;
Athirady Tamil News

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பு

0

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று (17) நாடாளுமன்றத்தில் கையளிக்க திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

ஆய்வு அறிக்கை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நகரமயமாக்கலைப் பொறுத்தவரை கடைசியாக 2012 இல் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி நாட்டின் நகரமயமாக்கல் 18.2% ஆக பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.