;
Athirady Tamil News

காணிகளை பறித்துக்கொண்டு பிஸ்கட் தாறீர்களா ? என மக்கள் ஆவேசம்!! (PHOTOS)

0

தமது முகாமிற்கு முன்பாக போராடிய மக்களுக்கு , பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வழங்கிய கடற்படையினரிடம் அவற்றை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29 பேருக்கு சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு காணி அளவீடு செய்ய நில அளவை திணைக்களம் இன்றைய தினம் புதன்கிழமை நடவடிக்கை எடுத்த போது, குறித்த கடற்படை முகாமிற்கு முன்பாக காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக நில அளவை திணைக்களத்தினர் தமது பணியை முன்னெடுக்காது, திரும்பி சென்றனர்.

அதனை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்த போது , தமது முகாமிற்கு முன்பாக போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கடற்படையினர் வழங்கினார்.

அதற்கு மக்கள், ” எங்கள் காணிகளை சுவீகரித்துக்கொண்டு எமக்கு பிஸ்கட் தருகிறீர்களா ? எங்கள் காணிகளை எங்களிடம் கையளித்து விட்டு ,செல்லுங்கள். எங்களுக்கு பிஸ்கட் தந்து எங்கள் காணிகளை பறிக்காதீர்கள் என கூறி அவற்றை வாங்க மறுத்தனர்.

மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.