இந்தியாவுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் இல்லை வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இந்தியாவின் தாளத்திற்கும் ஏற்றவகையில் இலங்கை அரசாங்கம் நடனமாடுவதாக ஜே.வி.பியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க 13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் மிக நுட்பமான முறையில் எமது இறைமையில் தலையீடு செய்வதாக விஜிதஹேரத் மேலும் குற்றஞ் சுமத்தினார். எனினும் இலங்கை அரசாங்கத்தின் இறைமை கட்டடிக்காப்பதற்கும் பயங்கரவாதத்துக்கும் எதிராக போராடுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாக போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>