;
Athirady Tamil News

யார் அந்த புதிய அமைச்சர்

0

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் புதிய சுற்றாடல் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

தற்போது சுற்றாடல் அமைச்சர் பதவி அதிபரின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த நசீர் அஹமட்
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டதால், அவரது அமைச்சுப் பதவி காலியானது.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக நசீர் அஹமட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் சட்டபூர்வமானது என தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.