;
Athirady Tamil News

சீனாவின் கனவு திட்டத்திற்கு முற்றுப்புள்ளி..! ஜி20 மாநாட்டில் எதிரொலி !!

0

கடல் வழி மார்க்கமாக ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் பெல்ட் அன்ட் ரோடு என்ற சீனாவின் பட்டு பாதை திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி7 அமைப்பில் இருந்த இத்தாலி மட்டும் கடந்த 2004ம் ஆண்டு சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்து இருந்தது.

ஆனால் இதனை தொடர்ந்து சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டம் தங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைப் போல இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீன பிரதமர் லி கியாங்-ஐ சந்தித்து பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோளை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.’

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அடுத்த கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்து இருப்பது சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.