;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் நபர் மீது தாக்குதல்..!!!

0

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் , நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி ஈவிரக்கமின்றி தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த காணொளி தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் அடாவடியான செயலுக்கும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.