;
Athirady Tamil News

யாழில் 17 வயது சிறுவனும் பெண்ணும் அதிரடியாக கைது!

0

யாழ்ப்பாணம் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

தடுத்து வைத்து பொலிஸார் விசாரணை
அதேவேளை, பிறிதொரு இடத்திலும் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் 44 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்ததுடன், அவரது உடைமையில் இருந்து 5 லீட்டர் கசிப்பை மீட்டுள்ளனர்.

மேலும் கசிப்புடன் கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.