கஞ்சா கடத்திய சிவில் பாதுகாப்பு படை அதிகாரி உள்ளிட்ட 3பேர் கைது
மரக்கறி வியாபாரம் என்ற போர்வையில் பெருமளவிலான கஞ்சாவை கடத்திய சிவில் பாதுகாப்புப் படை அதிகாரி தலைமையிலான குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சிவில் பாதுகாப்புபடை அதிகாரி மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது மொனராகலையிலிருந்து இரத்தினபுரி நோக்கி எடுத்துச் செல்லப்படவிருந்த 37 கிலோகிராம் எடையுடைய கஞ்சாவைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் மொனராகலை வாகனத் தரிப்பிடமொன்றிலேயே கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மொனராகலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர் போதிய பயிற்சி மற்றும் கல்வித் தகமையற்றவர்களை பொலிஸ் மற்றம் பாதுகாப்பு கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதனாலேயே சட்டவிரோதச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் மேலும் தெரிவிக்கப்படுகிறது
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்