வாழைச்சேனையில் ஐஸ்வாடி உரிமையாளர் வீட்டின்மீது குண்டுவீச்சு // வாரியப்பொல வீதியில் டிப்பர் வாகனம் வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்தல்
புத்தளம் மாவட்டம் சிலாபம் வாரியப்பொல வீதியில் டிப்பர் ரக வாகனமொன்று நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளது. வெள்ளைவேனில் பயணம் செய்த நால்வர் இந்த டிப்பர் வண்டியைக் கடத்திச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் ஐஸ்வாடி உரிமையாளர் ஒருவரது வீட்டின்மீது சிலர் இன்று அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென்ற போதிலும் வீட்டிற்கு சேதமேற்பட்டிருப்பதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறியும் பொருட்டு வாழைச்சேனைப் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்