;
Athirady Tamil News

எரிபொருள் விலையை அதிகரிக்க கோரிக்கை !!

0

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் குறித்த பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் எனவும் சுமித் விஜேசிங்க கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.