முழுவதும்
அமுலாக்கப்பட்டே உள்ளது
அவசரகாலச் சட்டம்..
பாதுகாப்பும் பந்தோபஸ்தும்
அதிகரிக்கப்பட்டே உள்ளது..
அமைதியைக் காப்பாற்ற
ஆயிரமாயிரம் கைதிகளும் குற்றவாளிகளும்
அடைபட்டே கிடக்கிறார்கள்..
இருட்டுச் சிறைகளில்
இரண்டு கால்களில் நிற்க முடிகிறது
தலைநிமிரவே முடியவில்லை
ஜனங்களுக்கு..

சிதறிப்போன இதயம்... (கவிதை)

சிதறிப்போன இதயம்… (கவிதை)

நான் கடல்
நீ தோணி
என்னைக் கடந்து விட்டாய்
வேறொருவனை ஏற்றிக் கொண்டு
என் மீது
பயணம் செய்து விட்டு
நன்றியை
அவனுக்கு செலுத்தி விட்டாய்
இன்னொருமுறை
வரும்போது -வெறும்
தோணியுடன் வா
நானே
அலையாகி -உன்னை
அழைத்துச் செல்கிறேன்…..

இறந்தவனை நினைத்து இன்பமா இனிப்பு ஆகாரம் உண்டு.... (கவிதை)

இறந்தவனை நினைத்து இன்பமா இனிப்பு ஆகாரம் உண்டு…. (கவிதை)

இறந்த ஓருவனை நினைத்து
இன்பம் கொண்டு –கூத்தாடும்
இரக்கமில்லாத அரக்கர் கூட்டம்
இழிவான செயல் இது புலிப்பினாமிகளே
இருப்பவர் புகழை பாராட்டுவர்
இல்லாதவர் பெருமைகளை கூறி
இதய சுத்தியுடன் அகம் மகிழ்வர்
இது மானிர்களிடையே இயற்கையடா
இறமை புரியா புலிப்பினாமிகளே
இடுகாடு சென்றவனை எண்ணி
இரும்பு மனம்கொண்ட சோம்பேறிகள்
இதயத்தில் வலிஇல்லாமல்
இனிப்பு ஆகாரம் செய்து
இன்பம் களிப்பது உங்களுக்கு
இலகுவான பொழுது புலிப்பினாமிகளே..

பிள்ளையானுக்கு பிள்ளை மனசு.. (கவிதை)

பிள்ளையானுக்கு பிள்ளை மனசு.. (கவிதை)

கொள்கை ஒன்றை வகுத்து–முன்னேற்றக்
கொடி தனை நாட்டி மக்கள் பலத்தை
நெஞ்சில் விவேகமுடன் தாங்கி
நெடும் பயணம் தொங்கியவர்–எங்கள்
பிள்ளையானுக்கு பிள்ளை மனசு..
திறமைசாலிகளின் புத்திக்கூர்மை
திறன்படவே செயல்பட்டது
வஞ்சகம் இல்லை விரகமில்லை
வார்த்தையில் வர்ணனை இல்லை
வடித்தெடுத்த நன்நீராய்–எங்கள்
பிள்ளையானுக்கு பிள்ளை மனசு..

தனிநாடு கேட்டுவிட்டு தாய்மண்ணை விட்டு ஓடும் தமிழா.... -கவிதை

தனிநாடு கேட்டுவிட்டு தாய்மண்ணை விட்டு ஓடும் தமிழா…. -கவிதை

இறைவன் தந்த இலங்கையடா தமிழா
இயற்கை தந்த இலங்கையடா தமிழா
இதயம் உள்ளவரை  தமிழா
இதய சுத்தியுடன் இவ்வுலகில் தமிழா
இலங்கைதனை  நேசியடா தமிழா
இன்பம் துன்பம் இயற்கையடா தமிழா
இயல்பான வாழ்க்கை இருந்தால் தமிழா
இறைஉன்னை தேடி வருவான் தமிழா–உன்
இனிமையான நாவிலே தமிழா
இதமான வார்த்தைகளை தவழவிடு தமிழா..

ஒர் விதவையின் கண்ணீர் கதை கவிதையுருவில்.... (கவிதை)

ஒர் விதவையின் கண்ணீர் கதை கவிதையுருவில்…. (கவிதை)

விபரம் புரியதவர் கைகளில்
விபரீதம் தரும் ஆயுதங்கள்
விபரிக்க முயன்றால்
விரோதியாக்குவர் நம்மை பரவாயில்லை
விடுதலைக்கு ஏந்திய ஆயுதம்
விளைநிலங்களாகிய பெண்களையல்லவா
விதவைகள் ஆக்கியது இன்று
விந்தையான  போராட்டம்
விதவைகள் அநாதைகளாக தெருவில்..
வியர்வை சிந்தா மனிதர்களினால்
விதவைகள் பல்லாயிரம்– -இன்று
விவசாயம்தரும் எங்கள் தேசத்தில்
விரயமான குருதிமண்ணில்
விடைகள் ஏதும் இல்லை– மண்ணை
விட்டு விட்டு ஓடிய சுயவாதிகளின்
வீராப்பு கொண்ட எண்ணங்களினால்
விதவைகள் என்னும் ஆயிரமாயிரம்..

