;
Athirady Tamil News

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

0

இலங்கையை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளுடன் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் / நாரா நிறுவனம் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், “ஷி யான் 6” என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி நாட்டுக்கு வந்தபோது, ​​சோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாத நிலையில், பின்னர் வெளிவிவகார அமைச்சினால் சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் போது, நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் கடற்பரப்பின் மேற்குப் பகுதியில் குறித்த கப்பலுடன் சோதனைகளை மேற்கொள்வதற்கு நாரா நிறுவனம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை
மேலும், இது தொடர்பான விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதோடு, இரண்டு கடற்படை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.