;
Athirady Tamil News

பராகுவேயில் துணிகரம் – இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி…!!

0

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். அதன்பின் அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

பாதுகாப்புக்கு இருந்த போலீசார் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.