;
Athirady Tamil News

10 நாட்களில் 30,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!!

0

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கைக்கு 30,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பெப்ரவரி 01 முதல் 10 வரை மொத்தம் 31,343 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதன்படி பெப்ரவரி மாதத்திற்கான தினசரி சராசரி வருகை எண்ணிக்கை 3,134 ஆகப் பதிவாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவிலிருந்து அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை 4,566 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்ததாக 3,799 சுற்றுலாப்பயணிகள் இங்கிலாந்திருந்து வருகை தந்துள்ளனர்.

இதுவரை இரண்டாவது இடத்திலிருந்த இந்தியாவிலிருந்து 3,575 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இது தவிர ஜெர்மனி, உக்ரைன், பிரான்ஸ், போலந்து மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.