;
Athirady Tamil News

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

ஏலத்தில் விடப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள்
இதன்படி, நாளை மறுதினம் 65ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.