;
Athirady Tamil News

யாழில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

யாழில் வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு யாழ் போதனா வைத்திய சாலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதோடு, வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.