ஓ எங்கள் தோழனே..

ஓ எங்கள் தோழனே..

நம்மினத்தின் விடியல் வேட்கையுடன் –வீர
நடை போட்டு நீ எங்களுடன்
நற்பண்புகள் சுமந்து
நடை பயின்ற நாட்கள் எண்ணி
நனைகின்றது எங்கள் காலடிமண்
நண்பனே எங்கள் தோழனே..
நயவஞ்சகனின் வலைக்குள் அகப்படாது
நடுக்கடல் தாண்டி நாம் –தோழமையுடன்
நடாத்தி வந்தோம் கொள்கைதனை
நலமுடனே பரப்பி வந்தோம்
நண்பனே எங்கள் தோழனே…
நனைகின்றது எங்கள் காலடிமண்
நற்கூற்று கழகத்தின் சேவைகளாகவும்
நம்மிடையே பகிர்ந்து கொண்டோம்
நடுக்கம் உனது கரங்களில்
நாம் என்றும் கண்டதில்லை
நனைகின்றது எங்கள் காலடிமண்
நண்பனே எங்கள் தோழனே..

புலிமாமா பிரபாகரன் தந்த குப்பி.. (கவிதை)

புலிமாமா பிரபாகரன் தந்த குப்பி.. (கவிதை)

புது வடிவான குப்பி
புலிமாமா தந்த குப்பி
புரியாத  சின்னம் இந்த குப்பி
புரிந்து விட்டதே அது சைனட்குப்பி
புலிமாமா தந்த குப்பி
புகழ்ச்சி வேண்டி அணிந்த குப்பி
புகழாரம் தேடும் இந்த குப்பி
புவியின் அடியில்உயிரை அழைக்கும் குப்பி
புரிந்து விட்டதே அது சைனட்குப்பி
புலிமாமா தந்த குப்பி…
புத்தில் ஒளிந்த தலைவன் போட்ட குப்பி
புத்துயிர் தராதுஇந்த குப்பி
புலம்பவைக்கும் இந்த குப்பி
புரிந்து விட்டதே அது சைனட்குப்பி
புலிமாமா தந்த குப்பி..

வாசகிக்கு எங்கள் வருத்தங்கள் (கவிதை)

வாசகிக்கு எங்கள் வருத்தங்கள் (கவிதை)

வர்ணம் கொண்ட
வானவில் சிலநிமிடம்
வந்து போகும்
வசந்தமாய் சில நிமிடம்
வளர்பிறை தேய் பிறை
வாழ்க்கையின் வடிவம்
வருத்தமும் தேர்ச்சியும்
வளர்ச்சி தரும் ஒர்வடிவம்
வாட்டத்தின் அரசாட்சி
வாட்டிவதைக்கும்–சிலகணம்
வந்து வாழ்ந்த உறவை
வாவென்று கையுடன்அழைத்து செல்லும்…

கருணையற்ற  கனவு கண்டவர்களே... (கவிதை)

கருணையற்ற கனவு கண்டவர்களே… (கவிதை)

காவிய நாயகர்களை
கருக்கி விட்டு
கண்இமைக்குமுன்
கடல் தாண்டி வந்தவர்களே
கண்ணியம் அற்றவர்களே
கர்வம் அடங்காமல்
கரங்களில் தட்டேந்தி மக்களின்
கதவுகளை தட்டிய
கரப்பான் வண்டுகளே
கருணை தனை
கரிக்கட்டையாக நினைத்தவர்களே
கரிசனம் இருக்கிறதா?
கருதனை சுமந்தவர்களையும்
களத்திற்கு அனுப்பியவர்கள்
கண்டீர்களா உங்கள் கனவை
கனியும் நனவாக– இன்று
கல்லறைகளை மட்டும் தான்
கரங்களில் நீங்கள் கொண்ட மிச்சம்….

இவர்கள் மனிதர்கள் அல்ல

இவர்கள் மனிதர்கள் அல்ல “புலி” மிருகங்கள் தானே..! (கவிதை)

ஆயிரமாயிரம்; நம்மின செல்வங்களை..
அன்னையரவர் அடைகாத்து பெத்து வளர்த்தவர்
அடிவயிற்றில் அடித்து அடித்து அழுதபோதும்
அரக்கன் பிரபாகரன் தன் படையேவி
ஈவு, இரக்கமேதுமின்றி பச்சிளம் பாலகர்களை
ஆயுதமுனையில் அடக்குமுறையால் அபகரித்து சென்று
அநியாயமாய் ஆமிக்காரர்களிடம் உயிhப்;பலி கொடுத்தவன்
அவன் தன் பிள்ளைதனை மட்டும் அடைகாத்து
அமுதூட்டி அறிவூட்டி  அழகாய் வளர்த்;தான்
அந்தோ பரிதாபம்! அந்தோ பரிதாபம்..
அவன் செய்த பாவங்கள் அவனை அன்றே வந்தடைந்தது
அவன் பிள்ளையையும் ஆமிக்காரர்களால்
அபகரிக்கப்பட்டு அனியாயமாய் அழிக்கப்பட்டானே!
அந்தச் செய்திகேட்டு அரக்கனால் அழிக்கப்பட்ட
பிள்ளைகளின் அன்னையர்களின் அழுகை
அந்த கணமே அடங்கிப் போனதுவே..

