;
Athirady Tamil News

ரொறன்ரோவில் சகபணியாளர்கள் மூவருக்கு அடித்த அதிஷ்டம் – மகிழ்ச்சி கடலில் அவர்கள் !!

0

கனடாவின் றொரன்டோவில் ஒன்றாக பணிபுரியும் மூன்று பணியாளர்கள் லொத்தர் சீட்டிழுப்பில் பெருந்தொகை பணத்தினை வென்றெடுத்ததுடன் மிகப்பெரும் மகிழ்ச்சி கடலில் திளைத்துள்ளனர்.

அன்ட்ரே நிக்கலோசன், எய்லீன் மொன்டோசா மற்றும் ரோஸ் அந்தனிப்பிள்ளை ஆகிய மூன்று பணியாளர்களே இவ்வாறு பரிசை வென்றெடுத்தவர்களாவர்.

கொஸ்ட்கோ நிறுவனத்தின் பணியாளர்களே மூன்று பேர் ஒன்றாக லொத்தர் சீட்டிழுப்பில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஒக்ரோபர் மாதம் 11ம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில் இந்த மூன்று பேருக்கும் ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.

இரவு பணி நேரத்தில் லொத்தர் சீட்டு வெற்றி குறித்து பரீட்சித்த போது பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டமையை அறிந்து கொண்டதாக அன்ட்ரே தெரிவித்தார்.

பல தடவைகள் ஸ்கான் செய்து பரிசுத் தொகை உண்மைதானா என்பதனை தாம் உறுதி செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஒ.எல்.ஜீ எனும் லொத்தர் சீட்டிழுப்பில் இவ்வாறு பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு மூன்று நண்பர்களும் பல தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.