;
Athirady Tamil News

யாழில் நாளை இரத்ததான முகாம்!!

0

யாழில் தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி நடாத்தும் 24 ஆவது இரத்ததான முகாம் நாளை திங்கட்கிழமை(14.02.2022) காலை- 8.30 மணி தொடக்கம் பிற்பகல்- 3.30 மணி வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக்கொடையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததானமுகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரத்ததானம் வழங்க விரும்பும் குருதிக் கொடையாளர்களின் நலன் கருதிப் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து வசதி தேவைப்படுபவர்கள் 0773241755 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் கேட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.