;
Athirady Tamil News

நைஜீரியாவில் படகு விபத்து : 24பேர் பலி !!

0

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நைஜர் மாகாணத்தின் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று (10) 100 பேர் படகில் பயணித்துள்ளனர்.

பக்கத்திலுள்ள நகருக்கு விவசாயப் பணிக்காக இவர்கள் நைஜர் ஆற்றில் படகில் பயணம் மேற்கொண்ட போதே படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.

விபத்துக் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 30 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

மேலும் இந்தப் படகு விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்களை தேடும் பணிகள் தற்போது இடம்பெறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.