;
Athirady Tamil News

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

0

எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை.

விலை அதிகரிப்பு குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.