;
Athirady Tamil News

பதுளை பொது வைத்தியசாலையில் மின் துண்டிக்கும் அபாயம் பதுளை பொது வைத்தியசாலையில் மின் துண்டிக்கும் அபாயம்!!

0

பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு முழுமையாக மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.