;
Athirady Tamil News

போருக்கு மத்தியில் காசாவில் இருக்க விரும்பும் இலங்கையர்!

0

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இலங்கையை சேர்ந்த ஒருவர் காசாவிலேயே தங்கியிருக்க தீர்மானித்துள்ளார்.

இதனை வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர் ஒருவர் காசாவிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார்,11 பேர் எல்லையை கடந்து எகிப்திற்குள் வந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதோடு ஆறு இலங்கையர்கள் எகிப்திற்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அவர்கள் இன்னமும் எகிப்திற்குள் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

அதேவேளை ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.