;
Athirady Tamil News

கொழும்பில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கண்டுபிடிப்பு

0

கொழும்பு மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 27 கட்டடங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அதில் ஆபத்தான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புகள்
எனினும் ஆய்வக பரிசோதனையின் பின்னர் உரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.