;
Athirady Tamil News

இலங்கையில் நடைமுறைப்படுதப்படவுள்ள புதிய வரி

0

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காக புதிய வரி ஒன்றினை அராசாங்கம் விதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வகையில், இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், அதற்காக அரசாங்க வட்டாரங்கள் யோசனைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரி விதிப்பு முறைமை
அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிலத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பல்வேறு வகைகளின் கீழ் இந்த வரியை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும் இந்த வரியை விதிக்கும் முறை குறித்து தற்போது வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.