;
Athirady Tamil News

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் : பரிசோதகரால் தவிர்க்கப்பட்ட ஆபத்து

0

தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது.

எனினும் அப்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தெமோதர நிலையத்தை அடையவிருந்த நிலையில் ரயில் பரிசோதகரின் அவதானிப்பு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறித்த மரம் முறிந்து விழும் நிலையில் இருந்ததைக் கண்ட வீதி பரிசோதகர், உடனடியாக இது தொடர்பில் தெமோதர ரயில் நிலைய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர்க்கப்பட்ட விபத்து
அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட ரயில் நிலைய அதிபர், ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு உரிய சமிக்ஞைகளை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அந்த இடத்தைச் சரிபார்க்க சென்றபோது, ​​குறித்த மரம் முறிந்து விழுந்தது. இதனால், பெரும் விபத்து தவிர்க்க முடிந்தது.

பின்னர், ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், ரயில் கொழும்புக்கு இயக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.