;
Athirady Tamil News

ரணில் போட்ட பிள்­ளையார் சுழி!! (கட்டுரை)

0

13ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் பாராளு­மன்­றத்­துக்குள் கொண்டு வரு­வ­தற்­கான பூர்­வாங்க வேலையை செய்து முடித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை நிகழ்த்­திய போது அவர், நாட்டின் வளர்ச்­சிக்கும் எதிர்­காலத்­துக்கும் ஏற்ற வகையில், 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வது முக்­கியம் என்று கூறி­யி­ருந்தார்.

அதனை அடை­வ­தற்கு திறந்த மன­துடன் விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி, பாரா­ளு­மன்­றத்தின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­டையே ஒரு­மித்த கருத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். அத்­துடன் இன்­னொரு கோரிக்­கை­யையும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­தி­ருக்­கிறார்.

அர­சாங்கம் எடுக்கும் எந்­த­வொரு முடி­வையும் எதிர்ப்­பது என்ற பாரம்­ப­ரிய நடை­மு­றையில் இருந்து எதிர்க்­கட்­சிகள் விலக வேண்டும் என்­பதே அது.

அவ­சி­யமே இல்­லாத ஒரு ஆட்­டத்­துக்குள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்­தையும் நாட்­டையும் இழுத்துச் சென்று கொண்­டி­ருக்­கிறார்.

1987இல் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­வினால், பாரா­ளு­மன்­றத்தில் ஆறில் ஐந்து பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­டத்தை- தேரை இழுத்து தெருவில் கொண்டு வந்து நிறுத்­தி­யது போல- பாரா­ளு­மன்­றத்­துக்கு மீண்டும் கொண்டு வரு­வதில் உறு­தி­யாக இருக்­கிறார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

அவ­ரிடம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பதவி இருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்பை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரமும் இருக்­கி­றது.

ஆனால், அவர் அதனை கையா­ளு­வ­தற்குப் பதி­லாக, அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைக் கோரு­கிறார். உல­கத்­தி­லேயே மிகவும் கேலிக்­கூத்­தான விடயம் இது.

அர­சி­ய­ல­மைப்பை செயற்­ப­டுத்­து­வதா என்று பாரா­ளு­மன்­றத்­திடம் அனு­மதி கோரும் வழமை வேறெங்கும் இருந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

சொந்த அர­சி­ய­ல­மைப்­பையே செயற்­ப­டுத்­தாத ஒரே நாடு இலங்கை தான்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை 36 ஆண்­டு­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்­தாத இலங்கை அரசு, அதனை நடை­மு­றைப்­ப­டுத்த மீண்டும் நாடா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்தைக் கேட்­பது ஒன்றும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டின் எதிர்­காலம், வளர்ச்சி என்­ப­ன­வற்­றுக்கு 13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது முக்­கியம் என்று கூறி­யி­ருந்­தாலும், அதனை செயற்­ப­டுத்­த­வ­தற்­கான தற்­து­ணிவு அவ­ரிடம் இல்லை.

அதனால்தான் அவர் பாரா­ளு­மன்­றத்தின் கையில் பந்தை தூக்கி வீசி­யி­ருக்­கிறார்.

அர­சி­ய­ல­மைப்பில் குறை­பா­டுகள் இருப்­பது வழமை. அவற்றைத் திருத்திக் கொள்­வதும் உலக வழக்கம்.

இலங்­கையில் ஜே.ஆர். கொண்டு வந்த 1977ஆம் ஆண்டின் இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பில் இது­வரை 22 திருத்­தங்கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால், 1789 இல் நடை­மு­றைக்கு வந்து, 233 ஆண்­டு­க­ளாக நடை­முறையில் இருக்கும் அமெ­ரிக்க அர­சி­ய­ல­மைப்பில், இது­வ­ரையில் 33 திருத்­தங்கள் தான் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

திருத்­தங்கள் செய்­யப்­ப­டு­வதால் அர­சி­ய­ல­மைப்பு செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்று அர்த்­த­மில்லை.

13ஆவது அர­சி­ய­ல­மைப்பில் குறை­பாடு அல்­லது தவறு இருந்தால் அதனை திருத்­து­வது அல்­லது நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை அவ்­வாறு நீக்க முயன்றால், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நெருக்­கடி ஏற்­படும்.

13ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு கார­ண­மாக இருந்த இந்­தியா அதனை இல­குவில் அனு­ம­திக்­காது. அதனால் தான், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, 13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைக்கு கொண்டு வரு­வ­தற்கு ஒப்­புதல் பெறு­வது என்ற பெயரில், – இதனை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரு­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விப­ரீத விளை­யாட்டின், ஆபத்­துக்­களை உணர்ந்து கொண்­டி­ருக்­கி­றாரா என்று தெரி­ய­வில்லை.

13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை அமுல்­படுத்­து­வது அவ­சியம் என்று கரு­து­கின்ற அவர், அதற்கு அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வையும் கோரு­கிறார். ஆனால், 13 விட­யத்தில், அதனை காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுடன் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்தில் பல்­வேறு கருத்து முரண்­பா­டுகள் இருக்­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்தில் காணப்­ப­டு­கின்ற இந்த முரண்­பா­டு­களைத் தனக்குச் சாத­க­மாக்கிக் கொள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரும்­பு­வ­தாகத் தெரி­கி­றது.

அர­சாங்­கத்தின் திட்­டங்கள் எல்­லா­வற்­றையும் எதிர்க்கும் பாரம்­ப­ரிய நடை­முறையில் இருந்து எதிர்க்­கட்­சிகள் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு, 13 ஆவது திருத்த விட­யத்தில் முக்­கி­ய­மான சவால் ஆளும்­கட்­சியில் இருந்தே வரப் போகி­றது என்­பது தெரி­யாமல் இருக்­காது.

