;
Athirady Tamil News

மாலியில் போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல்! 64 பேர் பலி !!

0

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அல்குவைதா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சில சமயம் பொதுமக்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு ஈவிரக்கம் இல்லாமல் அவர்களை சுட்டுக்கொன்றும் வருகின்றனர்.

இந் நிலையில் அந்நாட்டின் வடக்கு காவ் பாம்பாவில் உள்ள இராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

அதே போல நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகினையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட்டுள்ளது.

அடுத்தடுத்து நடந்த இந்தத“ தாக்குதல்களில் 49 பொதுமக்கள் மற்றும் 15 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.