;
Athirady Tamil News

அம்பானிக்கு கொலை மிரட்டல் கடிதம்: குடும்பத்தையே அலறவிட்ட அந்த நபர் யார்?

0

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை இருக்கும் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானி
ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான இவர் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவர் எனலாம்.

முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு $92 பில்லியன் ஆகும்.

உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார். இவருக்கும் தற்போது ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை மிரட்டல் கடிதம்
“எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால் உன்னை கொன்று விடுவோம். இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளார்கள்.

அம்பானியின் மும்பை இல்லமான ஆண்டிலியாவில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள், கொலை மிரட்டல் கடிதம் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவமானது அக்டோபர் 27 அன்று ஷதாப் கான் என்ற நபரால் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புகார் அளித்த நிலையில், மும்பையின் காம்தேவி காவல்துறை, அடையாளம் தெரியாத நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 387 மற்றும் 506 (2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுப் போலவே இதற்கு முன்னரே முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இது போன்ற கொலை மிரட்டல் சம்பவங்கள் முகேஷ் அம்பானிக்கு புதிதான ஒரு விடயம் இல்லை. இது அடிக்கடி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.