நட்புக்கு

நட்புக்கு “தோல்வி” கிடையாது…!! (கவிதை)

என்  சினேகிதியே!
நீ எங்கிருக்கிறாய்?
நீ எப்படியிருக்கிறாய்?
உன் உடலும் உள்ளமும் நலமா?
உன்னைத் தேடித் தேடி
களைத்துப் போனவளாய்
நானிருந்த வேளைதான்
கைதாகி நிற்கின்றேன்!
என் தேகக்கட்டும்
எனது வயசும் தான்
என்னை பயங்கரவாத பட்டியலில்
அடைத்து வைத்திருக்கிறது!….

கார்த்திகை மாதம் நீ வருவாய்யென நாம் காத்துக் கிடக்கிறோம் தலைவா! (கவிதை)

கார்த்திகை மாதம் நீ வருவாய்யென நாம் காத்துக் கிடக்கிறோம் தலைவா! (கவிதை)

காலிங் “பெல்”லை அடித்துக் கொண்டு..
கடைசிப் போராட்டமென்று சொல்லிக் கொண்டு
காசுகேட்டு வந்தாங்க தலைவா..
கதவை திறந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில்
கனபேர் கடகடவென உள்ளிட்டு
“காலி”யாய்யிருந்த கதிரைகளில்
உக்கார்ந்தாங்கள் தலைவா!
“கடைசிக்கட்ட” போராட்டமென்று சொல்லி
கழுத்தை பிடிக்காத குறையாக
காசு கேட்டாங்கள் தலைவா..
கையை விரித்து விரித்து காட்டி
கண்ணைக்கசக்கி கஸ்ரமெல்லாம் சொல்லியழுது
நாங்கள் காலம் காலமாய் கட்டிய தொகையின்
கணக்கையும் காட்டி காசு இப்போ இல்லையென்று
கைகளிரண்டையும் விரித்து காட்டினோம் தலைவா!..
இல்லை, இல்லை… இது கடைசிக்கட்ட போராட்டம்
எனச்சொல்லி கட்டாயப்படுத்தி
கடன் என்றாலும் எடுத்து தாருங்கோ.. – எனக்
காலில் விழாத குறையாக கதைத்தார்கள் தலைவா!..

வீடுவீடாய் அழைப்பில்லா விருந்தாளிகளாய் புலிப்பினாமிகள்...

வீடுவீடாய் அழைப்பில்லா விருந்தாளிகளாய் புலிப்பினாமிகள்…

வீமர்களை கொழுத்தி புதைத்து விட்டு
விமானம் ஏறி வந்திறங்கி
விந்தைகள் பல காட்டி
வீடு விடாய் அழைப்பில்லா
விருந்தாளிகளாய்—
விளக்கு  வைக்கும் நேரங்களில்
வீட்டுக்கதவினை  தட்டிய
வீம்புக்கார புலிப்பினாமிகள்..
விடுதலை எனும் நாமம் இட்டு
வீதி வீதியாய் உங்கள் தலைவனை
விற்பனை செய்தீர்கள் நீங்கள்..
விதைகள் தழைத்துவர
விதைத்தீர்கள் மறுபடியும் புதைத்து
விடைதேடா மானிடர்கள் நீங்கள்
வீம்புக்கார புலிப்பினாமிகள்..

மக்டோனால்ஸ் மகேசுவரா.. ஆகா பேஷ்..பேஷ்.. றொம்ப நல்லா இருக்கு.... (கவிதை)

மக்டோனால்ஸ் மகேசுவரா.. ஆகா பேஷ்..பேஷ்.. றொம்ப நல்லா இருக்கு…. (கவிதை)

மக்டோனால்ஸ் உணவுண்டு
மகிழ்ச்சியாய் காலம் கழித்து
மரணங்களை  தங்களுக்காக
மலிவாக மண்ணுக்குள்
மகிழ்ச்சியாய் தாரை வார்த்து
மகிழ்ந்தாடிய புலிப்பினாமிகள்….
மண்ணில் அப்பாவிகளை–சுடு
மண்ணில் தவிக்க விட்டு–இழிவு
மச்சமொன்றை தங்கள் முதுகில்–இட்டு
மாமிசம் கொண்ட உல்லாச—உணவருந்தி
மகிழ்ந்தாடிய புலிப்பினாமிகள்….
மழலைகளை படைக்கு–அனுப்பி
மறைவாக வெளிநாடு வந்து
மல்லாக்கா படுத்திருந்து
மந்திரங்கள் பல புரிந்து
மகிழ்ந்தாடிய புலிப்பினாமிகள்….