;
Athirady Tamil News

பீகாரில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து; 5 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்!

0

பீகாரில் மாநிலத்தில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் விபத்து
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமில் காமாக்யா நோக்கி சென்ற அதிவிரைவு பயணிகள் ரயிலின் (12506) 6 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 9.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்து நடைபெற்றுள்ள பக்சர் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

5 பேர் பலி
இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த வங்கி திறக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பான தகவல்களை அறிய 97714 49971, 89056 97493, 83061 82542, 83061 82542, 77590 70004 ஆகிய அலைபேசி தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.