;
Athirady Tamil News

சமூக வலைத்தள முகப்புகளில் தேசிய கொடி படத்தை வையுங்கள்: மோடி வலியுறுத்தல்!!

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் முகப்பில் தேசிய கொடியை வைத்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இயக்கத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், நமது சமூக ஊடக கணக்குகளில் முகப்பில் தேசிய கொடி படத்தை வைக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

இதன் மூலம் நமது அன்புக்குரிய நாட்டிற்கும் நமக்கும் இடையே உள்ள பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு படத்தை தேசியக்கொடியை வைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.