;
Athirady Tamil News

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயார்?

0

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண்பதற்காக அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

அதேபோன்று அதற்காக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் நாம் அரசாங்கத்தின் பங்காளிகளாகவோ அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதோ எமது நோக்கமல்ல.

எவ்வாறெனினும் நாட்டு மக்களுக்காக அந்த அர்ப்பணிப்பை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.