;
Athirady Tamil News

விபசாரத்திற்கு தூண்டிய கணவனால் மனைவி மரணம் !!

0

காதல் மனைவியை கணவன் விபசாரத்தில் தள்ள முற்பட்டதால் மனைவி தனது உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் பாடசாலை கல்வியை கைவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்குச் சென்று காதலனை திருமணம் செய்துள்ளார் . திருமணமாகி சில வாரங்கள் கழிந்த நிலையில், குறித்த பெண்ணின் கணவன் தனது மனைவியை பணத்துக்காக விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.

அதனையடுத்து குறித்த யுவதி அங்கிருந்து தப்பித்து மீண்டும் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சீதுவை இளைஞன் குறித்த யுவதியை தொடர்பு கொண்டு தன்னிடம் வருமாறும் இல்லையெனில், இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த யுவதி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.