;
Athirady Tamil News

மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை நல்வழிப்படுத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு – அமைச்சர் முத்துசாமி!

0

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதோடு, புதிதாக மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்யும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு பரிசுத்தொகை

எனவே அனைத்து வகைகளிலும் மதுப்பழக்கத்தை தடுக்கவும், குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். டாஸ்மார்க் ஊழியர்களுக்கான போனஸ் அனைத்து தர பணியாளர்களுக்கும் கிடைக்கும் போது கிடைக்கும்.

மேலும் பேசிய அவர் “பழிவாங்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் வீட்டில் நடத்தப்படும் சோதனை இருப்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று” ” என்று அவர் பேசியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.