;
Athirady Tamil News

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன…!!

0

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் 1-ம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

முக கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வகுப்புகள் நடைபெற்றன. 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். இதனால் முதல் நாளாள நேற்று கிட்டத்தட்ட 82.77% வருகை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.