;
Athirady Tamil News

மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

0

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 629,347 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 36 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,844 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 317 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 595,345 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.