;
Athirady Tamil News

நெடுந்தீவு கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14) குறித்த 13 மீனவர்களும் 3 படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பின்பு கைது செய்யப்பட்ட மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.