;
Athirady Tamil News

சண்டையின் உச்சகட்டம்- ஆத்திரத்தில் மனைவியின் கை விரலை கடித்து துப்பிய கணவர்!!

0

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் விஜய் குமார். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 23 ஆண்டுகள் நிலையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். விஜய் குமார் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

புஷ்பா வாடகை வீட்டில் தனியே வசிக்கிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று மாலை 4 மணியளவில் விஜய் குமார், புஷ்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியுள்ளது. அப்போது, விஜய் ஆத்திரத்தில் புஷ்பாவின் கைவிரலை பிடித்து கடித்து மென்று துப்பியுள்ளார்.

அவர் விரலை முழுங்க முயற்சித்ததாகவும் தெரிகிறது. மேலும், புஷ்பாவிற்கு கொலை மிரட்டலையும் அவர் விடுத்துள்ளார். இதுகுறித்து குறிப்பிட்டு புஷ்பா விஜய் மீது கொணாணகுந்தே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.