;
Athirady Tamil News

நீரை சேமித்து வையுங்கள்; அவசர அறிவிப்பு !!

0

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில், ஒரு மாதத்திக்கு மேல் நீர்ப் பாவனை கட்டணத்தை செலுத்தாதவர்கள் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு, அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் யூ.கே.எம். முஸாஜித் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஆறு மாதங்களாக மாதாந்த நீர்ப் பாவனை கட்டணம் செலுத்தப்படாமலுள்ளதாகவும், இவர்களுக்கு நீர் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இப்பிரதேசங்களில் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் பாவனையின் அளவு போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இணைப்பு துண்டிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட தொகை நிலுவையை செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்கள் தமது நீர்க்கட்டணத்தைச் செலுத்தி, அசௌகரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீர் துண்டிப்பு செய்யப்படும் வாடிக்கையாளர் நீர்க்கட்டண பட்டியல் தொகையுடன் தண்டப்பணத்தையும் முழுமையாக செலுத்திய பின்னரே மீளிணைப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை,எதிர்காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் நீர்ப்பாவனையாளர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை நீர்த்தாங்கிகளில் சேமித்து வைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.