;
Athirady Tamil News

இலங்கை புகையிரத சேவைக்கு புதிய பொது முகாமையாளர் நியமனம்

0

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் இலங்கை புகையிரத சேவைக்கு புதிய பொது முகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார என்பவரே புதிய பொது முகாமையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை தீர்மானம்
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னேவினால் கையொப்பமிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று எச்.எம்.கே.டபிள்யூ. பண்டாரவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் பண்டாரவை புதிய பொது முகாமையாளராக கடமைகளைப் பொறுப்பேற்குமாறும் பின்னர் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பண்டாரவை இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளராக நியமிப்பதற்கான அமைச்சரவை தீர்மானம் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.