இலங்கை தேயிலை ஏற்றுமதியில் 100 கோடி டொலரை தாண்டி சாதனை
இலங்கை தேயிலை கைத்தொழிலின் 140வருட வரலாற்றில் முதல் தடவையாக தேயிலை விற்பனவு கடந்த ஆண்டில் 100கோடி அமெரிக்க டொலரைத் தாண்டி சாதனை படைத்திருக்கின்றது இத் தகவலை நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி வெளியிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பளப் போராட்டத்தின் போதும் அதன் பின்னர் மலையகப் பகுதியில் நிலவிய வரட்சியின் போதும் கொழுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது இதன் மத்தியிலும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். 2006ம் ஆண்டு 304.6 பில்லியன் ரூபா பெறுமதியான தேயிலை எற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதில் 22 சதவீத அதிகரிப்பு எற்பட்டு ரூ 112 பில்லியன் எற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும் 2006ம் ஆண்டு 310.8 மில்லியன் கிலோவாகக் குறைந்திருந்தது. இவ்வாறான வேலை நிறுத்தம், வரட்சி, குறைவான உற்பத்தி என்பனவற்றுக்கு மத்தியில் இந்த 100 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது