;
Athirady Tamil News

மற்றுமொரு விபத்தில் சாரதி படுகாயம்!!

0

மொனராகலை – வெல்லவாய வீதியில் மதுருகெட்டிய பிரதேசத்தில் புதன்கிழமை (02) மாலை இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலையிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கதிர்காமம் லங்காம டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தும் ஒக்கம்பிடியிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கெப் வண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கெப் வண்டியின் சாரதியான டபிள்யூ.ஏ.உதய குமார படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உப பொலிஸ் பரிசோதகர் நாமலின் அறிவுறுத்தலின் பேரில் மொனராகலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஜனக ரத்னசிறி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.