பொது­ஜன பெர­முன 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதை எதிர்க்­கி­றது. அதனை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு கிடை­யாது என்று பொது­ஜன பெர­மு­னவின் பொதுச்­செ­ய­லாளர் சாகர காரி­ய­வசம் சில வாரங்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்தார்.

பொது­ஜன பெர­முன இப்­போது ஒன்­றாக இல்லாமல் பிள­வு­பட்டு வேறு நிற்­கி­றது. எனவே, எல்லா தரப்­பு­க­ளையும் ஒரே கோட்­டுக்குள் கொண்டு வரு­வதும் கடினம்.

ஆனாலும், கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி ஒரு­மித்த நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் என்று ஜனா­தி­பதி வலி­யு­றுத்­து­கிறார்.

தேசி­யப்­பி­ரச்­சினை விட­யத்­திலும் சரி, 13 விட­யத்­திலும் சரி, எல்லாக் கட்­சி­களும் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்குள் வரு­வது நடக்க முடி­யாத அதி­சயம்.

ஏனென்றால் சிங்­கள பௌத்த பேரி­ன­வாத மனோ­நிலை அவ்­வா­றா­னது. அது தமிழர் விரோத மனப்­பாங்கு, சிந்­த­னையில் இருந்தே கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது. தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் கொடுக்கக் கூடிய எதையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத மன­நி­லையில் அது இருக்­கி­றது.

அவ்­வா­றான நிலை இருக்கும் வரையில் 13 விட­யத்­திலோ, அதற்கு அப்­பாற்­பட்ட தீர்­வுகள் விட­யத்­திலோ ஒரு­மித்த ஆத­ரவைப் பெற முடி­யாது.

ஜே.ஆர். ஜய­வர்­தன தனது கட்­சியை சேர்ந்த எல்லா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமும் முன்­கூட்­டியே திக­தி­யி­டப்­ப­டாத பதவி விலகல் கடி­தங்­களை வாங்கி வைத்­தி­ருந்­தவர். அதனால் தான் அவரால், 13 ஆவது திருத்­தத்தைக் கூட நிறை­வேற்ற முடிந்­தது.

இப்­போ­தைய சூழலில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி ரணில் பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைக் கோரு­கிறார் என்றால், அது எதன் அடிப்­ப­டையில் என்ற கேள்வி வரு­கி­றது.

பாரா­ளு­மன்றம் வாக்­கெ­டுப்­பின்றி அங்­கீ­காரம் அளிப்­ப­தையே அவர் எதிர்­பார்க்­கிறார். அது நிச்­சயம் நடக்கப் போவ­தில்லை.

அவ்­வா­றாயின், இதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு சாதா­ரண பெரும்­பான்மை போதுமா அல்­லது மூன்றில் இரண்டு விசேட பெரும்­பான்மை தேவையா? அதனை தீர்­மா­னிக்கப் போவது யார்?

மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்­காது போனால், அத­னையே சாட்­டாக வைத்து, 13ஐ நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடாது என்ற கோஷங்கள் கிளம்பும்.

நிச்­ச­ய­மாக இதனை அடிப்­ப­டை­யாக வைத்து, 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் மனுக்கள் தாக்கல் செய்­யப்­ப­டலாம்.

அவ்­வா­றான நிலை ஒன்று ஏற்­பட்டால், 36 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட, ஆறில் ஐந்து பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களால் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை, சரியா தவறா என்று ஆராயும் நிலைக்கு உயர்­நீ­தி­மன்றம் தள்­ளப்­ப­டலாம்.

ஏற்­கெ­னவே உயர்­நீ­தி­மன்ற வியாக்­கி­யா­னத்தின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­றத்தின் விசேட பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு பிரேத பரி­சோ­தனை நடத்­து­கின்ற நிலையை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கிறார் ரணில்.

இது ஜன­நா­ய­கத்­துக்கும், அர­சி­ய­ல­மைப்­புக்கும் ஆரோக்­கி­ய­மா­னது அல்ல. இது எதிர்­கா­லத்தில், பாரா­ளு­மன்றம் நிறை­வேற்­றிய எல்லாச் சட்­டங்­க­ளையும் பாரா­ளு­மன்றம் மீள்­ப­ரி­சீ­லனை செய்யக் கூடிய நிலையை உரு­வாக்கும்.

அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் இருந்து தப்பிக்க பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றால் போதும் என்ற நிலையையும் உருவாக்கும்.

ஜே.ஆர்.ஜயவர்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரையான ஆட்சியாளர்கள், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் நழுவி விட்டு இப்போது, அதனை செயற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கோரப்படுகிறது.

பாரா­ளு­மன்­றத்தில் இதனை ஏன் செயற்­ப­டுத்­த­வில்லை என்று எழுப்­பப்­படும் கேள்­வி­களுக்கு ஆட்­சி­யா­ளர்கள் பதி­ல­ளிக்­காமல் தப்பி விட்­டனர். ஆனால், இந்த விவ­காரம் உயர்­நீ­தி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்டால் – அங்கு அர­சி­ய­ல­மைப்பை ஜனா­தி­ப­தி­க­ளாக இருந்­த­வர்கள் ஏன் நடை­மு­றைப்­படுத்­த­வில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

ஆக, 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம், ஜனாதிபதி ரணில் தெருவுக்குக் கொண்டு வரவில்லை.

கூடவே பல பிரச்சினைகளுக்கும், தீர்க்கப்பட முடியாத நெருக்கடிகளுக்கும் அவர் இப்போது பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் என்பதே உண்மை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.