;
Athirady Tamil News

இந்த உலகம் தன் மவுனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும் : ஹம்ஸா யூசஃப் கேள்வி

0

இந்த உலகம் தன் மவுனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்? என்று ஸ்கொட்லாந்து பிரதமர் ஹம்ஸா யூசஃப் கேள்வியெழுப்பியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் முரண்பாடுகள் தொட்பில் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 22-வது நாளை எட்டியுள்ளது.

குண்டு வீச்சு தாக்குதல்
இந்த தாக்குதலால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போரில் பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“காசா மிக மோசமான குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.