;
Athirady Tamil News

நிலவில் சந்திரயான் 3- இஸ்ரோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

0

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம், நிலவில் தடம் பதித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோவை பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:- சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் மேற்பரப்பை கைப்பற்றிய 4வது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.