;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியாகிய அறிவிப்பு..!

0

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை நாட்களை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை கூறியுள்ளார்.

அதன்படி, மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை
2023 (2024) உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் ஜனவரி 31 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கான விடுமுறையும் மூன்றாம் தவணை விடுமுறையும் இணைத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.