;
Athirady Tamil News

எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கும் !!

0

உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவரின் அறிவிப்பின் மூலம் அறியமுடிகிறது.

உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என
தெரியவருகிறது.

உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கான புதிய விலை இன்றையதினம் (04) அறிவிக்கப்படும் என்று முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.