;
Athirady Tamil News

யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம்!!

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளதுடன் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , கஞ்சாவை மீட்டுள்ளதுடன் , கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.

பொலிஸார் கைதான நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் ,தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.